Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: സ്സബഅ്   ആയത്ത്:
وَیَوْمَ یَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ یَقُوْلُ لِلْمَلٰٓىِٕكَةِ اَهٰۤؤُلَآءِ اِیَّاكُمْ كَانُوْا یَعْبُدُوْنَ ۟
34.40. -தூதரே!- அவர்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்றுதிரட்டும் நாளை நினைவுகூர்வீராக. பின்பு அந்நாளில் இணைவைப்பாளர்களைக் கண்டிக்கும் விதமாக வானவர்களிடம் கூறுவான்: “இவர்கள்தாம் உலக வாழ்வில் அல்லாஹ்வைவிடுத்து உங்களை வணங்கிக் கொண்டிருந்தார்களா?”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قَالُوْا سُبْحٰنَكَ اَنْتَ وَلِیُّنَا مِنْ دُوْنِهِمْ ۚ— بَلْ كَانُوْا یَعْبُدُوْنَ الْجِنَّ ۚ— اَكْثَرُهُمْ بِهِمْ مُّؤْمِنُوْنَ ۟
34.41. வானவர்கள் கூறுவார்கள்: “நீ பரிசுத்தமானவன். அவர்கள் அல்லாமல் நீயே எங்களின் பாதுகாவலன். எங்களுக்கும் அவர்களுக்குமிடையே எந்த உறவும் இல்லை. மாறாக இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விடுத்து நிச்சயமாக வானவர்களாகத் தோற்றமெடுத்த ஷைத்தான்களையே வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஷைத்தான்களைத்தான் நம்பிக்கைகொண்டிருந்தார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَالْیَوْمَ لَا یَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍ نَّفْعًا وَّلَا ضَرًّا ؕ— وَنَقُوْلُ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّتِیْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ۟
34.42. கேள்வி கேட்கப்படும், ஒன்றுதிரட்டப்படும் நாளில் வணங்கப்பட்ட தெய்வங்கள் உலகில் தங்களை வணங்கியவர்களுக்கு அல்லாஹ்வை விடுத்து பலனிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்திபெற மாட்டா. நிராகரித்து, பாவங்கள் புரிந்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்தவர்களிடம் நாம் கூறுவோம்: “நீங்கள் உலகில் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரக வேதனையை அனுபவியுங்கள்.”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا رَجُلٌ یُّرِیْدُ اَنْ یَّصُدَّكُمْ عَمَّا كَانَ یَعْبُدُ اٰبَآؤُكُمْ ۚ— وَقَالُوْا مَا هٰذَاۤ اِلَّاۤ اِفْكٌ مُّفْتَرًی ؕ— وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۙ— اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
34.43. பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் நாம் தூதர் மீது இறக்கிய சந்தேகமற்ற தெளிவான வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால், இதனைக் கொண்டுவந்த இந்த மனிதர் உங்களின் முன்னோர்கள் இருந்த கொள்கையை விட்டும் உங்களைத் திருப்ப நாடுகின்றார் என்றும் இது அல்லாஹ்வின் பெயரால் புனைந்து கூறப்பட்ட பொய்யான குர்ஆனாகும் என்றும் கூறுகிறார்கள். அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அவனிடமிருந்து அவர்களிடம் வந்த குர்ஆனைக் குறித்து கூறினார்கள்: “இது கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியிலும் தந்தைக்கும் மகனுக்கும் மத்தியிலும் பிரிவினை ஏற்படுத்துவதனால் இது தெளிவான சூனியமாகும்.”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَمَاۤ اٰتَیْنٰهُمْ مِّنْ كُتُبٍ یَّدْرُسُوْنَهَا وَمَاۤ اَرْسَلْنَاۤ اِلَیْهِمْ قَبْلَكَ مِنْ نَّذِیْرٍ ۟ؕ
34.44. நாம் அவர்களுக்கு, நிச்சயமாக இந்த குர்ஆன் பொய்யானதாகும், இதனை முஹம்மது புனைந்துள்ளார் என்று கூறி அதன்பால் வழிகாட்டி படிக்கக்கூடிய எந்த வேதத்தையும் வழங்கவில்லை. -தூதரே!- உமக்கு முன்னால் அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரிக்கும் எந்த தூதரையும் அவர்களிடம் அனுப்பவில்லை.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَكَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۙ— وَمَا بَلَغُوْا مِعْشَارَ مَاۤ اٰتَیْنٰهُمْ فَكَذَّبُوْا رُسُلِیْ ۫— فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟۠
34.45. ஆத், ஸமூத், லூதுடைய சமூகம் போன்ற முந்தைய சமூகங்களும் பொய்ப்பித்தன. உம் சமூகத்திலுள்ள இணைவைப்பாளர்கள் முந்தைய சமூகங்கள் பெற்றிருந்த, செல்வம், அருட்கொடை, பலம், எண்ணிக்கை ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைக்கூட பெறவில்லை. அவர்களில் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களின் தூதரை பொய்ப்பித்தார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட செல்வமோ, பலமோ, எண்ணிக்கையோ அவர்களுக்குப் பலனளிக்கவில்லை. என் வேதனை அவர்களைத் தாக்கியது. -தூதரே!- நான் அவர்களுக்கு அளித்த மறுப்பும் தண்டனையும் எவ்வாறு இருந்தது என்பதைப் பார்ப்பீராக.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قُلْ اِنَّمَاۤ اَعِظُكُمْ بِوَاحِدَةٍ ۚ— اَنْ تَقُوْمُوْا لِلّٰهِ مَثْنٰی وَفُرَادٰی ثُمَّ تَتَفَكَّرُوْا ۫— مَا بِصَاحِبِكُمْ مِّنْ جِنَّةٍ ؕ— اِنْ هُوَ اِلَّا نَذِیْرٌ لَّكُمْ بَیْنَ یَدَیْ عَذَابٍ شَدِیْدٍ ۟
34.46. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவுறுத்துகிறேன். அது நீங்கள் மனஇச்சையை விட்டுவிட்டு இருவர் இருவராகவோ தனித்தனியாகவோ உங்கள் தோழரின் நடத்தையைக் குறித்து, அவரது அறிவு, வாய்மை, நம்பகத் தன்மை ஆகியவற்றைக்குறித்து சிந்தனை செய்யுங்கள். திட்டமாக அவர் பைத்தியக்காரர் அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாகிவிடும். நீங்கள் இணைவைப்பை விட்டும் திருந்தாவிட்டால் உங்களுக்கு முன்னால் இருக்கும் கடுமையான வேதனையைக் குறித்து உங்களை எச்சரிப்பவரே அவர்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قُلْ مَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍ فَهُوَ لَكُمْ ؕ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ ۚ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
34.47. -தூதரே!- உம்மைப் பொய்யர் எனக்கூறும் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் உங்களிடம் கொண்டுவந்த நேர்வழிக்காக உங்களிடம் எந்த கூலியையும் கேட்கவில்லை. அது உங்களுக்குரியதே. எனது கூலி அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். நிச்சயமாக நான் உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன் என்பதற்கும் நீங்கள் செய்யும் செயல்களுக்கும் அவனே சாட்சியாக இருக்கின்றான். அவற்றிற்கான கூலியை அவன் உங்களுக்கு நிறைவாக வழங்கிடுவான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قُلْ اِنَّ رَبِّیْ یَقْذِفُ بِالْحَقِّ ۚ— عَلَّامُ الْغُیُوْبِ ۟
34.48. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் சத்தியத்தை அசத்தியத்தின் மீது சாட்டுகிறான். அது அதனை அழித்துவிடுகிறது. அவன் மறைவானவற்றை நன்கறிந்தவன். வானங்களிலோ, பூமியிலோ எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அடியார்களின் செயற்பாடுகள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• التقليد الأعمى للآباء صارف عن الهداية.
1. முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவது நேர்வழியைவிட்டுத் திருப்பக்கூடியதாகும்.

• التفكُّر مع التجرد من الهوى وسيلة للوصول إلى القرار الصحيح، والفكر الصائب.
2.மனஇச்சையிலிருந்து நீங்கி சிந்தனை செய்வது சரியான தீர்மானம் மற்றும் சரியான சிந்தனைக்கான ஒரு வழியாகும்.

• الداعية إلى الله لا ينتظر الأجر من الناس، وإنما ينتظره من رب الناس.
3. அல்லாஹ்வின்பால் அழைக்கும் அழைப்பாளன் மக்களிடம் கூலியை எதிர்பார்க்கமாட்டான். நிச்சயமாக மனிதர்களின் இறைவனிடமே அதனை எதிர்பார்ப்பான்.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: സ്സബഅ്
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അടക്കുക