Kilniojo Korano reikšmių vertimas - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Vertimų turinys


Reikšmių vertimas Aja (Korano eilutė): (46) Sūra: Sūra An-Nisa
مِنَ الَّذِیْنَ هَادُوْا یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَیَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَیْنَا وَاسْمَعْ غَیْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَیًّا بِاَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِی الدِّیْنِ ؕ— وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَكَانَ خَیْرًا لَّهُمْ وَاَقْوَمَ ۙ— وَلٰكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا ۟
4.46. அல்லாஹ் இறக்கிய அவனது வார்த்தையை மாற்றுபவர்களும் யூதர்களில் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் இறக்கியதற்கு மாறாக விளக்கமளிக்கிறார்கள். தூதர் ஏதேனும் விஷயத்தைக் கொண்டு அவர்களுக்குக் கட்டளையிட்டால், “உமது பேச்சை கேட்டுக் கொண்டோம். ஆனால் உமக்குக் கீழ்ப்படிய மாட்டோம். நாங்கள் சொல்வதைக் கேட்பீராக. உமது பேச்சு கேட்கப்படாது“ என்று கூறி பரிகாசம் செய்கிறார்கள். அவர்கள் எங்களது பேச்சை செவிமடுப்பீராக என்ற கருத்தையுடைய ‘ராயினா’ என்ற வார்த்தையைக் கூறுவது போன்று பாசாங்குசெய்து அதன் மூலம் தூதருக்கு சாபமிட நாடுகிறார்கள். மார்க்கத்தில் குறைகாண நாடுகிறார்கள். இவற்றுக்குப் பதிலாக அவர்கள், “நாங்கள் உமது பேச்சை செவியுற்றோம். நீர் கூறும் விஷயத்திற்குக் கட்டுப்பட்டோம், நீர் கேட்பீராக” என்றும் ‘ராயினா’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘இன்தளிர்னா - நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்காக காத்திருங்கள்’ என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும் நியாயமானதாகவும் அமைந்திருக்கும்.ஏனெனில் அதுவே நபியவர்களுடன் அவர்களது தகுதிக்குப் பொருத்தமான அழகிய நடத்தையாகும். ஆயினும் அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். அவர்களின் நிராகரிப்பினால் தன் அருளிலிருந்து அவர்களைத் தூரமாக்கிவிட்டான். தங்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
Tafsyrai arabų kalba:
Šiame puslapyje pateiktų ajų nauda:
• كفاية الله للمؤمنين ونصره لهم تغنيهم عما سواه.
1. நம்பிக்கையாளர்களுக்கு உதவிசெய்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அது அவனைத்தவிர மற்றவர்களை விட்டும் அவர்களைத் தேவையற்றவர்களாக்கிவிட்டது.

• بيان جرائم اليهود، كتحريفهم كلام الله، وسوء أدبهم مع رسوله صلى الله عليه وسلم، وتحاكمهم إلى غير شرعه سبحانه.
2. அல்லாஹ்வின் வேதத்தை திரித்தல், அல்லாஹ்வின் தூதருடன் மோசமான முறையில் நடந்துகொண்டமை, அல்லாஹ்வின் சட்டத்தை விட்டுவிட்டு ஏனையோரிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றமை போன்ற யூதர்களின் பல குற்றங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. .

• بيان خطر الشرك والكفر، وأنه لا يُغْفر لصاحبه إذا مات عليه، وأما ما دون ذلك فهو تحت مشيئة الله تعالى.
3. இணைவைப்பு, நிராகரிப்பு என்பவற்றின் விபரீதம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இணைவைத்த நிலையிலேயே மரணிப்பவரை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அதைத் தவிர மற்ற பாவங்கள் அவனது நாட்டத்திற்குட்பட்டதாகும்.

 
Reikšmių vertimas Aja (Korano eilutė): (46) Sūra: Sūra An-Nisa
Sūrų turinys Puslapio numeris
 
Kilniojo Korano reikšmių vertimas - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Vertimų turinys

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Uždaryti