Check out the new design

د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه * - د ژباړو فهرست (لړلیک)


د معناګانو ژباړه سورت: کهف   آیت:
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِیْنَ یَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِیِّ یُرِیْدُوْنَ وَجْهَهٗ وَلَا تَعْدُ عَیْنٰكَ عَنْهُمْ ۚ— تُرِیْدُ زِیْنَةَ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— وَلَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰىهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا ۟
18.28. தங்கள் இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் வணக்கம் மற்றும் பிரார்தனையின் மூலம் அவனை அழைத்துக் கொண்டிருப்போரின் சகவாசத்தைக் கடைபிடிப்பீராக. செல்வமும் பதவியும் உடையவர்களின் சகவாசத்தை நாடி உம் பார்வையை அவர்களை விட்டும் திருப்பிவிடாதீர். உள்ளத்தில் முத்திரையிடுவதன் மூலம் எவருடைய உள்ளத்தை நம்முடைய நினைவை விட்டும் அலட்சியம் செய்யக்கூடியதாக நாம் மாற்றிவிட்டவர்களுக்கு நீர் கட்டுப்படாதீர். அவர்கள் உம் சபையைவிட்டு ஏழைகளை விரட்டுமாறு உம்மை ஏவுகிறார்கள். தங்கள் இறைவனுக்குக் கட்டுப்படுவதைக்காட்டிலும் தங்களின் மன இச்சையைப் பின்பற்றுவதற்கே அவர்கள் முன்னுரிமை வழங்கினார்கள். அவர்கள் செயல்கள் அனைத்தும் வீணானவையாக ஆகிவிட்டன.
عربي تفسیرونه:
وَقُلِ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۫— فَمَنْ شَآءَ فَلْیُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْیَكْفُرْ ۚ— اِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِیْنَ نَارًا اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا ؕ— وَاِنْ یَّسْتَغِیْثُوْا یُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ یَشْوِی الْوُجُوْهَ ؕ— بِئْسَ الشَّرَابُ ؕ— وَسَآءَتْ مُرْتَفَقًا ۟
18.29. -தூதரே!- தமது உள்ளங்களிலுள்ள மறதியினால் அல்லாஹ்வின் நினைவை விட்டும் அலட்சியமாக இருக்கும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “நான் உங்களிடம் கொண்டுவந்ததே சத்தியமாகும். அது நான் என் புறத்திலிருந்து கொண்டு வந்ததல்ல. மாறாக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்ததாகும். நம்பிக்கையாளர்களை நான் விரட்டவேண்டும் என்ற உங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. உங்களில் யார் இந்த சத்தியத்தின் மீது நம்பிக்கைகொள்ள விரும்புகிறாரோ அவர் நம்பிக்கைகொள்ளட்டும். அவர் அதற்கான கூலியைப் பெற்று மகிழ்ச்சியடைவார். உங்களில் யார் இதனை நிராகரிக்க விரும்புகிறாரோ அவர் நிராகரித்துக் கொள்ளட்டும். அவர் தனக்காகக் காத்திருக்கும் வேதனையை அனுபவிப்பார். நிராகரிப்பை தேர்ந்தெடுத்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக்கொண்ட அநியாயக்காரர்களுக்கு நாம் மிகப் பெரும் நெருப்பை தயார்படுத்தி வைத்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். அவர்கள் அங்கிருந்து தப்பமுடியாது. அவர்கள் அனுபவிக்கும் கடுமையான தாகத்தினால் அவர்கள் தண்ணீர் வேண்டினால் கடுமையான வெப்பத்தினால் முகங்களை பொசுக்கக்கூடிய கொதிக்கும் எண்ணெய்யைப் போன்ற சூடான நீர் அவர்களுக்கு வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் நீர் மிகவும் மோசமான நீராகும். அது தாகத்தை தீர்க்காது. மாறாக அதிகப்படுத்தும். அவர்களின் தோல்களைப் பொசுக்கும் நெருப்பையும் அணைக்காது. அவர்கள் தங்கும் நரகம் மிகவும் மோசமானதாகும்.
عربي تفسیرونه:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اِنَّا لَا نُضِیْعُ اَجْرَ مَنْ اَحْسَنَ عَمَلًا ۟ۚ
18.30. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்து அமல்களை சீர்செய்தவர்களுக்கு பெரும் கூலி இருக்கின்றது. நிச்சயமாக நற்செயல் புரிந்தோரின் கூலியை நாம் ஒருபோதும் வீணாக்கிவிட மாட்டோம். மாறாக அவர்களுக்கான கூலியை குறைவின்றி நிறைவாக வழங்கிடுவோம்.
