Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: Al Hajj   Umurongo:
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِی الْاَرْضِ وَالْفُلْكَ تَجْرِیْ فِی الْبَحْرِ بِاَمْرِهٖ ؕ— وَیُمْسِكُ السَّمَآءَ اَنْ تَقَعَ عَلَی الْاَرْضِ اِلَّا بِاِذْنِهٖ ؕ— اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
22.65. -தூதரே!- நிச்சயமாக அல்லாஹ் உமக்கும் மனிதர்களுக்கும் பயன்பாட்டிற்காகவும் தேவைக்காகவும் பூமியிலுள்ள உயிரினங்கள், திண்மங்கள், ஆகியவற்றை வசப்படுத்தித் தந்துள்ளதை நீர் பார்க்கவில்லையா? அவன் கப்பலை உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான். அது அவனுடைய கட்டளையால், வசப்படுத்தலால் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி கடலில் செல்கிறது. வானத்தை அவனுடைய அனுமதியுடன் தவிர பூமியின்மீது விழுந்து விடாமல் தடுத்து வைத்துள்ளான். அவன் அனுமதியளித்திருந்தால் அது பூமியின் மீது விழுந்திருக்கும். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான். அவர்கள் அநீதி இழைத்தபோதிலும் அவர்களுக்கு அவன் இவற்றையெல்லாம் வசப்படுத்தித் தந்துள்ளான்.
Ibisobanuro by'icyarabu:
وَهُوَ الَّذِیْۤ اَحْیَاكُمْ ؗ— ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ؕ— اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ ۟
22.66. அல்லாஹ்வே ஒன்றுமில்லாமல் இருந்த உங்களை உருவாக்கி உயிர்ப்பித்தான். பின்னர் உங்களின் வாழ்நாள் நிறைவடைந்துவிட்டால் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் நீங்கள் செய்த செயல்களை விசாரித்து அவற்றுக்கு கணக்குத் தீர்த்து கூலி வழங்கும் பொருட்டு நீங்கள் மரணித்தபிறகு உங்களை உயிர்கொடுத்து எழச்செய்வான். நிச்சயமாக மனிதன் அல்லாஹ்வின் அருட்கொடைகளை -நிச்சயமாக அவை வெளிரங்கமாக இருந்தும் கூட- அவனுடன் மற்றவர்களை வணங்கி அதிகம் மறுப்பவனாக இருக்கின்றான்.
Ibisobanuro by'icyarabu:
لِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا هُمْ نَاسِكُوْهُ فَلَا یُنَازِعُنَّكَ فِی الْاَمْرِ وَادْعُ اِلٰی رَبِّكَ ؕ— اِنَّكَ لَعَلٰی هُدًی مُّسْتَقِیْمٍ ۟
22.67. ஒவ்வொரு சமூகத்திற்கும் நாம் ஒரு ஷரீஅத்தை (வழிமுறையை) ஏற்படுத்தியுள்ளோம். தங்களின் ஷரீஅத்திற்கேற்ப அவர்கள் செயல்படுவார்கள். -தூதரே!- இணைவைப்பாளர்களும் ஏனைய மதத்தைச் சார்ந்தவர்களும் உமக்கு வழங்கப்பட்ட ஷரீஅத்தைக்குறித்து உம்முடன் முரண்பட வேண்டாம். ஏனெனில் நீர்தான் அவர்களைவிட சத்தியத்தில் முதன்மையானவர். நிச்சயமாக அவர்கள் அசத்தியவாதிகள். அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தனித்துவமாக்குவதன் பக்கம் நீர் மக்களை அழைப்பீராக. நிச்சயமாக நீர் எவ்வித கோணலுமற்ற நேரான வழியில் இருக்கின்றீர்.
Ibisobanuro by'icyarabu:
وَاِنْ جٰدَلُوْكَ فَقُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ ۟
22.68. ஆதாரம் தெளிவான பின்னரும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால், தவிர்ந்து கொண்டால் அவர்களிடம் பின்வருமாறு எச்சரிக்கை விடுத்து அவர்களின் விவகாரங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடுவீராக: “நீங்கள் செய்யக்கூடிய செயல்களை அல்லாஹ் நன்கறிந்தவன். நீங்கள் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Ibisobanuro by'icyarabu:
اَللّٰهُ یَحْكُمُ بَیْنَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
22.69. அல்லாஹ் தன் அடியார்களான நம்பிக்கையாளர்கள் மற்றும் நிராகரிப்பாளர்களிடையே மறுமை நாளில் அவர்கள் உலகில் கருத்துவேறுபாடு கொண்டிருந்த மார்க்க விஷயங்களைக்குறித்து தீர்ப்பளிப்பான்.
Ibisobanuro by'icyarabu:
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمَآءِ وَالْاَرْضِ ؕ— اِنَّ ذٰلِكَ فِیْ كِتٰبٍ ؕ— اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
22.70. -தூதரே!- வானத்திலும் பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் அறிவான் என்பது உமக்குத் தெரியாதா? அவையிரண்டிலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நிச்சயமாக அவற்றைக்குறித்த அறிவு லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலே பதிவுசெய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக அவை ஒவ்வொன்றையும் அறிவது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது.
Ibisobanuro by'icyarabu:
وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّمَا لَیْسَ لَهُمْ بِهٖ عِلْمٌ ؕ— وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ نَّصِیْرٍ ۟
22.71. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து சிலைகளை வணங்குகிறார்கள். அவ்வாறு வணங்க அல்லாஹ் தன் வேதங்களில் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை. அதற்கு அறிவுப்பூர்வமான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. தங்களின் முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதே அவர்களுக்கிருக்கும் ஒரே ஆதாரம். அநியாயக்காரர்கள் மீது இறங்கும் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைப் பாதுகாக்கும் எந்த உதவியாளரும் இல்லை.
Ibisobanuro by'icyarabu:
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ تَعْرِفُ فِیْ وُجُوْهِ الَّذِیْنَ كَفَرُوا الْمُنْكَرَ ؕ— یَكَادُوْنَ یَسْطُوْنَ بِالَّذِیْنَ یَتْلُوْنَ عَلَیْهِمْ اٰیٰتِنَا ؕ— قُلْ اَفَاُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكُمْ ؕ— اَلنَّارُ ؕ— وَعَدَهَا اللّٰهُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟۠
22.72. குர்ஆனில் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களிடம் ஓதிக்காட்டப்பட்டால் அவற்றை செவியேற்கும் அல்லாஹ்வை நிராகரித்தவர்களின் முகங்களில் நீர் வெறுப்பைக் காண்பீர். கடும் கோபத்தினால் நம்முடைய வசனங்களை எடுத்துரைப்பவர்களை அவர்கள் தாக்கிவிட முனைகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் உங்களின் கோபத்தை, வெறுப்பைவிட மோசமான ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அது நிராகரிப்பாளர்களை அல்லாஹ் நுழைவிப்பதாக வாக்களித்துள்ள நரகமாகும். அவர்கள் செல்லும் அந்த இடம் மிகவும் தீயதாகும்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• من نعم الله على الناس تسخير ما في السماوات وما في الأرض لهم.
1. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை வசப்படுத்தப்பட்டிருப்பது மனிதர்களுக்கான அல்லாஹ்வின் அருட்கொடைகளில் உள்ளவையாகும்.

• إثبات صفتي الرأفة والرحمة لله تعالى.
2. அல்லாஹ்வுக்கு இரக்கம், கருணை என்ற இரு பண்புகளும் இருப்பது உறுதியாகிறது.

• إحاطة علم الله بما في السماوات والأرض وما بينهما.
3. வானங்களிலும் பூமியிலும் அதற்கு இடையில் உள்ள யாவற்றையும் அல்லாஹ்வின் அறிவு வியாபித்துள்ளது.

• التقليد الأعمى هو سبب تمسك المشركين بشركهم بالله.
4. இணைவைப்பாளர்கள் தங்களின் இணைவைப்பில் நிலைத்திருப்பதற்கான காரணங்களில் ஒன்று, தங்களின் முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதாகும்.

 
Ibisobanuro by'amagambo Isura: Al Hajj
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga