Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k.

external-link copy
2 : 13

اَللّٰهُ الَّذِیْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَیْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؕ— كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ— یُدَبِّرُ الْاَمْرَ یُفَصِّلُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ بِلِقَآءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ ۟

13.2. அல்லாஹ்தான் உயர்ந்த வானங்களை நீங்கள் பார்க்கும் தூண்களின்றி படைத்தான். பின்னர் அவன் தன் கண்ணியத்திற்கேற்ப வடிவமோ உவமையோ கற்பிக்காமல் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அவன் தன் படைப்புகளின் பயன்பாட்டிற்காக சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தித் தந்துள்ளான். சூரியன், சந்திரன் என ஒவ்வொன்றும் அல்லாஹ் அறிந்த குறிப்பிட்ட காலகட்டம் வரை இயங்கிக் கொண்டிருக்கும். வானங்களிலும் பூமியிலும் தான் நாடியபடி அவன் கட்டளையிடுகிறான். நீங்கள் மறுமை நாளில் உங்கள் இறைவனின் சந்திப்பை உறுதியாக நம்பி, நற்செயல்களைக் கொண்டு அதற்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காக தன் வல்லமையை எடுத்துரைக்கக் கூடிய சான்றுகளை அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். info
التفاسير:
Šiame puslapyje pateiktų ajų nauda:
• إثبات قدرة الله سبحانه وتعالى والتعجب من خلقه للسماوات على غير أعمدة تحملها، وهذا مع عظيم خلقتها واتساعها.
1. அல்லாஹ்வின் ஆற்றல் நிரூபிக்கப்பட்டுள்ளது. வானங்கள் மிகப் பிரமாண்டமான படைப்பாக, விசாலமானதாக இருந்த போதும் அவற்றைத் தாங்கும் எவ்வித தூண்களுமின்றி அவன் படைத்தமை பெரும் வியப்புக்குரிதாகும். info

• إثبات قدرة الله وكمال ربوبيته ببرهان الخلق، إذ ينبت النبات الضخم، ويخرجه من البذرة الصغيرة، ثم يسقيه من ماء واحد، ومع هذا تختلف أحجام وألوان ثمراته وطعمها.
2. அல்லாஹ்வின் ஆற்றலையும் அவனது தெய்வீகத் தன்மையின் பரிபூரணத் தன்மையையும் படைத்தல் எனும் அத்தாட்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிறிய விதையிலிருந்து பெரும் தாவரங்களை அவன் வெளிப்படுத்துகிறான். பின்னர் ஒரே தண்ணீரின் மூலம் அவற்றுக்கு நீர்பாய்ச்சுகிறான். அவ்வாறிருந்தும் அதன் பழங்களின் அளவுகளும், நிறங்களும், சுவையும் வெவ்வேறாக உள்ளன. info

• أن إخراج الله تعالى للأشجار الضخمة من البذور الصغيرة، بعد أن كانت معدومة، فيه رد على المشركين في إنكارهم للبعث؛ فإن إعادة جمع أجزاء الرفات المتفرقة والمتحللة في الأرض، وبعثها من جديد، بعد أن كانت موجودة، هو بمنزلة أسهل من إخراج المعدوم من البذرة.
3. இல்லாமையின் பின் சிறு விதையிலிருந்து பெரும் பெரும் மரங்களை அல்லாஹ் உருவாக்கியதில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இணைவைப்பாளர்களுக்கு மறுப்புரை அடங்கியுள்ளது. ஏனெனில் பூமியில் மக்கி மண்ணாகி எஞ்சியுள்ள பகுதிகளை மீண்டும் இணைத்து, இருப்பதைப் புதிதாக உருவாக்குவது இல்லாமலிருந்த ஒன்றை விதையிலிருந்து உருவாக்குவதை விட இலகுவான தரத்தில் உள்ளதாகும். info