Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: Al Jathiyat   Umurongo:

அல்ஜாஸியா

Impamvu y'isura:
بيان أحوال الخلق من الآيات الشرعية والكونية، ونقض حجج منكري البعث المتكبرين وترهيبهم.
மார்க்க ரீதியான வசனங்கள் பிரபஞ்ச ரீதியான அத்தாட்சிகள் என்பவற்றைப் பற்றிய படைப்பினங்களின் நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தலும்,கர்வம் பிடித்த மறுமை நிராகரிப்பாளர்களின் சான்றுகளை முறியடித்து அவர்களை அச்சமூட்டலும்

حٰمٓ ۟ۚ
43.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
Ibisobanuro by'icyarabu:
تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟
45.2. இது யாவற்றையும் மிகைத்த, யாராலும் மிகைக்க முடியாத அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட குர்ஆனாகும். அவன் தனது படைப்பிலும் விதியிலும் திட்டமிடலிலும் ஞானம் மிக்கவன்.
Ibisobanuro by'icyarabu:
اِنَّ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ
45.3. நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன. ஏனெனில் திட்டமாக அவர்கள்தாம் சான்றுகளைக் கொண்டு படிப்பினை பெறுவார்கள்.
Ibisobanuro by'icyarabu:
وَفِیْ خَلْقِكُمْ وَمَا یَبُثُّ مِنْ دَآبَّةٍ اٰیٰتٌ لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟ۙ
45.4. -மனிதர்களே!- விந்திலிருந்து பின்னர் மாமிசத்திலிருந்து பின்னர் இரத்தக்கட்டிலிருந்து உங்களைப் படைத்திருப்பதிலும் அல்லாஹ் பூமியின் மேற்பரப்பில் பரவச்செய்து நடந்து செல்லும் உயிரினமான படைப்புகளிலும் நிச்சயமாக அல்லாஹ்வே படைப்பாளன் என்பதை உறுதியாக நம்பும் மக்களுக்கு அவன் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன.
Ibisobanuro by'icyarabu:
وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ رِّزْقٍ فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِیْفِ الرِّیٰحِ اٰیٰتٌ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
45.5. இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் தாவரமற்ற வறண்ட பூமியை முளைக்கச் செய்து உயிர்ப்பிப்பதிலும் நீங்கள் பயனடைவதற்காக காற்றை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புறத்திலிருந்து கொண்டுவந்து மாறிமாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ் ஒருவனே என்பதையும் மீண்டும் எழுப்புவதற்கான அவனுடைய வல்லமையையும் அனைத்துப் பொருட்களின் மீதான அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன.
Ibisobanuro by'icyarabu:
تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ۚ— فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَ اللّٰهِ وَاٰیٰتِهٖ یُؤْمِنُوْنَ ۟
45.6. -தூதரே!- இவை நாம் உமக்கு சத்தியத்துடன் எடுத்துரைக்கும் சான்றுகளாகும். தன் தூதரின் மீது இறக்கிய அல்லாஹ்வின் செய்தியின் மீதும் சான்றுகளின் மீதும் அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையெனில் பிறகு வேறு எந்த செய்தியைத்தான் அவர்கள் நம்பிக்கைகொள்ளப்போகிறார்கள். எந்த சான்றுகளைத்தான் உண்மைப்படுத்தப்போகிறார்கள்?!
Ibisobanuro by'icyarabu:
وَیْلٌ لِّكُلِّ اَفَّاكٍ اَثِیْمٍ ۟ۙ
45.7. அதிகம் பாவம் செய்யக்கூடிய ஒவ்வொரு பொய்யனுக்கும் அல்லாஹ்விடமிருந்து அழிவும் வேதனையும்தான்.
Ibisobanuro by'icyarabu:
یَّسْمَعُ اٰیٰتِ اللّٰهِ تُتْلٰی عَلَیْهِ ثُمَّ یُصِرُّ مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ یَسْمَعْهَا ۚ— فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِیْمٍ ۟
45.8. இந்த நிராகரிப்பாளன் குர்ஆனிலிருந்து அவனிடம் எடுத்துரைக்கப்படும் அல்லாஹ்வின் வசனங்களை செவியுறுகிறான். பின்னர் அவனுக்கு ஓதிக்காட்டப்பட்ட அந்த வசனங்களை அவன் செவியேற்காதவனை போல சத்தியத்தைப் பின்பற்றாமல் தன் மீது கர்வம் கொண்டு தான் இருந்துகொண்டிருக்கும் நிராகரிப்பிலும் பாவங்களிலும் நிலைத்துவிடுகிறான். -தூதரே!- அவனுக்காக மறுமையில் வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது என்ற கவலையூட்டும் தகவலைக் கூறிவிடுவீராக.
