ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ


ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߖߎߙߎ߲ߖߎߙߎ߲ߠߌ߲ߠߊ ߟߎ߬ ߝߐߘߊ   ߟߝߊߙߌ ߘߏ߫:

ஸூரா அத்தாரியாத்

ߝߐߘߊ ߟߊߢߌߣߌ߲ ߘߏ߫:
تعريف الجن والإنس بأن مصدر رزقهم من الله وحده؛ ليخلصوا له العبادة.
அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும் என்பதற்காக ஜின்களுக்கும் மனிதர்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தின் மூலாதாரம் அல்லாஹ்தான் என்பதை அறிமுகம் செய்தல்

وَالذّٰرِیٰتِ ذَرْوًا ۟ۙ
51.1. புழுதியைக் கிளப்பக்கூடிய காற்றுகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَالْحٰمِلٰتِ وِقْرًا ۟ۙ
51.2. ஏராளமான நீரை சுமந்து செல்லும் மேகங்களைக் கொண்டும்
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَالْجٰرِیٰتِ یُسْرًا ۟ۙ
51.3. கடலில் இலகுவாகச் செல்லும் கப்பல்களைக் கொண்டும்
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۟ۙ
51.4. அல்லாஹ் பங்கிடுமாறு ஏவிய அடியார்களின் விவகாரங்களைப் பங்கிடும் வானவர்களைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌ ۟ۙ
51.5. நிச்சயமாக உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்த விசாரணையும் கூலி வழங்கப்படுவதும் சந்தேகமற்ற உண்மையாகும்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَّاِنَّ الدِّیْنَ لَوَاقِعٌ ۟ؕ
51.6. நிச்சயமாக அடியார்களை விசாரனை செய்வது சந்தேகம் இல்லாமல் மறுமை நாளில் நிகழ்ந்தே தீரும்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• الاعتبار بوقائع التاريخ من شأن ذوي القلوب الواعية.
1. வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு படிப்பினை பெறுவது விழிப்பான உள்ளமுடையோரின் பண்பாகும்.

• خلق الله الكون في ستة أيام لِحِكَم يعلمها الله، لعل منها بيان سُنَّة التدرج.
2. தான் அறிந்த நோக்கங்களுக்காக அல்லாஹ் பிரபஞ்சத்தை ஆறு நாட்களில் படைத்தான். படிப்படியாக செய்யும் வழிமுறைளைத் தெளிவுபடுத்துவதும் அவற்றில் ஒன்றாக இருக்கலாம்.

• سوء أدب اليهود في وصفهم الله تعالى بالتعب بعد خلقه السماوات والأرض، وهذا كفر بالله.
3. வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தபிறகு அல்லாஹ் களைப்படைந்துவிட்டான் என்று வர்ணித்த யூதர்களின் ஒழுக்கமின்மை. இது அல்லாஹ்வை நிராகரிப்பதாகும்.

وَالسَّمَآءِ ذَاتِ الْحُبُكِ ۟ۙ
51.7. வழிகளையுடைய அழகிய படைப்பான வானத்தைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اِنَّكُمْ لَفِیْ قَوْلٍ مُّخْتَلِفٍ ۟ۙ
51.8. -மக்காவாசிகளே!- நிச்சயமாக நீங்கள் முரண்பட்ட தடுமாற்றம்மிக்க வார்த்தைகளைக் கூறுகிறீர்கள். சில சமயங்களில் “குர்ஆன் ஒரு சூனியமாகும்” என்றும் சில சமயங்களில் “அது ஒரு கவிதை” என்றும் சில சமயங்களில் “முஹம்மது ஒரு சூனியக்காரர்” என்றும் சில சமயங்களில் “அவர் ஒரு கவிஞர்” என்றும் கூறுகிறீர்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
یُّؤْفَكُ عَنْهُ مَنْ اُفِكَ ۟ؕ
51.9. குர்ஆனின்மீதும் தூதரின்மீதும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் என்று நிச்சயமாக அல்லாஹ் முன்னரே அறிந்தவர்கள்தான் நம்பிக்கைகொள்வதை விட்டும் திருப்பிவிடப்படுகிறான். எனவே அவன் நேர்வழிபெற வாய்ப்புக் கிடைக்காது.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
قُتِلَ الْخَرّٰصُوْنَ ۟ۙ
51.10. குர்ஆனைக் குறித்தும் தங்களின் நபியைக் குறித்தும் இவ்வாறு கூறிய பொய்யர்கள் சபிக்கப்பட்டு விட்டார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
الَّذِیْنَ هُمْ فِیْ غَمْرَةٍ سَاهُوْنَ ۟ۙ
51.11. அவர்கள் அறியாமையில் மறுமையின் வீட்டை விட்டும் அலட்சியமாக இருக்கின்றார்கள். அதனைப் பொருட்படுத்துவதில்லை.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
یَسْـَٔلُوْنَ اَیَّانَ یَوْمُ الدِّیْنِ ۟ؕ
51.12. கூலி வழங்கப்படும் நாள் எப்போது? என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்காக செயற்படுவதில்லை.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
یَوْمَ هُمْ عَلَی النَّارِ یُفْتَنُوْنَ ۟
51.13. அல்லாஹ் அவர்களின் கேள்விக்குப் பதிலளிக்கிறான். அது அவர்கள் நரகத்தில் வேதனை செய்யப்படும் நாளாகும்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ذُوْقُوْا فِتْنَتَكُمْ ؕ— هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟
51.14. அவர்களிடம் கூறப்படும்: “உங்களின் வேதனையைச் சுவையுங்கள். இதைக் குறித்துதான் எச்சரிக்கப்படும்போது பரிகாசம் செய்யும் விதத்தில் விரைவாகக் கொண்டுவரும்படி வேண்டிக்கொண்டிருந்தீர்கள்.”
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
51.15. நிச்சயமாக தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் மறுமை நாளில் தோட்டங்களிலும் ஓடக்கூடிய நீருற்றுகளிலும் இருப்பார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اٰخِذِیْنَ مَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ؕ— اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِیْنَ ۟ؕ
51.16. அவர்கள் அங்கு தங்கள் இறைவன் வழங்கிய கண்ணியமான கூலியைப் பெற்றவர்களாக இருப்பார்கள். நிச்சயமாக அவர்கள் கண்ணியமான இந்த கூலி வழங்கப்படுவதற்கு முன்னர் உலகில் நன்மை செய்வோராக இருந்தார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
كَانُوْا قَلِیْلًا مِّنَ الَّیْلِ مَا یَهْجَعُوْنَ ۟
51.17. அவர்கள் இரவில் தொழக்கூடியவர்களாவும் குறைவான நேரமே தூங்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَبِالْاَسْحَارِ هُمْ یَسْتَغْفِرُوْنَ ۟
51.18. (ஸஹர்) பின்னிரவு நேரங்களில் தங்களின் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரக்கூடியவர்களாக இருந்தார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَفِیْۤ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّآىِٕلِ وَالْمَحْرُوْمِ ۟
51.19. அவர்களின் செல்வங்களில் யாசிக்கக்கூடியவர்களுக்கும் ஏதேனும் ஒரு காரணத்தினால் வாழ்வாதாரமில்லாவிட்டாலும் வெட்கத்தின் காரணமாக யாசிக்காதவர்களுக்கும் உரிமை இருந்தது.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَفِی الْاَرْضِ اٰیٰتٌ لِّلْمُوْقِنِیْنَ ۟ۙ
51.20. பூமியிலும் அல்லாஹ் அதில் ஏற்படுத்தியுள்ள மலைகள், கடல்கள், ஆறுகள், மரங்கள், செடிகொடிகள், விலங்குகள் ஆகிவற்றில் நிச்சயமாக அல்லாஹ்வே படைத்து வடிவம் கொடுப்பவன் என்பதை உறுதியாக நம்பக்கூடிய மக்களுக்கு அவனுடைய வல்லமையை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَفِیْۤ اَنْفُسِكُمْ ؕ— اَفَلَا تُبْصِرُوْنَ ۟
51.21. -மனிதர்களே!- உங்களுக்குள்ளும் அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் படிப்பினை பெறும்பொருட்டு பார்க்கமாட்டீர்களா?
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَفِی السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ ۟
51.22. வானத்தில்தான் உங்களின் உலக, மத வாழ்வாதாரம் இருக்கின்றது. உங்களுக்கு வாக்களிக்கப்படும் நன்மையும் தீமையும் அங்குதான் இருக்கின்றன.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَوَرَبِّ السَّمَآءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَقٌّ مِّثْلَ مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ ۟۠
51.23. வானம் மற்றும் பூமியின் இறைவனின்மீது ஆணையாக, நிச்சயமாக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது நிகழ்ந்தே தீரும். நீங்கள் பேசும் போது உங்கள் பேச்சில் எவ்வாறு சந்தேகம் இல்லையோ அது போன்றே அதிலும் எத்தகைய சந்தேகமும் இல்லை.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
هَلْ اَتٰىكَ حَدِیْثُ ضَیْفِ اِبْرٰهِیْمَ الْمُكْرَمِیْنَ ۟ۘ
51.24. -தூதரே!- இப்ராஹீம் கௌரவப்படுத்திய வானவர்களான அவரின் விருந்தாளிகளின் செய்தி உம்மிடம் வந்ததா?