عربي تفسیرونه:
اُولٰٓىِٕكَ لَهُمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ یُحَلَّوْنَ فِیْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّیَلْبَسُوْنَ ثِیَابًا خُضْرًا مِّنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَّكِـِٕیْنَ فِیْهَا عَلَی الْاَرَآىِٕكِ ؕ— نِعْمَ الثَّوَابُ ؕ— وَحَسُنَتْ مُرْتَفَقًا ۟۠
18.31. ஈமான் மற்றும் நற்செயல் செய்து தங்களை அலங்கரித்தவர்களுக்கு சுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவற்றின் தங்குமிடங்களுக்குக் கீழே சுவையான நீரினையுடைய ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் தங்க வலையல்களால் அலங்கரிக்கப்படுவார்கள். மெல்லிய, கனமான பச்சைநிற பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். அழகிய விரிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்திருப்பார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் கூலி எத்துணை அழகானது! அவர்கள் தங்கியிருக்கும் சுவனம் எத்துணை அழகானது!
عربي تفسیرونه:
وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا رَّجُلَیْنِ جَعَلْنَا لِاَحَدِهِمَا جَنَّتَیْنِ مِنْ اَعْنَابٍ وَّحَفَفْنٰهُمَا بِنَخْلٍ وَّجَعَلْنَا بَیْنَهُمَا زَرْعًا ۟ؕ
18.32. -தூதரே!- அவர்களுக்கு இரு மனிதர்களின் உதாரணத்தை எடுத்துக் கூறுவீராக: ஒருவர் நம்பிக்கையாளராகவும் மற்றொருவர் நிராகரிப்பாளராகவும் இருந்தார். நாம் நிராகரிப்பாளனுக்கு இரு திராட்சை தோட்டங்களை ஏற்படுத்தியிருந்தோம். இரு தோட்டங்களையும் சுற்றி பேரீச்சை மரங்கள் காணப்பட்டது. அவ்விரண்டிலும் காலியாக உள்ள பகுதிகளில் பயிர்களையும் முளைக்கச் செய்திருந்தோம்.
عربي تفسیرونه:
كِلْتَا الْجَنَّتَیْنِ اٰتَتْ اُكُلَهَا وَلَمْ تَظْلِمْ مِّنْهُ شَیْـًٔا ۙ— وَّفَجَّرْنَا خِلٰلَهُمَا نَهَرًا ۟ۙ
18.33. ஒவ்வொரு தோட்டமும் பேரீச்சை, திராட்சை, பயிர்கள் என எவ்வித குறையும் வைக்காமல் தன் விளைச்சல்களை நிறைவாகத் தந்துகொண்டிந்தன. அவையிரண்டிற்குமிடையில் இலகுவாக நீர் பாய்ச்சுவதற்காக நாம் ஒரு நதியையும் ஓடச் செய்தோம்.
عربي تفسیرونه:
وَّكَانَ لَهٗ ثَمَرٌ ۚ— فَقَالَ لِصَاحِبِهٖ وَهُوَ یُحَاوِرُهٗۤ اَنَا اَكْثَرُ مِنْكَ مَالًا وَّاَعَزُّ نَفَرًا ۟
18.34. இரு தோட்டங்களின் உரிமையானுக்கு வேறு சொத்துக்களும், பழங்களும் இருந்தன. அவன் நம்பிக்கைகொண்ட தன் தோழனிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போது அவரிலே பாதிப்பை ஏற்படுத்து முகமாக பெருமையுடன் கூறினான்: “நான் உன்னைவிட பெரும் செல்வம் படைத்தவன், கண்ணியமானவன், ஆள்பலம் மிக்கவன்.”
عربي تفسیرونه:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• فضيلة صحبة الأخيار، ومجاهدة النفس على صحبتهم ومخالطتهم وإن كانوا فقراء؛ فإن في صحبتهم من الفوائد ما لا يُحْصَى.
1. நல்லவர்களுடன் சகவாசம் வைத்தல், அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்திருப்பதற்கு உள்ளத்தைப் பழக்கப்படுத்தல் என்பவை சிறப்புக்குரிதாகும். ஏனெனில் அவர்களின் தொடர்பால் ஏற்படும் பலன்கள் எண்ண முடியாதவை.

• كثرة الذكر مع حضور القلب سبب للبركة في الأعمار والأوقات.
2. பயபக்தியுடன் அதிகமாக திக்ரில் ஈடுபடுவது ஆயுளிலும் நேரங்களிலும் அபிவிருத்தி உண்டாவதற்கான ஒரு வழியாகும்.

• قاعدتا الثواب وأساس النجاة: الإيمان مع العمل الصالح؛ لأن الله رتب عليهما الثواب في الدنيا والآخرة.
3. ஈமானும் நற்செயல்களுமே வெற்றியின் அடிப்படையாகும். கூலியின் இரு அடித்தளங்களாகும். நிச்சயமாக அவ்விரண்டின் மீதே இவ்வுலகிலும் மறுவுலகிலும் கூலியை அல்லாஹ் வழங்குகிறான்.

 
د معناګانو ژباړه سورت: کهف
د سورتونو فهرست (لړلیک) د مخ نمبر
 
د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه - د ژباړو فهرست (لړلیک)

د مرکز تفسیر للدراسات القرآنیة لخوا خپور شوی.

بندول