पवित्र कुरअानको अर्थको अनुवाद - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

رقم الصفحة:close

external-link copy
99 : 20

كَذٰلِكَ نَقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآءِ مَا قَدْ سَبَقَ ۚ— وَقَدْ اٰتَیْنٰكَ مِنْ لَّدُنَّا ذِكْرًا ۟ۖۚ

இவ்வாறு, முன் சென்றுவிட்டவர்களின் செய்திகளை உமக்கு விவரிக்கிறோம். திட்டமாக உமக்கு நம் புறத்திலிருந்து நல்லுரையை (நல்லுபதேசத்தை) கொடுத்தோம். info
التفاسير:

external-link copy
100 : 20

مَنْ اَعْرَضَ عَنْهُ فَاِنَّهٗ یَحْمِلُ یَوْمَ الْقِیٰمَةِ وِزْرًا ۟ۙ

யார் அதை புறக்கணித்தாரோ நிச்சயமாக அவர் மறுமை நாளில் பாவத்தை சுமப்பார். info
التفاسير:

external-link copy
101 : 20

خٰلِدِیْنَ فِیْهِ ؕ— وَسَآءَ لَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ حِمْلًا ۟ۙ

அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். மறுமை நாளில் அது (-பாவம்) சுமையால் மிகக் கெட்டது. info
التفاسير:

external-link copy
102 : 20

یَّوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ وَنَحْشُرُ الْمُجْرِمِیْنَ یَوْمَىِٕذٍ زُرْقًا ۟

சூரில் (எக்காளத்தில்) ஊதப்படும் நாளில் (அந்த பாவச்சுமை மிகக் கெட்டது). அந்நாளில் பாவிகளை கண்கள் நீலமானவர்களாக நாம் எழுப்புவோம். info
التفاسير:

external-link copy
103 : 20

یَّتَخَافَتُوْنَ بَیْنَهُمْ اِنْ لَّبِثْتُمْ اِلَّا عَشْرًا ۟

அவர்கள் தங்களுக்கு மத்தியில் மெதுவாகப் பேசிக் கொள்வார்கள், “நீங்கள் பத்து நாட்களே தவிர தங்கவில்லை” என்று. info
التفاسير:

external-link copy
104 : 20

نَحْنُ اَعْلَمُ بِمَا یَقُوْلُوْنَ اِذْ یَقُوْلُ اَمْثَلُهُمْ طَرِیْقَةً اِنْ لَّبِثْتُمْ اِلَّا یَوْمًا ۟۠

அவர்களில் அறிவால் முழுமையானவர், “நீங்கள் (உலகத்தில்) ஒரு நாளே தவிர தங்கவில்லை” என்று கூறும்போது அவர்கள் பேசுவதை நாம் நன்கறிந்தவர்கள் ஆவோம். info
التفاسير:

external-link copy
105 : 20

وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ یَنْسِفُهَا رَبِّیْ نَسْفًا ۟ۙ

அவர்கள் மலைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக! “என் இறைவன் அவற்றை தூள் தூளாக ஆக்கி விடுவான்.” info
التفاسير:

external-link copy
106 : 20

فَیَذَرُهَا قَاعًا صَفْصَفًا ۟ۙ

இன்னும் அவற்றை சமமான பூமியாக விட்டுவிடுவான். info
التفاسير:

external-link copy
107 : 20

لَّا تَرٰی فِیْهَا عِوَجًا وَّلَاۤ اَمْتًا ۟ؕ

அவற்றில் நீர் கோணலையும் வளைவையும் (மேட்டையும் பள்ளத்தையும்) காணமாட்டீர். info
التفاسير:

external-link copy
108 : 20

یَوْمَىِٕذٍ یَّتَّبِعُوْنَ الدَّاعِیَ لَا عِوَجَ لَهٗ ۚ— وَخَشَعَتِ الْاَصْوَاتُ لِلرَّحْمٰنِ فَلَا تَسْمَعُ اِلَّا هَمْسًا ۟

அந்நாளில் அவர்கள் அழைப்பாளரை பின் தொடர்வார்கள். அவரை விட்டு (அவர்கள் எங்கும்) திரும்ப முடியாது. சப்தங்கள் எல்லாம் ரஹ்மானுக்கு முன் அமைதியாகிவிடும். நீர் (அங்கு பாதங்களின்) மென்மையான சப்தத்தைத் தவிர (வேறு சப்தத்தை) செவிமடுக்க மாட்டீர். info
التفاسير:

external-link copy
109 : 20

یَوْمَىِٕذٍ لَّا تَنْفَعُ الشَّفَاعَةُ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَرَضِیَ لَهٗ قَوْلًا ۟

அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதித்து அவருடைய பேச்சை அவன் விரும்பினானோ அவரைத் தவிர (வேறு யாருடைய) பரிந்துரையும் பலனளிக்காது. info
التفاسير:

external-link copy
110 : 20

یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا یُحِیْطُوْنَ بِهٖ عِلْمًا ۟

அவன் அவர்களுக்கு முன் உள்ளதையும் (மறுமையில் நடக்கப் போவதையும்) அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (உலகில் அவர்கள் செய்த செயல்களையும்) அவன் நன்கறிவான். அவர்கள் அவனை அறிவால் சூழ்ந்தறிய மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
111 : 20

وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَیِّ الْقَیُّوْمِ ؕ— وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا ۟

என்றும் உயிருள்ளவன் என்றும் நிலையானவனுக்கு முகங்கள் பணிந்து விட்டன. அநியாயத்தை (-இணைவைப்பதை) சுமந்தவன் (-இணைவைத்தவன்) திட்டமாக நஷ்டமடைந்தான். info
التفاسير:

external-link copy
112 : 20

وَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا یَخٰفُ ظُلْمًا وَّلَا هَضْمًا ۟

யார், அவரோ நம்பிக்கையாளராக இருக்க, நன்மைகளை செய்வாரோ அவர் அநியாயத்தையும் (பிறர் குற்றங்கள் தன்மீது சுமத்தப்படுவதையும்) (தனது) நன்மைகள் குறைக்கப்படுவதையும் பயப்பட மாட்டார். info
التفاسير:

external-link copy
113 : 20

وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِیًّا وَّصَرَّفْنَا فِیْهِ مِنَ الْوَعِیْدِ لَعَلَّهُمْ یَتَّقُوْنَ اَوْ یُحْدِثُ لَهُمْ ذِكْرًا ۟

இவ்வாறே, இதை (இந்த வேதத்தை) அரபி மொழியிலான குர்ஆனாக இறக்கினோம். அதில் எச்சரிக்கையை பலவாறாக நாம் விவரித்து இருக்கிறோம். அவர்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக அல்லது அது, (இந்த குர்ஆன்) அவர்களுக்கு ஓர் அறிவுரையை ஏற்படுத்துவதற்காக (நாம் இதை இறக்கினோம்). info
التفاسير: