Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: AL ah'qaaf   Umurongo:
وَاِذْ صَرَفْنَاۤ اِلَیْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ یَسْتَمِعُوْنَ الْقُرْاٰنَ ۚ— فَلَمَّا حَضَرُوْهُ قَالُوْۤا اَنْصِتُوْا ۚ— فَلَمَّا قُضِیَ وَلَّوْا اِلٰی قَوْمِهِمْ مُّنْذِرِیْنَ ۟
46.29. -தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனை செவிசாய்த்துக் கேட்கும் ஜின்களில் ஒரு பிரிவினரை நாம் உம் பக்கம் அனுப்பியதை நினைவு கூறுவீராக! அவர்கள் அதனைச் செவியேற்பதற்காக வந்தபோது அவர்களில் சிலர் சிலரிடம் கூறினார்கள்: “கவனமாக செவியேற்பதற்காக அமைதியாக இருங்கள்.” தூதர் ஓதிமுடித்த பிறகு அவர்கள் தங்களின் சமூகத்தவரிடம் இந்த குர்ஆனின்மீது நம்பிக்கைகொள்ளவில்லையெனில் ஏற்படப்போகும் அல்லாஹ்வின் வேதனையைக்குறித்து எச்சரித்தவர்களாகத் திரும்பினார்கள்.
Ibisobanuro by'icyarabu:
قَالُوْا یٰقَوْمَنَاۤ اِنَّا سَمِعْنَا كِتٰبًا اُنْزِلَ مِنْ بَعْدِ مُوْسٰی مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ یَهْدِیْۤ اِلَی الْحَقِّ وَاِلٰی طَرِیْقٍ مُّسْتَقِیْمٍ ۟
46.30. அவர்கள் தமது சமூகத்திடம் கூறினார்கள்: “எம் சமூகமே! நாங்கள் ஒரு வேதத்தை செவியுற்றோம். அது அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தக்கூடிய மூஸாவுக்கு பிறகு அல்லாஹ் இறக்கிய வேதமாகும். நாங்கள் செவியேற்ற இந்த வேதம் சத்தியத்தின்பால் வழிகாட்டுகிறது. இஸ்லாம் என்னும் நேரான பாதையின்பால் வழிகாட்டுகிறது.
Ibisobanuro by'icyarabu:
یٰقَوْمَنَاۤ اَجِیْبُوْا دَاعِیَ اللّٰهِ وَاٰمِنُوْا بِهٖ یَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُجِرْكُمْ مِّنْ عَذَابٍ اَلِیْمٍ ۟
46.31. எம் சமூகமே! முஹம்மது உங்களை அழைக்கும் சத்தியத்திற்குப் பதிலளித்து அவர் இறைவனிடமிருந்து வந்துள்ள தூதர் என்பதை நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிப்பான். மேலும் அவர் உங்களை அழைக்கும் சத்தியத்திற்குப் பதிலளிக்காமல் அவர் தனது இறைவனின் தூதர் என நீங்கள் நம்பிக்கைகொள்ளாத பட்சத்தில் உங்களுக்காக காத்திருக்கும் வேதனைமிக்க தண்டனையிலிருந்து அவன் உங்களைப் பாதுகாக்கிறான்.
Ibisobanuro by'icyarabu:
وَمَنْ لَّا یُجِبْ دَاعِیَ اللّٰهِ فَلَیْسَ بِمُعْجِزٍ فِی الْاَرْضِ وَلَیْسَ لَهٗ مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءُ ؕ— اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
46.32. யார் முஹம்மத் அழைக்கும் சத்தியத்திற்குப் பதிலளிக்கவில்லையோ அவர் பூமியில் எங்கு விரண்டோடியும் அல்லாஹ்விடமிருந்து தப்பிவிட முடியாது. அல்லாஹ்வை விடுத்து அவரை வேதனையிலிருந்து காப்பாற்றும் உதவியாளர்கள் யாரும் அவருக்கு இருக்க மாட்டார்கள். அவர்கள் சத்தியத்தைவிட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
Ibisobanuro by'icyarabu:
اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَلَمْ یَعْیَ بِخَلْقِهِنَّ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یُّحْیِ الْمَوْتٰی ؕ— بَلٰۤی اِنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
46.33. அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான். பிரமாண்டமானதாக, விசாலமானதாக அவற்றை படைப்பது அவனுக்கு இயலாததல்ல. இவ்வாறு ஆற்றலுடையவன் இறந்தவர்களை விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் அறியவில்லையா? ஆம், நிச்சயமாக அவன் அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கு ஆற்றலுடையவன். அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். எனவே மரணித்தவர்களை உயிர்ப்பிப்பது அவனுக்கு இயலாததல்ல.
Ibisobanuro by'icyarabu:
وَیَوْمَ یُعْرَضُ الَّذِیْنَ كَفَرُوْا عَلَی النَّارِ ؕ— اَلَیْسَ هٰذَا بِالْحَقِّ ؕ— قَالُوْا بَلٰی وَرَبِّنَا ؕ— قَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟
46.34. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் பொய்ப்பித்தவர்கள் வேதனைக்குள்ளாக்கப்படுவதற்காக நரகத்தின் முன் நிறுத்தப்படும் நாளில் இழிவுபடுத்தும் விதமாக அவர்களிடம் கேட்கப்படும்: “நீங்கள் காணும் இந்த வேதனை உண்மையானதில்லையா? அல்லது நீங்கள் உலகில் கூறிக்கொண்டிருந்தவாறு இதுவும் பொய்யா?” அவர்கள் கூறுவார்கள்: “ஆம், எங்கள் இறைவனின் மீது சத்தியமாக, நிச்சயமாக இது உண்மையாகும்.” அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனால் வேதனையை அனுபவியுங்கள்.”
Ibisobanuro by'icyarabu:
فَاصْبِرْ كَمَا صَبَرَ اُولُوا الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِلْ لَّهُمْ ؕ— كَاَنَّهُمْ یَوْمَ یَرَوْنَ مَا یُوْعَدُوْنَ ۙ— لَمْ یَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنْ نَّهَارٍ ؕ— بَلٰغٌ ۚ— فَهَلْ یُهْلَكُ اِلَّا الْقَوْمُ الْفٰسِقُوْنَ ۟۠
46.35. -தூதரே!- மனவுறுதிமிக்க தூதர்களான நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோர் பொறுத்துக் கொண்டது போன்று உம் சமூகத்தினரின் மறுப்பைப் பொறுத்துக் கொள்வீராக. அவர்களிடம் வேதனை விரைவாக வந்துவிட வேண்டும் என்று அவசரப்படாதீர். உம் சமூகத்தின் மறுப்பாளர்கள் மறுமையில் தாங்கள் எச்சரிக்கப்பட்ட வேதனையைக் காணும் நாளில் அவர்கள் அனுபவிக்கும் நீண்ட வேதனையினால் உலகில் பகலின் சில மணித்துளிகளே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும். முஹம்மது மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டதாகும். நிச்சயமாக நிராகரித்து, பாவங்கள் புரிந்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத கூட்டத்தினர்கள்தாம் வேதனையால் அழிக்கப்படுவார்கள்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• من حسن الأدب الاستماع إلى المتكلم والإنصات له.
1. பேசுபவரின்பால் காதுகொடுத்து அமைதியாக கேட்பது நல்லொழுக்கத்தில் உள்ளதாகும்.

• سرعة استجابة المهتدين من الجنّ إلى الحق رسالة ترغيب إلى الإنس.
2. ஜின்கள் விரைந்து சத்தியத்தின்பால் நேர்வழிபெற்று அதற்கு பதிலளித்ததில் மனித இனத்திற்கு ஆர்வமூட்டும் செய்தி அடங்கியுள்ளது.

• الاستجابة إلى الحق تقتضي المسارعة في الدعوة إليه.
3. சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு காணப்படுகின்றமை அதன்பால் விரைவாக அழைப்பு விடுப்பதை வேண்டிநிற்கின்றது.

• الصبر خلق الأنبياء عليهم السلام.
4. பொறுமை நபிமார்களின் பண்பாகும்.

 
Ibisobanuro by'amagambo Isura: AL ah'qaaf
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga