വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
76 : 17

وَاِنْ كَادُوْا لَیَسْتَفِزُّوْنَكَ مِنَ الْاَرْضِ لِیُخْرِجُوْكَ مِنْهَا وَاِذًا لَّا یَلْبَثُوْنَ خِلٰفَكَ اِلَّا قَلِیْلًا ۟

(நபியே! உமது) ஊரிலிருந்து அவர்கள் உம்மை வெளியேற்றுவதற்காக அவர்கள் உம்மை தூண்டிவிட முயற்சிக்கின்றனர். அப்போது, அவர்கள் உமக்குப் பின்னால் சொற்ப காலமே தவிர வசித்திருக்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
77 : 17

سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِیْلًا ۟۠

நம் தூதர்களில் உமக்கு முன்பு நாம் அனுப்பியவர்களின் நடைமுறை(ப் படியே இப்போதும் நடக்கும்). நம் நடைமுறையில் மாற்றத்தை நீர் காணமாட்டீர். info
التفاسير:

external-link copy
78 : 17

اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰی غَسَقِ الَّیْلِ وَقُرْاٰنَ الْفَجْرِ ؕ— اِنَّ قُرْاٰنَ الْفَجْرِ كَانَ مَشْهُوْدًا ۟

(நபியே!) சூரியன் சாய்ந்த திலிருந்து இரவின் இருள் வரை உள்ள தொழுகைகளையும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலை நிறுத்துங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகை வானவர்கள் கலந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. info
التفاسير:

external-link copy
79 : 17

وَمِنَ الَّیْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ ۖۗ— عَسٰۤی اَنْ یَّبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا ۟

இரவில் (கொஞ்சம்) உறங்கி எழுந்து உமக்கு (மட்டும்) உபரியா(ன கடமையா)க அதை (குர்ஆனை) ஓதி தொழுவீராக! மகாம் மஹ்மூது எனும் புகழப்பட்ட இடத்தில் உம்மை உம் இறைவன் எழுப்புவான். info
التفاسير:

external-link copy
80 : 17

وَقُلْ رَّبِّ اَدْخِلْنِیْ مُدْخَلَ صِدْقٍ وَّاَخْرِجْنِیْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّیْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِیْرًا ۟

“என் இறைவா! என்னை நல்ல நுழைவிடத்தில் (மதீனாவில்) நுழையவை. நல்ல வெளியேறுமிடத்தில் (மக்காவில் இருந்து) என்னை வெளியேற்று! உதவக்கூடிய ஓர் ஆதாரத்தை உன்னிடமிருந்து எனக்கு ஏற்படுத்து!” என்று (நபியே!) கூறுவீராக! info
التفاسير:

external-link copy
81 : 17

وَقُلْ جَآءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ؕ— اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا ۟

“சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியதாகவே இருக்கின்றது” என்றும் கூறுவீராக! info
التفاسير:

external-link copy
82 : 17

وَنُنَزِّلُ مِنَ الْقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۙ— وَلَا یَزِیْدُ الظّٰلِمِیْنَ اِلَّا خَسَارًا ۟

நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் எது இருக்குமோ அதையே குர்ஆனில் நாம் இறக்குகிறோம். அநியாயக்காரர்களுக்கு இது நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தாது. info
التفاسير:

external-link copy
83 : 17

وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَی الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ ۚ— وَاِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ یَـُٔوْسًا ۟

நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு நன்றி செலுத்தாமல்) புறக்கணிக்கின்றான்; (பாவங்கள் செய்து நம்மை விட்டு) தூரமாகி விடுகிறான். அவனை ஒரு தீங்கு அணுகினால் நிராசையுடையவனாக ஆகிவிடுகின்றான். info
التفاسير:

external-link copy
84 : 17

قُلْ كُلٌّ یَّعْمَلُ عَلٰی شَاكِلَتِهٖ ؕ— فَرَبُّكُمْ اَعْلَمُ بِمَنْ هُوَ اَهْدٰی سَبِیْلًا ۟۠

(நபியே!) கூறுவீராக! ஒவ்வொருவரும் தனது பாதையில் (தனது போக்கில்) அமல் செய்கிறார். ஆகவே, உங்களது இறைவன்தான் பாதையால் மிக நேர்வழி பெற்றவர் யார் என்பதை மிக அறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
85 : 17

وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الرُّوْحِ ؕ— قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّیْ وَمَاۤ اُوْتِیْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِیْلًا ۟

(நபியே!) ரூஹ் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “ரூஹ் என் இறைவனின் கட்டளையினால் ஏற்பட்டது. கல்வியில் சொற்பமே தவிர நீங்கள் (அதிகம்) கொடுக்கப்படவில்லை.” என்று கூறுவீராக! info
التفاسير:

external-link copy
86 : 17

وَلَىِٕنْ شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهٖ عَلَیْنَا وَكِیْلًا ۟ۙ

(நபியே!) நாம் நாடினால், உமக்கு வஹ்யி அறிவித்தவற்றை நிச்சயம் போக்கி விடுவோம். பிறகு, நமக்கு எதிராக அதற்கு (உதவும்) ஒரு பொறுப்பாளரை (-பாதுகாவலரை) உமக்கு காண மாட்டீர். info
التفاسير: