Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Umurongo: (254) Isura: Al Baqarat
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا بَیْعٌ فِیْهِ وَلَا خُلَّةٌ وَّلَا شَفَاعَةٌ ؕ— وَالْكٰفِرُوْنَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
2.254. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! மறுமைநாள் வருவதற்கு முன்னரே நாம் உங்களுக்கு வழங்கிய ஹலாலான செல்வங்களிலிருந்து செலவுசெய்யுங்கள். அந்நாளில் மனிதன் தனக்குப் பயனளிக்கக்கூடியவற்றை சம்பாதிக்கக்கூடிய வியாபாரத்தையோ கடினமான சூழ்நிலைகளில் உதவக்கூடிய நட்பையோ தீங்கிலிருந்து காத்து நன்மையைப் பெற்றுத்தரக்கூடிய பரிந்துரையையோ பெறமுடியாது. அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்கள்தாம் தமது நிராகரிப்பின் காரணமாக உண்மையில் அநியாயக்காரர்களாக உள்ளனர்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• أن الله تعالى قد فاضل بين رسله وأنبيائه، بعلمه وحكمته سبحانه.
1. தனது அறிவு, ஞானத்திற்கு ஏற்பவே அல்லாஹ் தன் தூதர்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளான்.

• إثبات صفة الكلام لله تعالى على ما يليق بجلاله، وأنه قد كلم بعض رسله كموسى ومحمد عليهما الصلاة والسلام.
2. அல்லாஹ்வின் கண்ணியத்திற்கேற்ப பேசும் பண்பு உண்டு. மூசா(அலை), முஹம்மது (ஸல்) ஆகிய தனது சில தூதர்களுடன் பேசியும் இருக்கின்றான்.

• الإيمان والهدى والكفر والضلال كلها بمشيئة الله وتقديره، فله الحكمة البالغة، ولو شاء لهدى الخلق جميعًا.
3. ஈமான், நிராகரிப்பு, நேர்வழி, வழிகேடு அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் விதிக்கும் உட்பட்டது. இதுகுறித்த ஆழமான ஞானம் அல்லாஹ்விடமே உண்டு. அவன் நாடினால் படைப்புகள் அனைவருக்கும் நேர்வழிகாட்டியிருப்பான்.

• آية الكرسي هي أعظم آية في كتاب الله، لما تضمنته من ربوبية الله وألوهيته وبيان أوصافه .
4. ஆயத்துல் குர்ஸீ என்று அழைக்கப்படும் வசனமே அல்குர்ஆனில் மகத்தான வசனமாகும்.ஏனெனில் இவ்வசனம் அல்லாஹ்தான் படைத்துப் பராமரிப்பவன், அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதையும் அவனுடைய பண்புகளையும் உள்ளடக்கியுள்ளது.

• اتباع الإسلام والدخول فيه يجب أن يكون عن رضًا وقَبول، فلا إكراه في دين الله تعالى.
5. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும் பின்பற்றுவதும் விருப்பத்துடன் நடைபெற வேண்டிய ஒன்றாகும். அல்லாஹ்வின் மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை.

• الاستمساك بكتاب الله وسُنَّة رسوله أعظم وسيلة للسعادة في الدنيا، والفوز في الآخرة.
6. அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் நடைமுறையையும் பற்றிப் பிடித்துக்கொள்வது இவ்வுலகில் நிம்மதியையும் மறுவுலகில் வெற்றியையும் பெற்றுத்தரும்.

 
Ibisobanuro by'amagambo Umurongo: (254) Isura: Al Baqarat
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga