Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: Yusuf   Umurongo:
قَالَ یٰبُنَیَّ لَا تَقْصُصْ رُءْیَاكَ عَلٰۤی اِخْوَتِكَ فَیَكِیْدُوْا لَكَ كَیْدًا ؕ— اِنَّ الشَّیْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
12.5. யஃகூப் தம் மகன் யூஸுஃபிடம் கூறினார்: “நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் சொல்லி விடாதே. அவர்கள் அதனைப் புரிந்து கொண்டு உன் மீது பொறாமை கொள்வார்கள். பொறாமையினால் உனக்கு எதிராக சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாக இருக்கின்றான்.
Ibisobanuro by'icyarabu:
وَكَذٰلِكَ یَجْتَبِیْكَ رَبُّكَ وَیُعَلِّمُكَ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ وَیُتِمُّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَعَلٰۤی اٰلِ یَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰۤی اَبَوَیْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ ؕ— اِنَّ رَبَّكَ عَلِیْمٌ حَكِیْمٌ ۟۠
12.6. -யூஸுஃபே!- நீ அக்கனவைக் கண்டது போல உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக் கொடுப்பான். உன்னுடைய முன்னோர்களான இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோருக்கு தனது அருட்கொடைகளைப் பூரணப்படுத்தியது போல் உனக்கு தூதுத்துவத்தையும் ஆட்சியதிகாரத்தையும் வழங்கி உன்மீது பொழிந்த தன் அருளை நிறைவுபடுத்துவான். நிச்சயமாக உன் இறைவன் தன் படைப்புகளைக் குறித்து நன்கறிந்தவன்; தன் நிர்வாகத்தில் ஞானம் மிக்கவன்.
Ibisobanuro by'icyarabu:
لَقَدْ كَانَ فِیْ یُوْسُفَ وَاِخْوَتِهٖۤ اٰیٰتٌ لِّلسَّآىِٕلِیْنَ ۟
12.7. நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களின் சம்பவத்தில் அவர்களது தகவல்களைப் பற்றிக் கேட்போருக்கு படிப்பினைகளும் அறிவுரைகளும் இருக்கின்றன.
Ibisobanuro by'icyarabu:
اِذْ قَالُوْا لَیُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰۤی اَبِیْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ ؕ— اِنَّ اَبَانَا لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنِ ۟ۙۖ
12.8. சகோதரர்கள் தங்களிடையே பின்வருமாறு பேசிக்கொண்டார்கள்: “யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம்மைவிட நம் தந்தைக்குப் பிரியனமாவர்களாக இருக்கிறார்கள். நாம்தாம் அதிக எண்ணிக்கையுடைய கூட்டத்தினர். எவ்வாறு நம்மைவிட அவர்கள் இருவருக்கும் அவர் முக்கியத்துவம் வழங்கலாம்? எமக்குத் தோன்றும் விதமான எவ்வித காரணமுமின்றி நம்மைவிட அவர்கள் இருவருக்கும் முக்கியத்துவம் வழங்கியதனால் அவர் தெளிவான தவறில் உள்ளதாகவே நாம் கருதுகிறோம்.”
Ibisobanuro by'icyarabu:
١قْتُلُوْا یُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا یَّخْلُ لَكُمْ وَجْهُ اَبِیْكُمْ وَتَكُوْنُوْا مِنْ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِیْنَ ۟
12.9. யூஸுஃபைக் கொன்று விடுங்கள் அல்லது தூர தேசத்தில் தொலைத்து விடுங்கள். உங்கள் தந்தையின் அன்பு உங்களுக்கு மட்டுமே உரித்தானதாக ஆகிவிடும். அவர் உங்களை முழுமையாக நேசிக்க ஆரம்பித்து விடுவார். நீங்கள் அவரைக் கொன்ற பிறகு அல்லது தொலைத்த பிறகு அல்லாஹ்விடம் பாவங்களுக்கு மன்னிப்புக்கோரி நல்ல கூட்டமாக ஆகிவிடலாம்.
Ibisobanuro by'icyarabu:
قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا یُوْسُفَ وَاَلْقُوْهُ فِیْ غَیٰبَتِ الْجُبِّ یَلْتَقِطْهُ بَعْضُ السَّیَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟
12.10. சகோதரர்களில் ஒருவர் கூறினார்: “யூஸுஃபைக் கொன்று விடாதீர்கள். மாறாக பாழுங்கிணற்றின் ஆழத்தில் அவரைப் போட்டு விடுங்கள். அந்த வழியாக கடந்து செல்லும் பயணிகள் அவரை எடுத்துக் கொண்டு செல்வார்கள். அவர் விடயத்தில் நீங்கள் கூறியவற்றில் உறுதியானவர்களாக இருந்தால் அவரைக் கொல்வதைக்காட்டிலும் இதுதான் குறைவான தீங்குடையது.
Ibisobanuro by'icyarabu:
قَالُوْا یٰۤاَبَانَا مَا لَكَ لَا تَاْمَنَّا عَلٰی یُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنٰصِحُوْنَ ۟
12.11. அவரை அகற்றும் விஷயத்தில் அவர்கள் உடன்பட்ட போது தங்களின் தந்தை யஃகூபிடம் வந்து கூறினார்கள்: “எங்களின் தந்தையே! உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் யூஸுஃபின் விஷயத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைப்பதில்லை? நாங்கள் அவர்மீது அன்பு செலுத்தக் கூடியவர்கள்; அவரை தீங்கிலிருந்து பாதுகாக்கக் கூடியவர்கள்; நிச்சயமாக அவர் உங்களிடம் பாதுகாப்பாக திரும்பி வரும் வரை நாம் அவரைக் காத்து கவனித்து அவருக்கு விசுவாசமாக இருப்போம். எனவே எங்களுடன் அவரை அனுப்புவதற்கு உங்களுக்கு என்ன தடை உள்ளது?
Ibisobanuro by'icyarabu:
اَرْسِلْهُ مَعَنَا غَدًا یَّرْتَعْ وَیَلْعَبْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟
12.12. நாளை அவரை எங்களுடன் அழைத்துச் செல்வதற்கு அனுமதி அளியுங்கள். அவர் எங்களுடன் உண்டு மகிழட்டும், விளையாடட்டும். அவருக்கு எந்தவொரு தீங்கு நிகழ்வதை விட்டும் நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாப்பவர்களாகவே உள்ளோம்.
Ibisobanuro by'icyarabu:
قَالَ اِنِّیْ لَیَحْزُنُنِیْۤ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ یَّاْكُلَهُ الذِّئْبُ وَاَنْتُمْ عَنْهُ غٰفِلُوْنَ ۟
12.13. யஃகூப் தம் பிள்ளைகளிடம் கூறினார்: “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது. ஏனெனில் என்னால் அவரைப் பிரிந்து இருக்க முடியாது. நீங்கள் மெய்மறந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது ஓநாய் அவரைத் தின்று விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.”
Ibisobanuro by'icyarabu:
قَالُوْا لَىِٕنْ اَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ اِنَّاۤ اِذًا لَّخٰسِرُوْنَ ۟
12.14. அவர்கள் தம் தந்தையிடம் கூறினார்கள்: “நாங்கள் ஒரு கூட்டமாக இருந்தும் ஓநாய் அவரைத் தின்றுவிட்டால் எங்களிடையே எந்த நன்மையும் இல்லை. அவரை ஓநாயிலிருந்து காப்பாற்றவில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளிகளாகிவிடுவோம்.”
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• ثبوت الرؤيا شرعًا، وجواز تعبيرها.
1. மார்க்க அடிப்படையில் கனவு நிரூபனமானது. அதற்கு விளக்கம் கூறுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

• مشروعية كتمان بعض الحقائق إن ترتب على إظهارها شيءٌ من الأذى.
2. வெளிப்படுத்தப்பட்டால் தீங்கு நேரும் என்னும் நிலையிலுள்ள சில உண்மைகளை மறைப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.

• بيان فضل ذرية آل إبراهيم واصطفائهم على الناس بالنبوة.
3. இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததிகளின் சிறப்பு தெளிவாகிறது. தூதுத்துவம் மூலம் மற்ற மக்களைவிட அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

• الميل إلى أحد الأبناء بالحب يورث العداوة والحسد بين الإِخوة.
4. மற்ற பிள்ளைகளை விட்டு விட்டு ஒரு பிள்ளையின் மீது மட்டும் அதிக அன்பு செலுத்துதல் சகோதரர்களிடையே பொறாமையும் குரோதமும் ஏற்பட காரணமாக அமைகிறது.

 
Ibisobanuro by'amagambo Isura: Yusuf
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga