Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Umurongo: (155) Isura: Al A’araf
وَاخْتَارَ مُوْسٰی قَوْمَهٗ سَبْعِیْنَ رَجُلًا لِّمِیْقَاتِنَا ۚ— فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِیَّایَ ؕ— اَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ— اِنْ هِیَ اِلَّا فِتْنَتُكَ ؕ— تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِیْ مَنْ تَشَآءُ ؕ— اَنْتَ وَلِیُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَیْرُ الْغٰفِرِیْنَ ۟
7.155. தம் சமூகத்தின் மூடர்கள் காளைக் கன்றை வணங்கியதற்கு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதற்காக மூஸா அவர்களிலிருந்து சிறந்த எழுபது நபர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவர்கள் வருவதற்காக அல்லாஹ் ஒரு நேரத்தையும் நிர்ணயம் செய்தான். அவர்கள் வந்த போது அல்லாஹ்விடமே துணிந்து அல்லாஹ்வைக் கண்முன்னால் காட்டுமாறு மூஸாவிடம் வேண்டினார்கள். அதன் காரணமாக பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதன் பயங்கரத்தால் மயங்கி விழுந்தார்கள். செத்துமடிந்தார்கள். மூஸா தம் இறைவனிடம் மன்றாடினார்: “என் இறைவா, அவர்களையும் அவர்களுடன் என்னையும் நீ அழிக்க நாடியிருந்தால் அவர்கள் இங்கு வருவதற்கு முன்னரே அழித்திருப்பாய். எங்களில் மூடர்கள் செய்த காரியத்திற்காகவா எங்களை அழித்தாய். என் சமூகம் காளைக் கன்றை வணங்கியது ஒரு சோதனையே. அதன் மூலம் நீ நாடியவர்களை வழிதவறச் செய்கிறாய். நீ நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுகின்றாய். எங்களின் விவகாரங்களுக்கு நீயே பொறுப்பாளன். எனவே எங்களின் பாவங்களை மன்னித்துவிடுவாயாக. விசாலமான உனது கருணையின் மூலம் எங்கள் மீது கருணை காட்டுவாயாக. நீயே பாவத்தை மன்னப்போரில் மிகச் சிறந்தவன்.”
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• في الآيات دليل على أن الخطأ في الاجتهاد مع وضوح الأدلة لا يعذر فيه صاحبه عند إجراء الأحكام عليه، وهو ما يسميه الفقهاء بالتأويل البعيد.
1. தெளிவான ஆதாரம் இருந்தும் ஆய்வில் தவறு விடுவது, தீர்ப்பு வழங்கும் போது, தக்க காரணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை மேற்கூறிய வசனங்கள் குறிப்பிடுகின்றன. அதனை சட்டக்கலை அறிஞர்கள் தூரமான வலிந்துரை எனக் குறிப்பிடுவர்.

• من آداب الدعاء البدء بالنفس، حيث بدأ موسى عليه السلام دعاءه فطلب المغفرة لنفسه تأدُّبًا مع الله فيما ظهر عليه من الغضب، ثم طلب المغفرة لأخيه فيما عسى أن يكون قد ظهر منه من تفريط أو تساهل في رَدْع عَبَدة العجل عن ذلك.
2. மனிதன் பிரார்த்தனை செய்யும் போது தன்னைக் கொண்டே முதலில் ஆரம்பிக்க வேண்டும். மூஸா தாம் கோபம் கொண்டதற்கு முதலில் தம்மை மன்னித்துவிடும்படியே அல்லாஹ்விடம் வேண்டினார். பின்னர் காளைக் கன்றை வணங்கியோரைக் கண்டிப்பதில் தன் சகோதரருக்கு பொடுபோக்கு நிகழ்ந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் அவருக்காக மன்னிப்பு வேண்டினார்.

• التحذير من الغضب وسلطته على عقل الشخص؛ ولذلك نسب الله للغضب فعل السكوت كأنه هو الآمر والناهي.
3. கோபம் மற்றும் மனிதனின் அறிவில் அதன் தாக்கம் ஆகியவற்றை எச்சரித்தல். எனவே ஏவுவதும் தடுப்பதும் கோபம்தான் என்பதைப் போன்று, கோபம் அடங்கியதை வர்ணிக்கும் போது “அது வாய் மூடியது” என்ற வார்த்தைப் பிரயோகத்தை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

• ضرورة التوقي من غضب الله، وخوف بطشه، فانظر إلى مقام موسى عليه السلام عند ربه، وانظر خشيته من غضب ربه.
4.அல்லாஹ்வின் கோபம் மற்றும் தண்டனையை விட்டும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். மூஸா அலை அவர்கள் தனது இறைவனிடம் நடந்துகொண்ட விதம் அவனது கோபத்திலிருந்து அஞ்சிய விதத்ததை கவனிக்கவும்.

 
Ibisobanuro by'amagambo Umurongo: (155) Isura: Al A’araf
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Ishakiro ry'ibisobanuro

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Gufunga