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اِذْ دَخَلُوْا عَلَیْهِ فَقَالُوْا سَلٰمًا ؕ— قَالَ سَلٰمٌ ۚ— قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟
51.25. அவர்கள் அவரிடம் வந்தபோது (சலாம்) சாந்தி உண்டாகட்டும் என்று கூறினார்கள். அதற்கு இப்ராஹீமும் “சாந்தி உண்டாகட்டும்” என்று பதில் கூறினார். “இவர்கள் நாம் அறியாத மக்களாக இருக்கிறார்களே” என்று அவர் தம் மனதிற்குள் கூறிக் கொண்டார்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَرَاغَ اِلٰۤی اَهْلِهٖ فَجَآءَ بِعِجْلٍ سَمِیْنٍ ۟ۙ
51.26. அவர் தம் குடும்பத்தாரிடம் இரகசியமாகச் சென்று வந்துள்ளவர்களை மனிதர்கள் என்று நினைத்து ஒரு கொழுத்த முழுமையான காளைக்கன்றைக் கொண்டு வந்தார்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَقَرَّبَهٗۤ اِلَیْهِمْ قَالَ اَلَا تَاْكُلُوْنَ ۟ؗ
51.27. அதனை அவர்களுக்கு அருகில் வைத்து “உங்களுக்கு வழங்கப்பட்ட உணவை உண்ணமாட்டீர்களா” என்று மென்மையாக உரையாடினார்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً ؕ— قَالُوْا لَا تَخَفْ ؕ— وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِیْمٍ ۟
51.28. அவர்கள் உண்ணாததால் அவர் மனதில் அவர்களால் ஏற்பட்ட அச்சத்தை மறைத்துக்கொண்டார். அதனை உணர்ந்துகொண்ட அவர்கள் அவரை அமைதிப்படுத்தியவர்களாகக் கூறினார்கள்: “பயப்படாதீர். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்களாவோம்.” அவருக்கு அதிக கல்வியறிவு கொண்ட ஒரு மகன் பிறப்பான் என்று நற்செய்தி கூறினார்கள். இஸ்ஹாக் (அலை) அவர்களே அவ்வாறு நற்செய்தி கூறப்பட்டவர்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِیْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِیْمٌ ۟
51.29. அவருடைய மனைவி இந்த நற்செய்தியை செவியுற்றவுடன் மகிழ்ச்சியால் சப்தமிட்டாள். தம் முகத்தில் அடித்துக் கொண்டாள். வியப்புடன் கூறினாள்: “அடிப்படையில் மலடியான ஒரு கிழவி குழந்தை பெறுவாளா?!”
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
قَالُوْا كَذٰلِكِ ۙ— قَالَ رَبُّكِ ؕ— اِنَّهٗ هُوَ الْحَكِیْمُ الْعَلِیْمُ ۟
51.30. வானவர்கள் அவளிடம் கூறினார்கள்: “உம் இறைவன் கூறியதைத்தான் நாம் உமக்கு அறிவிக்கின்றோம். அவன் கூறியதை யாரும் மறுக்க முடியாது. நிச்சயமாக அவன் தன் படைப்பிலும், நிர்ணயத்திலும் ஞானம் மிக்கவன். தன் படைப்புகளைக் குறித்தும் அவர்களுக்கு அவசியமானது குறித்தும் நன்கறிந்தவன்.”
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• إحسان العمل وإخلاصه لله سبب لدخول الجنة.
1. ஒரு செயலை நல்ல முறையில் செய்வதும் அதனை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்காகவே செய்வதும் சுவனத்தின் நுழைவதற்குக் காரணமாகும்.

• فضل قيام الليل وأنه من أفضل القربات.
2. இரவுத் தொழுகையின் சிறப்பு. நிச்சயமாக அது மிகச் சிறந்த வணக்கங்களில் உள்ளதாகும்.

• من آداب الضيافة: رد التحية بأحسن منها، وتحضير المائدة خفية، والاستعداد للضيوف قبل نزولهم، وعدم استثناء شيء من المائدة، والإشراف على تحضيرها، والإسراع بها، وتقريبها للضيوف، وخطابهم برفق.
3. விருந்தின் ஒழுக்கங்களில் சில: அழகிய முறையில் முகமனுக்குப் பதிலளித்தல், உணவுத் தட்டை மறைமுகமாகக் கொண்டுவருதல், விருந்தினர்கள் வருவதற்கு முன்னரே அவர்களுக்காக தயார்படுத்தி வைத்தல், உணவு தட்டிலிருந்து எதையும் தவிர்க்காமல் இருத்தல், அதனைத் தயாரிப்பதை கண்காணித்தல், அதனை விரைவுபடுத்தல், அதனை அவர்களுக்கு அருகில் வைத்தல், அவர்களுடன் மென்மையாக உரையாடுதல்.

قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
51.31. இப்ராஹீம் வானவர்களிடம் கேட்டார்: “உங்களின் விஷயம் என்ன? நீங்கள் என்ன நாடுகிறீர்கள்?”
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
قَالُوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمٍ مُّجْرِمِیْنَ ۟ۙ
51.32. வானவர்கள் அவரிடம் பதிலாக கூறினார்கள்: “மானக்கேடான பாவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அநியாயக்கார சமூகத்தின்பால் நிச்சயமாக அல்லாஹ் எங்களை அனுப்பியுள்ளான்,
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
لِنُرْسِلَ عَلَیْهِمْ حِجَارَةً مِّنْ طِیْنٍ ۟ۙ
51.33. சுடப்பட்ட களிமண் கற்களை அவர்கள் மீது பொழிவதற்காக.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِیْنَ ۟
51.34. -இப்ராஹீமே!- அவை உம் இறைவனிடம் அடையாளமிடப்பட்டதாகும். நிராகரிப்பிலும் பாவங்கள் புரிவதிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறி செயல்படக்கூடியவர்களின் மீது அவை பொழியப்படும்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِیْهَا مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
51.35. குற்றவாளிகளுக்கு ஏற்படும் தண்டனை லூதின் சமூகத்தினர் வாழும் அந்த ஊரிலிருந்த நம்பிக்கையாளர்களை பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர்களை வெளியேற்றி விட்டோம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَمَا وَجَدْنَا فِیْهَا غَیْرَ بَیْتٍ مِّنَ الْمُسْلِمِیْنَ ۟ۚ
51.36. நாம் அவர்களின் இந்த ஊரிலே லூத்தின் குடும்பத்தினரைத் தவிர வேறு எந்தவொரு முஸ்லிம்களின் வீட்டையும் காணவில்லை.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَتَرَكْنَا فِیْهَاۤ اٰیَةً لِّلَّذِیْنَ یَخَافُوْنَ الْعَذَابَ الْاَلِیْمَ ۟ؕ
51.37. லூத்தின் சமூகத்தினர் வாழ்ந்த அந்த ஊரில் அவர்களுக்கு வேதனை ஏற்பட்டதற்கான அடையாளங்களை விட்டுவைத்தோம். அவர்களுக்கு ஏற்பட்ட வேதனைமிக்க தண்டனையை அஞ்சுபவன் படிப்பினை பெற்று, அதிலிருந்து தப்புவதற்காக அவர்களின் செயலைப்போன்றதை அவன் செய்யக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்தோம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَفِیْ مُوْسٰۤی اِذْ اَرْسَلْنٰهُ اِلٰی فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟
51.38. நாம் ஃபிர்அவ்னை நோக்கி தெளிவான ஆதாரங்களோடும் அற்புதங்களோடும் அனுப்பிய மூஸாவிலும் வேதனைமிக்க தண்டனையை அஞ்சக்கூடியவர்களுக்குச் சான்று இருக்கின்றது, .
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَتَوَلّٰی بِرُكْنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوْ مَجْنُوْنٌ ۟
51.39. ஃபிர்அவ்ன் தனது பலத்தையும் படையையும் நம்பி சத்தியத்தைப் புறக்கணித்தான். மூஸாவைக்குறித்து அவன் கூறினான்: “அவர் மக்களுக்கு சூனியம் செய்யும் சூனியக்காரர் அல்லது புரியாத விஷயங்களைப் பேசும் பைத்தியக்காரர்.”
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِی الْیَمِّ وَهُوَ مُلِیْمٌ ۟ؕ
51.40. நாம் அவனையும் அவனது படையினர் அனைவரையும் பிடித்து கடலில் வீசியெறிந்து விட்டோம். அவர்கள் மூழ்கி அழிந்தார்கள். ஃபிர்அவ்ன் பொய்ப்பிப்பு, நிச்சயமாக தானே இறைவன் என்று வாதாடி பழிப்பிற்குரியவற்றை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டிருந்தான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَفِیْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَیْهِمُ الرِّیْحَ الْعَقِیْمَ ۟ۚ
51.41. ஹுத் உடைய சமூகமான ’ஆதி’டமும் வேதனைமிக்க தண்டனையை அஞ்சக்கூடியவர்களுக்கு சான்று இருக்கின்றது. நாம் அவர்களின்மீது மழையைச் சுமக்காத, மரங்களை சூல் கொள்ளச் செய்யாத, எவ்வித நன்மைகளுமற்ற காற்றை அனுப்பினோம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
مَا تَذَرُ مِنْ شَیْءٍ اَتَتْ عَلَیْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِیْمِ ۟ؕ
51.42. அது கடந்து சென்ற உயிர்கள், செல்வங்கள் மற்றும் இன்னபிற அனைத்தையும் அடியோடு அழித்தது. அனைத்தையும் தூள்தூளாக்கிவிட்டது.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَفِیْ ثَمُوْدَ اِذْ قِیْلَ لَهُمْ تَمَتَّعُوْا حَتّٰی حِیْنٍ ۟
51.43. ஸாலிஹின் சமூகமான ஸமூதிடமும் வேதனைமிக்க தண்டனையை அஞ்சக்கூடியவர்களுக்கு சான்று இருக்கின்றது. அவர்களிடம் கூறப்பட்டது: “உங்களுக்கான தவணை நிறைவடைவதற்கு முன்னரே உங்களின் வாழ்வை அனுபவித்துக் கொள்ளுங்கள்.”
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ وَهُمْ یَنْظُرُوْنَ ۟
51.44. அவர்கள் தம் இறைவனின் கட்டளையை விட்டும் பெருமைகொண்டு, நம்பிக்கைகொள்ளுதல், வழிப்படுதல் ஆகியவற்றுக்கெதிராக கர்வம் கொண்டார்கள். எனவே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போதே பேரிடி அவர்களைத் தாக்கியது. ஏனெனில் அவர்கள் வேதனை இறங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَمَا اسْتَطَاعُوْا مِنْ قِیَامٍ وَّمَا كَانُوْا مُنْتَصِرِیْنَ ۟ۙ
51.45. தங்கள் மீது இறங்கிய வேதனையை அவர்களால் தடுக்க முடியவில்லை. அவர்களிடம் அதனைத் தடுத்துக்கொள்வதற்கான எந்த பலமும் இல்லை.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟۠
51.46. நாம் மேற்கூறப்பட்டவர்களுக்கு முன்னால் நூஹின் சமூகத்தாரை மூழ்கடித்து அழித்துள்ளோம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாதவர்களாக இருந்தார்கள். எனவே அவனது தண்டனைக்கு உரியவர்களாகி விட்டார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَالسَّمَآءَ بَنَیْنٰهَا بِاَیْىدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ ۟
51.47. நாம் வானத்தை அமைத்துள்ளோம். அதன் அமைப்பை வல்லமையால் செம்மையாக்கினோம். நிச்சயமாக நாம் அதன் ஓரங்களை விசாலமாக்கிக் கொண்டே செல்கின்றோம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ ۟
51.48. நாம் பூமியை வசிக்கக்கூடியவர்களுக்கு ஏற்றவாறு விரிப்பைப் போன்று அமைத்துள்ளோம். அவர்கள் வசிப்பதற்கு ஏற்றவாறு விரித்து அமைப்பதில் நாமே மிகச்சிறந்தவர்களாவோம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَمِنْ كُلِّ شَیْءٍ خَلَقْنَا زَوْجَیْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
51.49. நீங்கள் ஒவ்வொன்றையும் இணைஇணையாக படைத்த அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் உணர்ந்துகொள்ளும்பொருட்டு ஒவ்வொன்றையும் நாம் இணைஇணையாகப் படைத்துள்ளோம். உதாரணமாக, ஆண்- பெண், வானம்- பூமி, நீர்- நிலம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَفِرُّوْۤا اِلَی اللّٰهِ ؕ— اِنِّیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۚ
51.50. அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு மாறுசெய்யாமல் இருப்பதன் மூலம் அவனின் தண்டனையிலிருந்து அவனுடைய நன்மையின் பக்கமும் விரையுங்கள். -மக்களே!- நிச்சயமாக நான் உங்களை அவனுடைய வேதனையைக் குறித்து தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடியவன்தான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَلَا تَجْعَلُوْا مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ؕ— اِنِّیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
51.51. அல்லாஹ்வுடன் அவனை விடுத்து நீங்கள் வணங்கும் வேறு இறைவனை ஏற்படுத்தி விடாதீர்கள். நிச்சயமாக நான் உங்களை அதிலிருந்து தெளிவாக எச்சரிப்பவன்தான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• الإيمان أعلى درجة من الإسلام.
1. இஸ்லாத்தைவிட ஈமான் மிக உயர்ந்தது.

