د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
117 : 9

لَقَدْ تَّابَ اللّٰهُ عَلَی النَّبِیِّ وَالْمُهٰجِرِیْنَ وَالْاَنْصَارِ الَّذِیْنَ اتَّبَعُوْهُ فِیْ سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ یَزِیْغُ قُلُوْبُ فَرِیْقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَیْهِمْ ؕ— اِنَّهٗ بِهِمْ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟ۙ

9.117. நயவஞ்சகர்களுக்கு தபூக் போரை விட்டுப் பின்தங்க அனுமதியளித்த தூதர் முஹம்மதை அல்லாஹ் மன்னித்து விட்டான். பின்தங்காத முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் அவன் மன்னித்துவிட்டான். அவர்கள் தூதரை விட்டுப் பின்தங்காமல் கடுமையான வெப்ப காலத்திலும், குறைந்த வசதியுடனும் எதிரிகள் பலமாக இருந்த போதும், அவர்களில் ஒரு பிரிவினர் போரை விட்டுவிட நாடிய பின்னரும் தபூக் போரில் அவரைப் பின்தொடர்ந்தார்கள். பின்னர் உறுதியாக நிலைத்து நிற்பதற்கும் போருக்குப் புறப்படுவதற்கும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி புரிந்தான். மேலும் அவன் அவர்களை மன்னித்து விட்டான். அவர்களின் விஷயத்தில் அவன் பரிவுடையவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கோரும் பாக்கியத்தை அளித்ததும் அதனை ஏற்றுக்கொண்டதும் அவனது அருளின் வெளிப்பாடாகும். info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• بطلان الاحتجاج على جواز الاستغفار للمشركين بفعل إبراهيم عليه السلام.
1.இணைவைப்பாளர்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவதற்கு இப்ராஹீம் அலை அவர்களது செயலை ஆதாரமாகக் கொள்வது தவறாகும். info

• أن الذنوب والمعاصي هي سبب المصائب والخذلان وعدم التوفيق.
2. துன்பங்களுக்கும், பலவீனத்துக்கும், உதவியில்லாமல் செல்வதற்கும், பாவங்களும் தீமைகளுமே காரணமாக அமைகின்றன. info

• أن الله هو مالك الملك، وهو ولينا، ولا ولي ولا نصير لنا من دونه.
3. அல்லாஹ்தான் ஆட்சியின் சொந்தக்காரன். அவனே நமது பாதுகாவலனும் ஆவான். அவனைத் தவிர வேறு எந்த பொறுப்பாளனோ உதவியாளனோ நமக்கு இல்லை. info

• بيان فضل أصحاب النبي صلى الله عليه وسلم على سائر الناس.
4. ஏனைய மனிதர்களை விட நபித் தோழர்கள் சிறந்தவர்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info