Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Umurongo: (73) Isura: Al Im’ran (Umuryango Wa Imurani)
وَلَا تُؤْمِنُوْۤا اِلَّا لِمَنْ تَبِعَ دِیْنَكُمْ ؕ— قُلْ اِنَّ الْهُدٰی هُدَی اللّٰهِ ۙ— اَنْ یُّؤْتٰۤی اَحَدٌ مِّثْلَ مَاۤ اُوْتِیْتُمْ اَوْ یُحَآجُّوْكُمْ عِنْدَ رَبِّكُمْ ؕ— قُلْ اِنَّ الْفَضْلَ بِیَدِ اللّٰهِ ۚ— یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟ۚۙ
3.73. “உங்களின் யூத மதத்தில் இருப்பவர்களை மட்டுமே நம்பிப் பின்பற்றுங்கள்” என்றும் கூறுகிறார்கள். தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ் காட்டிய வழியே சத்தியத்திற்கான வழியாகும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு போன்று மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டுவிடும் என்ற பயத்தால் அல்லது அவர்கள் மீது இறக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டால் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவார்களே என்ற பயத்தினால் நீங்கள் கொண்டிருக்கும் நிராகரிப்பும் பிடிவாதமும் சத்தியத்திற்கான வழி அல்ல.” தூதரே நீர் கூறுவீராக: “சிறப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளன. அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றை வழங்குகிறான். அவன் தன் அருளை ஒரு சமூகத்தோடு மட்டும் சுருக்கிவிட மாட்டான். அல்லாஹ் தாராளமாக வழங்கக்கூடியவன்; அதற்குத் தகுதியானவர்களையும் நன்கறிந்தவன்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• من علماء أهل الكتاب من يخدع أتباع ملتهم، ولا يبين لهم الحق الذي دلت عليه كتبهم، وجاءت به رسلهم.
1. வேதக்காரர்களிலுள்ள அறிஞர்களில் தங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களை ஏமாற்றுபவர்களும் உள்ளனர். அவர்களின் வேதங்கள் கூறும், அவர்களின் தூதர்கள் கொண்டுவந்த சத்தியத்தை அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதில்லை.

• من وسائل الكفار الدخول في الدين والتشكيك فيه من الداخل.
2. இஸ்லாத்தில் நுழைந்து அதன் உள்ளேயிருந்து அதிலே சந்தேகத்தை ஏற்படுத்துவது நிராகரிப்போரின் வழிமுறைகளில் ஒன்றாகும்.

• الله تعالى هو الوهاب المتفضل، يعطي من يشاء بفضله، ويمنع من يشاء بعدله وحكمته، ولا ينال فضله إلا بطاعته.
3. அல்லாஹ்தான் வழங்கக்கூடியவன், சிறப்பினை அளிப்பவன். தான் நாடியவர்களுக்குத் தன் அருளை வழங்குகிறான். நீதி, ஞானம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் நாடியவர்களுக்கு கொடுக்காமல் தடுத்துக் கொள்கிறான். அவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலமே அவனது அருள் கிடைக்கும்.

• كل عِوَضٍ في الدنيا عن الإيمان بالله والوفاء بعهده - وإن كان عظيمًا - فهو قليل حقير أمام ثواب الآخرة ومنازلها.
4. ஈமானுக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும் பகரமாக இவ்வுலகில் பெறப்படும் அனைத்தும் அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் மறுமையின் நன்மைக்கும் பதவிகளுக்கும் முன்னால் அற்பமானதே.

 
Ibisobanuro by'amagambo Umurongo: (73) Isura: Al Im’ran (Umuryango Wa Imurani)
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Ishakiro ry'ibisobanuro

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Gufunga