Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Umurongo: (97) Isura: Al Maidat
جَعَلَ اللّٰهُ الْكَعْبَةَ الْبَیْتَ الْحَرَامَ قِیٰمًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْیَ وَالْقَلَآىِٕدَ ؕ— ذٰلِكَ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
5.97. கஃபா என்னும் ஆலயத்தை அல்லாஹ் மக்களின் மார்க்கத்தை சீர்ப்படுத்துவதாகவும் வாழ்விற்குப் பாதுகாப்பாகவும் அமைத்துள்ளான். இதனை மையப்படுத்தியே அவர்களின் மார்க்க நலன்களான தொழுகை, ஹஜ், உம்ரா ஆகியவையும் புனித பூமியில் அமைதி, அனைத்து வகையான கனிகளும் கிடைத்தல் போன்ற உலக நலன்களும் நிகழ்கின்றன. (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப்) ஆகிய புனித மாதங்களில் மற்றவர்கள் அவர்களுடன் போரிடுவதிலிருந்து அபயமளிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளான். பலிப்பிராணியையும் ஹரமை நோக்கி கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கு அடையாளமாக கழுத்தில் பட்டைகட்டப்பட்ட பிராணியையும் அதைக்கொண்டு செல்லக்கூடியவர்களுக்கு எந்தத் தீங்கிழைப்பதிலிருந்து அபயமளிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளான். அவ்வாறான அருளை அல்லாஹ் உங்கள் மீது சொரிந்திருப்பது, வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் அறிவான், அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். உங்களுக்கு நலன்கள் ஏற்படுவதற்கும் தீங்குகள் நிகழ முன் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குமுரிய அச்சட்டங்களை அவன் விதியாக்கியமை தனது அடியார்களுக்குப் பொருத்தமானவற்றை அவன் அறிந்துள்ளான் என்பதற்குரிய சான்றாகும்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• الأصل في شعائر الله تعالى أنها جاءت لتحقيق مصالح العباد الدنيوية والأخروية، ودفع المضار عنهم.
1. அல்லாஹ் ஏற்படுத்திய புனிதக் கிரியைகளின் நோக்கம் அடியார்களின் இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளை அடைவதும் அவர்களை விட்டும் தீங்குகளைத் தடுப்பதுமாகும்.

• عدم الإعجاب بالكثرة، فإنّ كثرة الشيء ليست دليلًا على حِلِّه أو طِيبه، وإنما الدليل يكمن في الحكم الشرعي.
2. பெரும்பான்மையைக் கொண்டு வியக்கக்கூடாது. ஒரு விடயம் அனுமதி அல்லது சிறந்தது என்பதற்கு பெரும்பான்மை ஒருபோதும் ஆதாரமல்ல. மார்க்கத் தீர்ப்பே ஆதாரமாகும்.

• من أدب المُسْتفتي: تقييد السؤال بحدود معينة، فلا يسوغ السؤال عما لا حاجة للمرء ولا غرض له فيه.
3.மார்க்கத் தீர்ப்புக் கேட்பவருக்கான ஒழுங்குகளில் ஒன்றுதான் குறிப்பிட்ட எல்லைகளுடன் அதனை வரையறுத்துக்கொள்வதாகும். மனிதனுக்கு அவசியமற்ற தேவையில்லாதவற்றைப் பற்றிக் கேட்கக் கூடாது.

• ذم مسالك المشركين فيما اخترعوه وزعموه من محرمات الأنعام ك: البَحِيرة، والسائبة، والوصِيلة، والحامي.
4. பஹீரா, ஸாஇபா, வஸீலா, ஹாம் ஆகிய பெயர்களில் தாமாகக் கண்டுபிடித்து தடைசெய்யப்பட்டவை எனக் கருதும் இணைவைப்பாளர்களின் நடைமுறைகள் கண்டிக்கப்பட்டுள்ளன.

 
Ibisobanuro by'amagambo Umurongo: (97) Isura: Al Maidat
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Ishakiro ry'ibisobanuro

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Gufunga