पवित्र कुरअानको अर्थको अनुवाद - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

رقم الصفحة:close

external-link copy
52 : 15

اِذْ دَخَلُوْا عَلَیْهِ فَقَالُوْا سَلٰمًا ؕ— قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ ۟

அவர்கள் அவரிடம் நுழைந்த சமயத்தை நினைவு கூருங்கள். “ஸலாம்” (ஈடேற்றம் உண்டாகுக!) என்று (முகமன்) கூறினர். அவர் Òநிச்சயமாக நாங்கள் உங்களைப் பற்றி பயமுள்ளவர்கள்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
53 : 15

قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِیْمٍ ۟

“பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு அறிஞரான ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்” என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
54 : 15

قَالَ اَبَشَّرْتُمُوْنِیْ عَلٰۤی اَنْ مَّسَّنِیَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ ۟

“எனக்கு முதுமை ஏற்பட்டிருக்க எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதைக் கொண்டு நற்செய்தி கூறுகிறீர்கள்?” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
55 : 15

قَالُوْا بَشَّرْنٰكَ بِالْحَقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِیْنَ ۟

நாங்கள் உமக்கு உண்மை(யான செய்தி)யைக் கொண்டு(தான்) நற்செய்தி கூறினோம். ஆகவே, அவநம்பிக்கையாளர்களில் ஆகிவிடாதீர் என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
56 : 15

قَالَ وَمَنْ یَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ ۟

“வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவனின் அருளிலிருந்து யார் அவநம்பிக்கை கொள்வார்?” என்று (இப்ராஹீம்) கூறினார். info
التفاسير:

external-link copy
57 : 15

قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟

“(வானவத்) தூதர்களே! உங்கள் காரியமென்ன?” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
58 : 15

قَالُوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمٍ مُّجْرِمِیْنَ ۟ۙ

“குற்றம் புரிகின்ற மக்களின் பக்கம் நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டோம்” என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
59 : 15

اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ— اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ

(எனினும்,) லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர. (மற்றவர்களை அழிப்போம்.) நிச்சயமாக நாங்கள் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பவர்கள்தான். info
التفاسير:

external-link copy
60 : 15

اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ— اِنَّهَا لَمِنَ الْغٰبِرِیْنَ ۟۠

(எனினும்,) அவருடைய மனைவியைத் தவிர. நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன் தண்டனையில்) தங்கிவிடுபவர்களில் உள்ளவள்தான் என்று முடிவு செய்தோம் (என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்). info
التفاسير:

external-link copy
61 : 15

فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ ١لْمُرْسَلُوْنَ ۟ۙ

(வானவத்) தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபோது, info
التفاسير:

external-link copy
62 : 15

قَالَ اِنَّكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟

“நிச்சயமாக நீங்கள் அறியப்படாத கூட்டமாகும்!” என்று அவர் கூறினார். info
التفاسير:

external-link copy
63 : 15

قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِیْهِ یَمْتَرُوْنَ ۟

“மாறாக! (உம் மக்களாகிய) இவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்ததை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்” என்று கூறினர். info
التفاسير:

external-link copy
64 : 15

وَاَتَیْنٰكَ بِالْحَقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟

உம்மிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக நாம் உண்மையாளர்கள்தான். info
التفاسير:

external-link copy
65 : 15

فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّیْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا یَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَیْثُ تُؤْمَرُوْنَ ۟

ஆகவே, (இன்றைய) இரவின் ஒரு பகுதியில் உம் குடும்பத்தினருடன் செல்வீராக; மேலும் அவர்களுக்குப் பின்னால் (அவர்களை) பின்பற்றுவீராக; உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; இன்னும் நீங்கள் ஏவப்பட்ட இடத்திற்கு (இதே நிலையில்) செல்லுங்கள். info
التفاسير:

external-link copy
66 : 15

وَقَضَیْنَاۤ اِلَیْهِ ذٰلِكَ الْاَمْرَ اَنَّ دَابِرَ هٰۤؤُلَآءِ مَقْطُوْعٌ مُّصْبِحِیْنَ ۟

நிச்சயமாக இவர்களின் வேர், (இவர்கள் பொழுது) விடிந்தவர்களாக இருக்கும்போது துண்டிக்கப்படும் என்று அக்காரியத்தை அவருக்கு முடிவு செய்தோம். info
التفاسير:

external-link copy
67 : 15

وَجَآءَ اَهْلُ الْمَدِیْنَةِ یَسْتَبْشِرُوْنَ ۟

அந்நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தவர்களாக வந்தார்கள். info
التفاسير:

external-link copy
68 : 15

قَالَ اِنَّ هٰۤؤُلَآءِ ضَیْفِیْ فَلَا تَفْضَحُوْنِ ۟ۙ

“நிச்சயமாக இவர்கள் என் விருந்தினர். ஆகவே, என்னை அவமானப்படுத்தாதீர்கள்.” info
التفاسير:

external-link copy
69 : 15

وَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ ۟

“அல்லாஹ்வை அஞ்சுங்கள்; என்னை இழிவு படுத்தாதீர்கள்” info
التفاسير:

external-link copy
70 : 15

قَالُوْۤا اَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعٰلَمِیْنَ ۟

“உலக மக்களை (விருந்தளிக்க அழைப்பதை) விட்டு நாம் உம்மைத் தடுக்கவில்லையா?” என்று கூறினர். info
التفاسير: