Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

external-link copy
74 : 7

وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِی الْاَرْضِ تَتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَنْحِتُوْنَ الْجِبَالَ بُیُوْتًا ۚ— فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟

7.74. ஆத் சமூகம் பொய் கூறி, நிராகரிப்பில் நிலைத்திருந்ததால் அவர்களை அழித்த பிறகு அவர்களுக்குப் பின் நீங்கள் தோன்றியுள்ளீர்கள். உங்களது இடத்தில் உங்களை வாழவைத்து, அதில் நீங்கள் அனுபவித்துக்கொண்டு, உங்களது தேவைகளை அடைந்துகொள்வோராக உங்களை ஆக்கி உங்களுக்கு அல்லாஹ் புரிந்த அருளை நினைத்துப்பாருங்கள். பூமியின் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள். மலைகளைக் குடைந்து வீடுகளை அமைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். பூமியில் குழப்பம் விளைவித்துத் திரிவதை விட்டுவிடுங்கள். அது இறைவனை நிராகரிப்பதையும் பாவங்கள் புரிவதையும் விட்டுவிடுவதாகும்.
info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• الاستكبار يتولد غالبًا من كثرة المال والجاه، وقلة المال والجاه تحمل على الإيمان والتصديق والانقياد غالبًا.
1. கர்வம் பெரும்பாலும் பணம் பதவி அதிகரிப்பதனால் ஏற்படுகிறது. பெரும்பாலும் குறைந்த செல்வமும் பதவியும் ஈமான் கொள்வதற்கும்,நம்பி அடிபணிவதற்கும் தூண்டுகின்றன. info

• جواز البناء الرفيع كالقصور ونحوها؛ لأن من آثار النعمة: البناء الحسن مع شكر المنعم.
2. மாளிகைகள் போன்ற உயர்கட்டிடங்கள் கட்டலாம். ஏனெனில் அருட்கொடையாளனுக்கு செலுத்தப்படும் நன்றியுடன் கட்டப்படும் அழகிய கட்டடம் அருட்கொடையின் வெளிப்பாடாகும். info

• الغالب في دعوة الأنبياء أن يبادر الضعفاء والفقراء إلى الإصغاء لكلمة الحق التي جاؤوا بها، وأما السادة والزعماء فيتمردون ويستعلون عليها.
3. பெரும்பாலும் நபிமார்களது அழைப்புப் பணியில் அவர்கள் கொண்டு வந்ந சத்தியத்தை பலவீனர்களும் ஏழைகளுமே விரைந்து ஏற்றுக்கொள்கிறார்கள். தலைவர்களோ கர்வம் கொள்கிறார்கள். நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருக்கிறார்கள். info

• قد يعم عذاب الله المجتمع كله إذا كثر فيه الخَبَث، وعُدم فيه الإنكار.
4. ஒரு சமூகத்தில் தீமைகள் பெருகி அது தடுக்கப்படாவிட்டால் சில வேளை முழு சமூகத்தையும் அல்லாஹ்வின் வேதனை தாக்கும். info