Ibisobanuro by'icyarabu:
وَاِذَا عَلِمَ مِنْ اٰیٰتِنَا شَیْـَٔا ١تَّخَذَهَا هُزُوًا ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟ؕ
45.9. குர்ஆனிலிருந்து ஏதேனும் ஒன்று அவனை அடைந்துவிட்டால் அதனை அவன் பரிகாசமாக எடுத்துக்கொண்டு பரிகாசம் செய்கிறான். இவ்வாறு குர்ஆனைப் பரிகாசம் செய்யும் பண்புகளைப் பெற்றவர்களுக்கு மறுமை நாளில் இழிவுமிக்க வேதனை உண்டு.
Ibisobanuro by'icyarabu:
مِنْ وَّرَآىِٕهِمْ جَهَنَّمُ ۚ— وَلَا یُغْنِیْ عَنْهُمْ مَّا كَسَبُوْا شَیْـًٔا وَّلَا مَا اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِیَآءَ ۚ— وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ؕ
45.10. மறுமையில் அவர்களுக்கு முன்னால் நரக நெருப்பு காத்திருக்கின்றது. அவர்கள் சம்பாதித்த செல்வங்கள் அல்லாஹ்விடம் எதையும் அளிக்கப் போவதில்லை. அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்குவதற்காக ஏற்படுத்திக் கொண்ட சிலைகளும் அவர்களைவிட்டு எதையும் தடுத்துவிடாது. அவர்களுக்கு மறுமை நாளில் கடும் வேதனை உண்டு.
Ibisobanuro by'icyarabu:
هٰذَا هُدًی ۚ— وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِیْمٌ ۟۠
45.11. நாம் நம்முடைய தூதர் முஹம்மது மீது இறக்கிய இந்த வேதம் சத்தியப் பாதையின்பால் வழிகாட்டுகிறது. இறைவன் தன் தூதர் மீது இறக்கிய வசனங்களை நிராகரிப்பவர்களுக்கு வேதனை மிக்க மோசமான தண்டனை உண்டு.
Ibisobanuro by'icyarabu:
اَللّٰهُ الَّذِیْ سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِیَ الْفُلْكُ فِیْهِ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟ۚ
45.12. -மனிதர்களே!- அல்லாஹ் ஒருவனே உங்களுக்காக கடலை வசப்படுத்தித் தந்தான். அதில் கப்பல்கள் அவனுடைய கட்டளைப்படி செல்வதற்கும் அனுமதிக்கப்பட்ட சம்பாத்தியத்தின் வகைகள் மூலம் அவனுடைய அருளை நீங்கள் தேடுவதற்காகவும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்காகவுமே அவ்வாறு செய்தான்.
Ibisobanuro by'icyarabu:
وَسَخَّرَ لَكُمْ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ جَمِیْعًا مِّنْهُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
45.13. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய வானங்களிலுள்ளவற்றையும் மலைகள், மரங்கள், ஆறுகள் போன்ற பூமியிலுள்ளவற்றையும் அவன் உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான். இவ்வனைத்து அருட்கொடைகளும் அவனது அருளும் உபகாரமுமாகும். நிச்சயமாக உங்களுக்காக இவ்வாறு வசப்படுத்தித் தந்துள்ளதில் அல்லாஹ்வின் சான்றுகளில் சிந்தனை செலுத்தி அவற்றைக் கொண்டு படிப்பினை பெறுவோருக்கு அவன் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• الكذب والإصرار على الذنب والكبر والاستهزاء بآيات الله: صفات أهل الضلال، وقد توعد الله المتصف بها.
1. பொய் கூறுதல், பாவத்தில் நிலைத்திருத்தல், பெருமையடித்தல், அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்தல் ஆகியவை வழிகேடர்களின் பண்புகளாகும். இந்த பண்புகளை உடையவர்களை அல்லாஹ் எச்சரித்துள்ளான்.

• نعم الله على عباده كثيرة، ومنها تسخير ما في الكون لهم.
2. அல்லாஹ் தன் அடியார்களின் மீது பொழிந்த அருட்கொடைகள் ஏராளமானவை. அவற்றில் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அவர்களுக்காக வசப்படுத்தப்பட்டுள்ளதும் அடங்கும்.

• النعم تقتضي من العباد شكر المعبود الذي منحهم إياها.
3. அருட்கொடைகள் அடியார்களை அவற்றை அவர்களுக்கு அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்துமாறு ணே்டி நிற்கின்றன.

 
Ibisobanuro by'amagambo Isura: Al Jathiyat
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga