Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: അൻകബൂത്ത്   ആയത്ത്:
وَلَمَّا جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی ۙ— قَالُوْۤا اِنَّا مُهْلِكُوْۤا اَهْلِ هٰذِهِ الْقَرْیَةِ ۚ— اِنَّ اَهْلَهَا كَانُوْا ظٰلِمِیْنَ ۟ۚۖ
29.31. நாம் அனுப்பிய தூதர்கள் இப்ராஹீமிடம் வந்து இஸ்ஹாக்கையும் அவருக்குப் பின்னர் யஅகூபையும் கொண்டு நற்செய்தியை கூறினார்கள். பின்னர் அவரிடம், “நிச்சயமாக நாங்கள் லூத்தின் சமூகத்தினர் வசிக்கும் சதூம் என்ற ஊரை அழிக்கப் போகின்றோம். நிச்சயமாக அங்கு வசிப்பவர்கள் தங்களின் மானக்கேடான செயல்களினால் அநியாயக்காரர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قَالَ اِنَّ فِیْهَا لُوْطًا ؕ— قَالُوْا نَحْنُ اَعْلَمُ بِمَنْ فِیْهَا ؗ— لَنُنَجِّیَنَّهٗ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗ— كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
29.32. இப்ராஹீம் வானவர்களிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் அழிக்க நாடும் அந்த ஊரில் லூத்தும் இருக்கின்றாரே! அவர் அநியாயக்காரர் அல்லவே!” வானவர்கள் கூறினார்கள்: “அங்கு வசிப்பவர்களை நாம் நன்கறிவோம். அந்த சமூகத்தின் மீது இறக்கும் வேதனையில் இருந்து அவரையும் அவரது - மனைவியைத் தவிர - குடும்பத்தினரையும் நாம் காப்பாற்றுவோம். அவள் எஞ்சியிருந்து அழிபவர்களில் ஒருத்தியாக இருப்பாள். பின்பு அவர்களோடு அவளையும் அளித்து விடுவோம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَلَمَّاۤ اَنْ جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِیْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالُوْا لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۫— اِنَّا مُنَجُّوْكَ وَاَهْلَكَ اِلَّا امْرَاَتَكَ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
29.33. நாம் லூத்தின் சமூகத்தை அழிக்க அனுப்பிய வானவர்கள் லூத்திடம் வந்தபோது தனது சமூகத்தின் கேடுகெட்ட பழக்கத்தை பயந்து அவர்களின் வருகை அவரை கவலை கொள்ளச் செய்தது. தூதர்கள் அவரிடம் ஆண்களின் உருவில் வந்தார்கள். அவரது சமூகமோ பெண்களைவிடுத்து ஆண்களிடம் தங்களின் காம இச்சையைத் தணித்துக் கொள்பவர்களாக இருந்தார்கள். வானவர்கள் அவரிடம் கூறினார்கள்: “பயப்படாதீர். உங்களின் சமூகம் உமக்கு தீங்கிழைக்க முடியாது. அவர்களை நாம் அழித்துவிடுவோம் என்று நாம் கூறியதற்காக கவலை கொள்ளாதீர். நிச்சயமாக நாம் உம்மையும் உம் மனைவியைத் தவிர உன்குடும்பத்தினரையும் காப்பாற்றி விடுவோம். அவள் எஞ்சியிருந்து அழியக்கூடியவர்களில் ஒருத்தியாக இருப்பாள். பின்பு அவர்களுடன் சேர்த்து அவளையும் அழித்துவிடுவோம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّا مُنْزِلُوْنَ عَلٰۤی اَهْلِ هٰذِهِ الْقَرْیَةِ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
29.34. நிச்சயமாக மானக்கேடான காரியத்தை செய்துகொண்டிருக்கும் இந்த ஊர்வாசிகள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்குவோம். அது சுடப்பட்ட கல்மழையாகும். அது அல்லாஹ்வுக்கு அடிபணியாமல் கெட்ட மானக்கேடான காரியங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகும். அந்த மானக்கேடான காரியம் தங்களின் இச்சையை தணிக்க பெண்களை விடுத்து ஆண்களிடம் வருவதாகும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَلَقَدْ تَّرَكْنَا مِنْهَاۤ اٰیَةً بَیِّنَةً لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
29.35. நாம் அழித்த இந்த ஊரிலே அறிந்துகொள்ளும் மக்களுக்கு தெளிவான ஆதாரத்தை விட்டுவைத்துள்ளோம். ஏனெனில் அவர்கள்தாம் ஆதாரங்களைக் கொண்டு படிப்பினை பெறுவார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ۙ— فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ وَارْجُوا الْیَوْمَ الْاٰخِرَ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
29.36. மத்யனை நோக்கி அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். உங்களுடைய வணக்கத்தின் மூலம் மறுமையில் கூலி வழங்கப்படுவதை எதிர்பாருங்கள். பாவங்கள் புரிந்தும், அவற்றைப் பரப்பியும் பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَكَذَّبُوْهُ فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟ؗ
29.37. அவரது சமூகத்தினர் அவரைப் பொய்ப்பித்தார்கள். ஆகவே பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. தங்களின் வீடுகளில் தங்களின் முகங்களில் மண் ஒட்டுமளவு முகம்குப்புற அசைவின்றி அதிகாலையில் வீழ்ந்து கிடந்தார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَعَادًا وَّثَمُوْدَاۡ وَقَدْ تَّبَیَّنَ لَكُمْ مِّنْ مَّسٰكِنِهِمْ ۫— وَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِیْلِ وَكَانُوْا مُسْتَبْصِرِیْنَ ۟ۙ
29.38. ஹூத் உடைய மக்கள் ஆதையும், ஸாலிஹின் மக்கள் ஸமூதையும் நாம் அழித்துள்ளோம். -மக்காவாசிகளே!- ஹழ்ரமௌத்தின் ஷிஹ்ரிலும், ஹிஜ்ரிலும் உள்ள அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து அவர்கள் அழிக்கப்பட்ட அடையாளங்கள் உங்களுக்குத் தெளிவாகிவிட்டன. பாழடைந்த அவர்களின் வசிப்பிடங்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன. அவர்கள் செய்து கொண்டிருந்த நிராகரிப்பான மற்றும் ஏனைய பாவமான காரியங்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகுபடுத்திக் காட்டினான். அவர்களை நேரான வழியை விட்டும் திருப்பிவிட்டான். அவர்களது தூதர்கள் கற்றுக்கொடுத்தன் மூலம் சத்தியத்தையும் வழிகேட்டையும் நேர்வழியையும் தெளிவாக அறிந்தவர்களாக இருந்தார்கள். ஆயினும் அவர்கள் நேர்வழியைப் பின்பற்றாமல் தங்களின் மனோ இச்சையைப் பின்பற்றுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• قوله تعالى:﴿ وَقَد تَّبَيَّنَ..﴾ تدل على معرفة العرب بمساكنهم وأخبارهم.
1.(தெளிவாகிவிட்டது) என்ற அல்லாஹ்வின் வார்த்தை அரபிகளுக்கு அவர்களது இருப்பிடங்களும் தகவல்களும் தெரியும் என்பதை அறிவிக்கின்றன.

• العلائق البشرية لا تنفع إلا مع الإيمان.
2. ஈமானுடன் அன்றி மனித தொடர்புகளால் எந்தப் பயனும் இல்லை.

• الحرص على أمن الضيوف وسلامتهم من الاعتداء عليهم.
3. மற்றவர்களின் அத்துமீறலில் இருந்து விருந்தினர்களின் பாதுகாப்பு விடயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்.

• منازل المُهْلَكين بالعذاب عبرة للمعتبرين.
4. தண்டனையால் அழிக்கப்பட்டவர்களின் வசிப்பிடங்கள் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினையாகும்.

• العلم بالحق لا ينفع مع اتباع الهوى وإيثاره على الهدى.
5. மன இச்சையைப் பின்பற்றிக் கொண்டும் நேர்வழியை விட அதற்கு முன்னுரிமையளித்துக்கொண்டும் சத்தியத்தை அறிந்திருப்பதில் பயன் இல்லை.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: അൻകബൂത്ത്
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അടക്കുക