Check out the new design

ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ * - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ


ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߣߛߌ߬ߡߛߏ   ߟߝߊߙߌ ߘߏ߫:
حٰفِظُوْا عَلَی الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰی ۗ— وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِیْنَ ۟
2.238. அல்லாஹ் கட்டளையிட்டபடி தொழுகைகளை முழுமையாக பேணிக்கொள்ளுங்கள். நடுத்தொழுகையான அசர் தொழுகையையும் பேணிக்கொள்ளுங்கள். உங்களுடைய தொழுகையில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களாக, அவனை அஞ்சியவர்களாக நில்லுங்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَاِنْ خِفْتُمْ فَرِجَالًا اَوْ رُكْبَانًا ۚ— فَاِذَاۤ اَمِنْتُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَمَا عَلَّمَكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ۟
2.239. எதிரிகள் மற்றும் பிற விஷயங்களால் உங்களுக்கு அச்சமேற்பட்டு உங்களால் தொழுகையை முழுமையாக நிறைவேற்ற இயலவில்லையெனில் நடந்தவாறு அல்லது ஒட்டகம், குதிரை போன்றவற்றில் பயணித்தவாறு அல்லது இயலுமான ஏதாவது முறையில் தொழுதுகொள்ளுங்கள். அச்சம் நீங்கிவிட்டால் தொழுகை உட்பட அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்தவாறு அவனை நினைவுகூருங்கள். நீங்கள் அறியாத ஒளியையும் நேர்வழியையும் கற்றுத்தந்ததற்காகவும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَالَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَیَذَرُوْنَ اَزْوَاجًا ۖۚ— وَّصِیَّةً لِّاَزْوَاجِهِمْ مَّتَاعًا اِلَی الْحَوْلِ غَیْرَ اِخْرَاجٍ ۚ— فَاِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْ مَا فَعَلْنَ فِیْۤ اَنْفُسِهِنَّ مِنْ مَّعْرُوْفٍ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
2.240. உங்களில் மனைவியரை விட்டுவிட்டு மரணமடைபவர்கள், ஒருவருடம்வரை முழுமையாக அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற செலவீனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மரணசாசனம் செய்யட்டும். அந்தப் பெண்ணின் துக்கத்தைத் துடைக்குமுகமாகவும் இறந்தவரின் உயிலை நிறைவேற்றுவதற்காகவும் அவரது வாரிசுகள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றக்கூடாது. அந்தப் பெண்கள் தாமாகவே வெளியேறி தங்களை அலங்கரித்துக் கொண்டால் அவர்கள்மீதோ உங்கள்மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. அவன் ஏற்படுத்திய விதிகளில், திட்டமிடலில், சட்டமியற்றுவதில் ஞானம்மிக்கவன். (குர்ஆன் விரிவுரையாளர்களில் பெரும்பாலோர் இந்த வசனத்தில் கூறப்பட்ட கட்டளை மேற்குறிப்பிட்ட 234வது வசனத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றே கருதுகிறார்கள்)
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَلِلْمُطَلَّقٰتِ مَتَاعٌ بِالْمَعْرُوْفِ ؕ— حَقًّا عَلَی الْمُتَّقِیْنَ ۟
2.241. விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு அவர்களது துவண்டுபோயிருக்கும் உள்ளங்களை தேற்றும்விதமாக உணவு, உடை போன்ற செலவீனங்கள் கணவர்களின் வசதிக்கேற்ப நல்லமுறையில் வழங்கப்பட வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்து அவனை அஞ்சுபவர்கள் மீது இது கடமையாகும்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟۠
2.242. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் விளங்கி அவற்றின் அடிப்படையில் செயல்படும் பொருட்டும், இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மைகளைப் பெறும் பொருட்டும் இதுபோன்ற அவனுடைய சட்டங்களையும் வரம்புகளையும் உள்ளடக்கிய தெளிவான வசனங்களைக்கொண்டு அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ خَرَجُوْا مِنْ دِیَارِهِمْ وَهُمْ اُلُوْفٌ حَذَرَ الْمَوْتِ ۪— فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوْتُوْا ۫— ثُمَّ اَحْیَاهُمْ ؕ— اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
2.243. தூதரே! தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியவர்களின் செய்தி உமக்குத் தெரியாதா? கொள்ளை நோயினாலோ பிற விஷயங்களினாலோ மரணத்திற்கு அஞ்சிய அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். அவர்கள் இஸ்ராயீன் மக்களைச் சேர்ந்த ஒரு பிரிவினர். அல்லாஹ் அவர்களிடம்: "மரணமடையுங்கள்" என்று கூறினான். எனவே அவர்கள் மரணமடைந்தார்கள். பின்னர் அதிகாரம் அனைத்தும் தன் கைவசமே உள்ளது என்பதையும் அவர்கள் தங்களுக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்திபெற மாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்துவதற்காக அவன் அவர்களை உயிர்த்தெழச் செய்தான். நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது பேரருள் புரிபவன். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதில்லை.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَقَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
2.244. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! அவனுடைய மார்க்கத்திற்கு உதவிசெய்வதற்காக, அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அவனுடைய எதிரிகளுடன் போரிடுங்கள். அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் பேசக்கூடியதை அவன் செவியேற்பவன்; உங்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவன்; அவற்றிற்கேற்பவே அவன் உங்களுக்குக் கூலி வழங்குகிறான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
مَنْ ذَا الَّذِیْ یُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَیُضٰعِفَهٗ لَهٗۤ اَضْعَافًا كَثِیْرَةً ؕ— وَاللّٰهُ یَقْبِضُ وَیَبْصُۜطُ ۪— وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
2.245. தன் செல்வத்தை நல்லெண்ணத்துடனும், தூய உள்ளத்துடனும் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்து கடனளிப்பவரின் செயலைச் செய்பவர் யார்? அல்லாஹ் அவருக்குப் பன்மடங்காக்கித் தருவான். வாழ்வாதாரத்திலும் ஆரோக்கியத்திலும், இன்னபிற விஷயங்களிலும் அல்லாஹ்வே நெருக்கடியையும் விசாலத்தையும் ஏற்படுத்துகிறான். மறுமையில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கிடுவான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• الحث على المحافظة على الصلاة وأدائها تامة الأركان والشروط، فإن شق عليه صلَّى على ما تيسر له من الحال.
1. தொழுகையை அதன் நிபந்தனைகளுடன் முழுமையாக நிறைவேற்றும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நிறைவேற்றுவது கடினமாகிவிட்டால் இயன்றமுறையில் தொழுதுகொள்ள வேண்டும்.

• رحمة الله تعالى بعباده ظاهرة، فقد بين لهم آياته أتم بيان للإفادة منها.
2. அல்லாஹ் தன் அடியார்களுக்குப் புரிந்த அருட்கொடை வெளிப்படையானது. அவர்கள் தன் வசனங்களிலிருந்து பயனடைவதற்காக அவற்றை முழுமையாகத் தெளிவுபடுத்தியுள்ளான்.

• أن الله تعالى قد يبتلي بعض عباده فيضيِّق عليهم الرزق، ويبتلي آخرين بسعة الرزق، وله في ذلك الحكمة البالغة.
3. அல்லாஹ் தன் அடியார்கள் சிலருக்கு தாராளமாக வழங்கி சோதிக்கிறான்; சிலருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி சோதிக்கிறான். இதன் முழுமையான நோக்கத்தை அல்லாஹ்வே அறிவான்.

 
ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߣߛߌ߬ߡߛߏ
ߝߐߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ ߞߐߜߍ ߝߙߍߕߍ
 
ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ

ߡߍ߲ ߝߘߊߣߍ߲߫ ߞߎ߬ߙߊ߬ߣߊ ߞߘߐߦߌߘߊ ߕߌߙߌ߲ߠߌ߲ ߝߊ߲ߓߊ ߟߊ߫

ߘߊߕߎ߲߯ߠߌ߲