Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Umurongo: (8) Isura: Almudjadalat (Impaka)
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ نُهُوْا عَنِ النَّجْوٰی ثُمَّ یَعُوْدُوْنَ لِمَا نُهُوْا عَنْهُ وَیَتَنٰجَوْنَ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِیَتِ الرَّسُوْلِ ؗ— وَاِذَا جَآءُوْكَ حَیَّوْكَ بِمَا لَمْ یُحَیِّكَ بِهِ اللّٰهُ ۙ— وَیَقُوْلُوْنَ فِیْۤ اَنْفُسِهِمْ لَوْلَا یُعَذِّبُنَا اللّٰهُ بِمَا نَقُوْلُ ؕ— حَسْبُهُمْ جَهَنَّمُ ۚ— یَصْلَوْنَهَا ۚ— فَبِئْسَ الْمَصِیْرُ ۟
58.8. -தூதரே!- ஒரு நம்பிக்கையாளரைக் கண்டால் தங்களுக்குள் இரகசியமாக பேசிக் கொள்ளும் யூதர்களை நீர் பார்க்கவில்லையா? இரகசியம் பேசுவதை விட்டும் அல்லாஹ் அவர்களைத் தடுத்துள்ளான். பின்னரும் அல்லாஹ் தடுத்ததன் பக்கம் அவர்கள் திரும்புகிறார்கள். நம்பிக்கையாளர்களைக் குறித்து புறம் பேசுவது போன்ற பாவமானவற்றையும் அவர்களுக்கு எதிரானவற்றையும் தூதருக்கு மாற்றமானவற்றையும் தங்களிடையே இரகசியமாகப் பேசுகின்றனர். -தூதரே!- அவர்கள் உம்மிடம் வந்தால் அல்லாஹ் உமக்கு சலாம் முகமன் கூறாத முறைப்படி முகமன் கூறுகிறார்கள். அவர்கள் அஸ்ஸலாமு அலைக்க என்பதற்குப் பதிலாக அஸ்ஸாமு அலைக்க உமக்கு மரணம் உண்டாகட்டும் என்று கூறுகிறார்கள். தூதரை பொய்ப்பிக்கும் விதத்தில், நிச்சயமாக அவர் நபி, நாம் அவரிடம் இவ்வாறு கூறுவதன் மூலம் அல்லாஹ் எம்மை தண்டிப்பான் என்ற தனது வாதத்தில் அவர் உண்மையானவராக இருந்தால் நாம் கூறியதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்கமாட்டானா? எனக் கூறுகிறார்கள். அவர்கள் கூறியதற்குத் தண்டனையாக நரகமே அவர்களுக்குப் போதுமானதாகும். அதன் வெப்பத்தை அவர்கள் அனுபவிப்பார்கள். அவர்கள் சேருமிடம் மிகவும் மோசமானதாகும்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• مع أن الله عالٍ بذاته على خلقه؛ إلا أنه مطَّلع عليهم بعلمه لا يخفى عليه أي شيء.
1. நிச்சயமாக அல்லாஹ் தனது உள்ளமையின் மூலம் தனது படைப்பினங்களுக்கு மேல் இருந்தாலும் தனது அறிவின் மூலம் அவர்களைப் பார்த்துக்கொண்டுதான் உள்ளான். எதுவும் அவனுக்கு மறைவானதல்ல.

• لما كان كثير من الخلق يأثمون بالتناجي أمر الله المؤمنين أن تكون نجواهم بالبر والتقوى.
2, மனிதர்களில் அதிகமானவர்கள் இரகசியம் பேசி தவறிழைப்பதனால் இறையச்சம், நல்லவற்றைக் கொண்டு இரகசியம் பேசுமாறு நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் ஏவியுள்ளான்.

• من آداب المجالس التوسيع فيها للآخرين.
3.மற்றவர்களுக்கு இடம்கொடுப்பதற்காக விசாலமாக அமர்வது சபை ஒழுக்கங்களில் உள்ளதாகும்.

 
Ibisobanuro by'amagambo Umurongo: (8) Isura: Almudjadalat (Impaka)
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Ishakiro ry'ibisobanuro

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Gufunga