• إهلاك الله للأمم المكذبة درس للناس جميعًا.
2. பொய்ப்பித்த சமூகங்களை அல்லாஹ் அழித்தது மனிதர்கள் அனைவருக்குமான பாடமாகும்.

• الخوف من الله يقتضي الفرار إليه سبحانه بالعمل الصالح، وليس الفرار منه.
3. அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் நற்செயல்கள் புரிந்து அவன் பக்கம் விரைந்தோடத் தூண்டுகிறது, அவனைவிட்டும் விரண்டோட அல்ல.

كَذٰلِكَ مَاۤ اَتَی الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ ۟۫
51.52. இந்த மக்காவாசிகள் பொய்ப்பித்ததைப்போன்றே முந்தைய சமூக மக்களும் பொய்ப்பித்தார்கள். அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் தூதர்கள் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “நீர் சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர், என்று.”
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اَتَوَاصَوْا بِهٖ ۚ— بَلْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ
51.53. நிராகரிப்பாளர்களில் முந்தையவர்களும் பிந்தையவர்களும் தூதர்களை பொய்ப்பிக்க வேண்டும் என்று ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துள்ளார்களா என்ன? இல்லை. மாறாக அவர்களின் வரம்புமீறலே அவர்களை இதில் ஒன்றிணைத்தது.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَتَوَلَّ عَنْهُمْ فَمَاۤ اَنْتَ بِمَلُوْمٍ ۟ؗ
51.54. -தூதரே!- இந்த பொய்ப்பிப்பாளர்களை நீர் புறக்கணித்து விடுவீராக. நீர் பழிப்பிற்குரியவர் அல்ல. நீர் அவர்களின்பால் எதைக்கொண்டு அனுப்பப்பட்டீரோ அதனை எடுத்துரைத்துவிட்டீர்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰی تَنْفَعُ الْمُؤْمِنِیْنَ ۟
51.55. அவர்களை நீர் புறக்கணிப்பது, அவர்களுக்கு அறிவுரை கூறுவதிலிருந்தும் நினைவூட்டுவதிலிருந்தும் உம்மைத் தடுத்துவிட வேண்டாம். அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக, நினைவூட்டுவீராக. நிச்சயமாக நினைவூட்டல் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்குப் பயனளிக்கும்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِیَعْبُدُوْنِ ۟
51.56. நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை மட்டுமே வணங்குவதற்காகவே படைத்துள்ளேன். எனக்கு இணைகளை ஏற்படுத்துவதற்காக நான் அவர்களைப் படைக்கவில்லை.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
مَاۤ اُرِیْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَاۤ اُرِیْدُ اَنْ یُّطْعِمُوْنِ ۟
51.57. நான் அவர்களிடம் வாழ்வாதாரத்தையோ, அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் என்றோ விரும்பவில்லை.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِیْنُ ۟
51.58. நிச்சயமாக அல்லாஹ்வே தன் அடியார்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடியவன். அனைவரும் அவன் அளிக்கும் வாழ்வாதாரத்தின் பக்கம் தேவையுடையவர்களாவர். அவன் உறுதியான வல்லமை மிக்கவன். எதுவும் அவனை மிகைத்துவிட முடியாது. மனிதர்கள், ஜின்கள் அனைவரும் அவனுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذَنُوْبًا مِّثْلَ ذَنُوْبِ اَصْحٰبِهِمْ فَلَا یَسْتَعْجِلُوْنِ ۟
51.59. -தூதரே!- நிச்சயமாக உம்மை பொய்ப்பித்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் அவர்களின் முந்தைய தோழர்களின் பங்கை போன்று வேதனையின் ஒரு பகுதியைப் பெறுவார்கள். அதற்கு குறிப்பிட்ட தவணை இருக்கின்றது. அது வருவதற்கு முன்னரே விரைவாக என்னிடம் அதனை அவர்கள் கோரவேண்டாம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنْ یَّوْمِهِمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟۠
51.60. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரை பொய்ப்பித்தவர்களுக்கு மறுமை நாளில் இழப்பும் அழிவுமே ஏற்படும். அதுதான் அவர்கள்மீது வேதனை இறக்கப்படுவதற்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• الكفر ملة واحدة وإن اختلفت وسائله وتنوع أهله ومكانه وزمانه.
1. நிராகரிப்பு, நிராகரிப்பாளர்கள் பலவாறாக பிரிந்து கிடந்தாலும், அதன் வழிவகைகள், இடங்கள், காலகட்டங்கள் மாறுபட்டாலும் அவை ஒரே மார்க்கம்தான்.

• شهادة الله لرسوله صلى الله عليه وسلم بتبليغ الرسالة.
2. நபியவர்கள் தூதுப்பணியை நிறைவேற்றி விட்டார்கள் என்பதற்கான அல்லாஹ்வே சாட்சி.

• الحكمة من خلق الجن والإنس تحقيق عبادة الله بكل مظاهرها.
3. அல்லாஹ் மனிதர்கள் மற்றும் ஜின்களைப் படைத்த நோக்கம் வணக்க வழிபாட்டின் எல்லா வெளிப்பாடுகளோடும் அவனை வணங்க வேண்டும் என்பதற்காகத்தான்.

• سوف تتغير أحوال الكون يوم القيامة.
4. பிரபஞ்சத்தின் நிலைமைகள் மறுமை நாளில் மாறிவிடும்.

 
ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߖߎߙߎ߲ߖߎߙߎ߲ߠߌ߲ߠߊ ߟߎ߬ ߝߐߘߊ
ߝߐߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ ߞߐߜߍ ߝߙߍߕߍ
 
ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

ߘߊߕߎ߲߯ߠߌ߲