د قرآن کریم د معناګانو ژباړه - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

د مخ نمبر:close

external-link copy
77 : 19

اَفَرَءَیْتَ الَّذِیْ كَفَرَ بِاٰیٰتِنَا وَقَالَ لَاُوْتَیَنَّ مَالًا وَّوَلَدًا ۟ؕ

நமது வசனங்களை நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? அவன் கூறுகின்றான்: “நிச்சயமாக நான் செல்வமும் சந்ததியும் கொடுக்கப்படுவேன்.” info
التفاسير:

external-link copy
78 : 19

اَطَّلَعَ الْغَیْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۙ

மறைவானதை அறிந்து கொண்டானா அல்லது ரஹ்மானிடம் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டானா? (அதாவது ஈமான் கொண்டு நல்லமல் செய்து அல்லாஹ்வின் வாக்குறுதிக்கு தகுதியாகி விட்டானா?) info
التفاسير:

external-link copy
79 : 19

كَلَّا ؕ— سَنَكْتُبُ مَا یَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا ۟ۙ

ஒருக்காலும் அவ்வாறல்ல! அவன் கூறுவதை நாம் பதிவு செய்கிறோம். இன்னும் (மறுமையில்) அவனுக்கு வேதனையில் அதிகப்படுத்துவோம். info
التفاسير:

external-link copy
80 : 19

وَّنَرِثُهٗ مَا یَقُوْلُ وَیَاْتِیْنَا فَرْدًا ۟

அவன் கூறிய (செல்வம், சந்ததி ஆகிய)வற்றுக்கு நாம் வாரிசாகி விடுவோம். அவன் நம்மிடம் தனியாக வருவான். info
التفاسير:

external-link copy
81 : 19

وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّیَكُوْنُوْا لَهُمْ عِزًّا ۟ۙ

அவர்கள் அல்லாஹ்வை அன்றி பல தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர், அவை தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காக. info
التفاسير:

external-link copy
82 : 19

كَلَّا ؕ— سَیَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَیَكُوْنُوْنَ عَلَیْهِمْ ضِدًّا ۟۠

அவ்வாறல்ல, அவை அவர்களின் வழிபாட்டை நிராகரித்து விடும். இன்னும் அவை அவர்களுக்கு எதிரானவையாக மாறிவிடும். info
التفاسير:

external-link copy
83 : 19

اَلَمْ تَرَ اَنَّاۤ اَرْسَلْنَا الشَّیٰطِیْنَ عَلَی الْكٰفِرِیْنَ تَؤُزُّهُمْ اَزًّا ۟ۙ

நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் ஷைத்தான்களை நிராகரிப்பவர்கள் மீது ஏவி விட்டுள்ளோம். அவை அவர்களை (பாவத்தின் பக்கம்) பிடித்து அசைக்கின்றன (-இழுக்கின்றன, தூண்டுகின்றன). info
التفاسير:

external-link copy
84 : 19

فَلَا تَعْجَلْ عَلَیْهِمْ ؕ— اِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا ۟ۚ

ஆகவே, அவர்கள் மீது அவசரப்படாதீர். நிச்சயமாக நாம் அவர்களுக்காக (அவர்களுடைய செயல்களையும் அவர்கள் விடும் மூச்சுகளையும்) எண்ணுகிறோம். info
التفاسير:

external-link copy
85 : 19

یَوْمَ نَحْشُرُ الْمُتَّقِیْنَ اِلَی الرَّحْمٰنِ وَفْدًا ۟ۙ

இறையச்சமுள்ளவர்களை ரஹ்மானின் பக்கம் குழுவாக நாம் ஒன்று திரட்டுகின்ற நாளில்... info
التفاسير:

external-link copy
86 : 19

وَّنَسُوْقُ الْمُجْرِمِیْنَ اِلٰی جَهَنَّمَ وِرْدًا ۟ۘ

இன்னும் (பாவிகளை) குற்றவாளிகளை நரகத்தின் பக்கம் தாகித்தவர்களாக நாம் ஓட்டிக் கொண்டு வருகின்ற நாளில்... info
التفاسير:

external-link copy
87 : 19

لَا یَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۟ۘ

அவர்கள் சிபாரிசுக்கு உரிமை பெறமாட்டார்கள். (எனினும்) ரஹ்மானிடம் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியவரைத் தவிர. info
التفاسير:

external-link copy
88 : 19

وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ۟ؕ

இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “ரஹ்மான் குழந்தையை எடுத்துக் கொண்டான்.” info
التفاسير:

external-link copy
89 : 19

لَقَدْ جِئْتُمْ شَیْـًٔا اِدًّا ۟ۙ

திட்டமாக (மகா பாதகமான) பெரிய ஒரு காரியத்தை சொல்லி விட்டீர்கள். info
التفاسير:

external-link copy
90 : 19

تَكَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۟ۙ

இதனால் (இந்த சொல்லால்) வானங்கள் துண்டு துண்டாகி விடுவதற்கும் பூமி பிளந்து விடுவதற்கும் மலைகள் (ஒன்றன் மீது ஒன்று) விழுந்து விடுவதற்கும் நெருங்கி விட்டன. info
التفاسير:

external-link copy
91 : 19

اَنْ دَعَوْا لِلرَّحْمٰنِ وَلَدًا ۟ۚ

அவர்கள் ரஹ்மானுக்கு குழந்தையை ஏற்படுத்தியதால் (இவை இப்படி ஆகிவிட நெருங்கிவிட்டன.) info
التفاسير:

external-link copy
92 : 19

وَمَا یَنْۢبَغِیْ لِلرَّحْمٰنِ اَنْ یَّتَّخِذَ وَلَدًا ۟ؕ

(தனக்கு) குழந்தையை ஏற்படுத்திக் கொள்வது ரஹ்மானுக்கு தகுந்ததல்ல. info
التفاسير:

external-link copy
93 : 19

اِنْ كُلُّ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّاۤ اٰتِی الرَّحْمٰنِ عَبْدًا ۟ؕ

வானங்களில் இன்னும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் ரஹ்மானிடம் (பணிந்த) அடிமையாக வருவாரே தவிர (குழந்தையாக) இல்லை. info
التفاسير:

external-link copy
94 : 19

لَقَدْ اَحْصٰىهُمْ وَعَدَّهُمْ عَدًّا ۟ؕ

திட்டமாக அவன் அவர்களை (தீர்க்கமாக) கணக்கிட்டு, அவர்களை எண்ணி வைத்திருக்கிறான். info
التفاسير:

external-link copy
95 : 19

وَكُلُّهُمْ اٰتِیْهِ یَوْمَ الْقِیٰمَةِ فَرْدًا ۟

அவர்கள் ஒவ்வொருவரும் மறுமை நாளில் அவனிடம் தனியாகவே வருவார். info
التفاسير: