Check out the new design

د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف * - د ژباړو فهرست (لړلیک)

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

د معناګانو ژباړه سورت: آل عمران   آیت:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களின் செல்வங்களும், அவர்களின் சந்ததிகளும் அல்லாஹ்விடமிருந்து (தண்டனையில்) எதையும் அவர்களை விட்டும் தடுக்காது. இன்னும், அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
عربي تفسیرونه:
مَثَلُ مَا یُنْفِقُوْنَ فِیْ هٰذِهِ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَثَلِ رِیْحٍ فِیْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ؕ— وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக அவர்கள்) தர்மம் செய்வதின் உதாரணம், அதில் கடுமையான குளிருள்ள ஒரு காற்றின் உதாரணத்தைப் போலாகும். தங்களுக்குத் தாமே அநீதியிழைத்த கூட்டத்தாரின் விளை நிலத்தை (அக்காற்று) அடைந்து, அதை அழித்தது. அல்லாஹ் அவர்களுக்கு அநீதியிழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதியிழைக்கிறார்கள்.
عربي تفسیرونه:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا یَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ— وَدُّوْا مَا عَنِتُّمْ ۚ— قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ ۖۚ— وَمَا تُخْفِیْ صُدُوْرُهُمْ اَكْبَرُ ؕ— قَدْ بَیَّنَّا لَكُمُ الْاٰیٰتِ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ۟
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாத மற்றவர்களில் உற்ற நண்பர்களை (உங்களுக்கு) ஏற்படுத்தாதீர்கள். அவர்கள் உங்களுக்கு தீங்கிழைப்பதில் குறைவு செய்யமாட்டார்கள்; நீங்கள் துன்பப்படுவதை (-சிரமப்படுவதை) அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்களிலிருந்து பகைமை வெளிப்பட்டுவிட்டது. இன்னும், (பகைமையில்) அவர்களுடைய நெஞ்சங்கள் மறைப்பதோ (தீமையால் அதைவிட) மிகப் பெரியது. திட்டமாக அத்தாட்சிகளை உங்களுக்கு விவரித்தோம், நீங்கள் புரிபவர்களாக இருந்தால்.
عربي تفسیرونه:
هٰۤاَنْتُمْ اُولَآءِ تُحِبُّوْنَهُمْ وَلَا یُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖ ۚ— وَاِذَا لَقُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا ۖۗۚ— وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَیْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَیْظِ ؕ— قُلْ مُوْتُوْا بِغَیْظِكُمْ ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
நீங்கள் இவர்கள் மீது அன்பு காட்டுகிறீர்கள்! ஆனால், அவர்கள் உங்கள் மீது அன்பு காட்டுவதில்லை. எல்லா வேதங்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை.) அவர்கள் உங்களைச் சந்தித்தால், “நம்பிக்கை கொண்டோம்” எனக் கூறுகிறார்கள். அவர்கள் (உங்களை விட்டு) தனித்தால் உங்கள் மீது (உள்ள) கோபத்தினால் (தங்கள்) விரல் நுனிகளை கடிக்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “உங்கள் கோபத்தில் நீங்கள் செத்து மடியுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.’’
عربي تفسیرونه:
اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ ؗ— وَاِنْ تُصِبْكُمْ سَیِّئَةٌ یَّفْرَحُوْا بِهَا ؕ— وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا یَضُرُّكُمْ كَیْدُهُمْ شَیْـًٔا ؕ— اِنَّ اللّٰهَ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟۠
உங்களை ஒரு நல்லது அடைந்தால் (அது) அவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இன்னும், உங்களை ஒரு தீங்கு அடைந்தால் அதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். நீங்கள் பொறுமையாக இருந்தால், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு சிறிதளவும் தீங்கிழைக்காது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்து (அறிந்து)ள்ளான்.
عربي تفسیرونه:
وَاِذْ غَدَوْتَ مِنْ اَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِیْنَ مَقَاعِدَ لِلْقِتَالِ ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ
இன்னும், (நபியே!) போருக்காக (அதற்கு பொருத்தமான) இடங்களில் நம்பிக்கையாளர்களை நீர் தங்க வைப்பதற்காக உம் குடும்பத்திலிருந்து காலையில் புறப்பட்ட சமயத்தை நினைவு கூர்வீராக! அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
عربي تفسیرونه:
 
د معناګانو ژباړه سورت: آل عمران
د سورتونو فهرست (لړلیک) د مخ نمبر
 
د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف - د ژباړو فهرست (لړلیک)

شیخ عمر شریف بن عبد السلام ژباړلی دی.

بندول