Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: Almuzammil   Umurongo:

அல்முஸ்ஸம்மில்

Impamvu y'isura:
بيان الأسباب المعينة على القيام بأعباء الدعوة.
அழைப்புப் பணியில் ஈடுபடுவதற்கு உதவும் காரணிகளைத் தெளிவுபடுத்தல்

یٰۤاَیُّهَا الْمُزَّمِّلُ ۟ۙ
73.1. தம் ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பவரே! (இதில் நாடப்பட்டவர் நபி (ஸல்) அவர்களாவர்).
Ibisobanuro by'icyarabu:
قُمِ الَّیْلَ اِلَّا قَلِیْلًا ۟ۙ
73.2. இரவில் சிறிது நேரம் தவிர எழுந்து தொழுவீராக.
Ibisobanuro by'icyarabu:
نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِیْلًا ۟ۙ
73.3. நீர் விரும்பினால் பாதி இரவு தொழுவீராக. அல்லது அரைவாசியைவிட குறைவாக மூன்றில் ஒரு பகுதிவரை தொழுவீராக.
Ibisobanuro by'icyarabu:
اَوْ زِدْ عَلَیْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِیْلًا ۟ؕ
73.4. அல்லது அதைவிட அதிகமாக மூன்றில் இரு பகுதி (தொழுவீராக). குர்ஆனை ஓதினால் தெளிவாகவும், நிதானமாகவும் ஓதுவீராக.
Ibisobanuro by'icyarabu:
اِنَّا سَنُلْقِیْ عَلَیْكَ قَوْلًا ثَقِیْلًا ۟
73.5. -தூதரே!- நிச்சயமாக நாம் உம்மீது குர்ஆனை இறக்கப் போகின்றோம். அது கடமைகள், சட்டங்கள், வரையறைகள், ஒழுக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கனமான வார்த்தையாகும்.
Ibisobanuro by'icyarabu:
اِنَّ نَاشِئَةَ الَّیْلِ هِیَ اَشَدُّ وَطْاً وَّاَقْوَمُ قِیْلًا ۟ؕ
73.6. நிச்சயமாக இராப் பொழுதே ஒதலுடன் உள்ளம் ஒன்றிச்செல்வதற்கும் சரியான வார்த்தைக்கும் மிகப் பொருத்தமானதாகும்.
Ibisobanuro by'icyarabu:
اِنَّ لَكَ فِی النَّهَارِ سَبْحًا طَوِیْلًا ۟ؕ
73.7. நிச்சயமாக பகலில் உமக்கு வேறு பணிகள் இருக்கின்றன. அவை குர்ஆன் ஓதுவதைவிட்டும் உம்மை திருப்பிவிடுகின்றன. எனவே இரவில் தொழுவீராக.
Ibisobanuro by'icyarabu:
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ اِلَیْهِ تَبْتِیْلًا ۟ؕ
73.8. அல்லாஹ்வை பலமுறைகளில் நினைவுகூர்வீராக. அவனை மாத்திரமே வணங்கி அவன்பால் உம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வீராக.
Ibisobanuro by'icyarabu:
رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِیْلًا ۟
73.9. அவன் கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளின் அதிபதி. அவனைத்தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. உமது எல்லா விவகாரங்களிலும் அவனையே பொறுப்பாளனாக ஆக்கிக் கொள்வீராக.
Ibisobanuro by'icyarabu:
وَاصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِیْلًا ۟
73.10. பொய்ப்பிப்பாளர்களின் பரிகாசத்தையும் ஏச்சுக்களையும் பொறுமையாக சகித்துக் கொள்வீராக. எவ்வித பாதிப்பும் அற்ற விதத்தில் அவர்களைப் புறக்கணிப்பீராக.
Ibisobanuro by'icyarabu:
وَذَرْنِیْ وَالْمُكَذِّبِیْنَ اُولِی النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِیْلًا ۟
73.11. உலக ஆடம்பரத்தில் திளைத்திருக்கும் பொய்ப்பிப்பாளர்களின் விடயத்தில் கவனம் செலுத்தாதீர். என்னையும் அவர்களையும் விட்டுவிடுவீராக. அவர்களின் தவணை வரும்வரை சிறிது காலம் அவர்களை எதிர்பார்த்திருப்பீராக.
Ibisobanuro by'icyarabu:
اِنَّ لَدَیْنَاۤ اَنْكَالًا وَّجَحِیْمًا ۟ۙ
73.12. நிச்சயமாக மறுமையில் நம்மிடத்தில் கனமான விலங்குகளும் கொழுந்து விட்டெரியும் நெருப்பும் இருக்கின்றன.
Ibisobanuro by'icyarabu:
وَّطَعَامًا ذَا غُصَّةٍ وَّعَذَابًا اَلِیْمًا ۟۫
73.13. கடுமையான கசப்பின் காரணத்தால் தொண்டையில் விழுங்க முடியாத உணவும் இன்னும் முன்னைவிட அதிகப்படியாக நோவினைமிக்க வேதனையும் இருக்கின்றன.
Ibisobanuro by'icyarabu:
یَوْمَ تَرْجُفُ الْاَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِیْبًا مَّهِیْلًا ۟
73.14. பூமியும் மலைகளும் ஆட்டம் காணும் நாளில் இந்த வேதனை பொய்ப்பிப்பாளர்களுக்கு ஏற்படக்கூடியதாகும். அப்போது அதன் பயங்கரத்தின் கடுமையினால் மலைகள் சிதறிய மணல்குவியலாகிவிடும்.
Ibisobanuro by'icyarabu:
اِنَّاۤ اَرْسَلْنَاۤ اِلَیْكُمْ رَسُوْلًا ۙ۬— شَاهِدًا عَلَیْكُمْ كَمَاۤ اَرْسَلْنَاۤ اِلٰی فِرْعَوْنَ رَسُوْلًا ۟ؕ
73.15. நாம் ஃபிர்அவ்னை நோக்கி மூஸா என்ற ஒரு தூதரை அனுப்பியது போன்று நாம் உங்களின் பக்கமும் மறுமை நாளில் உங்களின் செயல்களுக்கு சாட்சிகூறும் ஒரு தூதரை நிச்சயமாக அனுப்பியுள்ளோம்.
Ibisobanuro by'icyarabu:
فَعَصٰی فِرْعَوْنُ الرَّسُوْلَ فَاَخَذْنٰهُ اَخْذًا وَّبِیْلًا ۟
73.16. ஃபிர்அவ்ன் தன்னிடம் தனது இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதருக்குக் கீழ்ப்படிய மறுத்தான். நாம் உலகில் அவனை மூழ்கடித்து கடுமையான முறையில் தண்டித்தோம். மறுமையில் நரக வேதனையால் நாம் அவனைத் தண்டிப்போம். நீங்கள் உங்கள் தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்படாதீர்கள். அவ்வாறு செயல்பட்டால் அவனுக்கு நேர்ந்ததைப் போன்றே உங்களுக்கும் நேரும்.
Ibisobanuro by'icyarabu:
فَكَیْفَ تَتَّقُوْنَ اِنْ كَفَرْتُمْ یَوْمًا یَّجْعَلُ الْوِلْدَانَ شِیْبَا ۟
73.17. -நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரை பொய்ப்பித்தால்- கடுமையான நீளமான நாளிலிருந்து உங்களை எவ்வாறு தடுத்துக்கொள்வீர்கள், காத்துக் கொள்வீர்கள். அந்நாளின் பயங்கரத்தால், நீளத்தால் சிறிய பிள்ளைகளின் தலை முடியும் நரைத்து விடும்.
Ibisobanuro by'icyarabu:
١لسَّمَآءُ مُنْفَطِرٌ بِهٖ ؕ— كَانَ وَعْدُهٗ مَفْعُوْلًا ۟
73.18. அதன் பயங்கரத்தால் வானம் பிளந்துவிடும். நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி சந்தேகமின்றி நிறைவேறியே தீரும்.
Ibisobanuro by'icyarabu:
اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ— فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟۠
73.19. நிச்சயமாக, மறுமை நாளில் நிகழக்கூடிய பயங்கரங்களை தெளிவாக உள்ளடக்கிய இந்த அறிவுரை நினைவூட்டலாகும். நம்பிக்கையாளர்கள் இதன்மூலம் பயனடைவார்கள். எனவே தம் இறைவனின் பால் கொண்டுபோய்ச் சேர்க்கும் வழி வேண்டுமென நினைப்பவர் அதனை ஏற்றுக்கொள்வார்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• أهمية قيام الليل وتلاوة القرآن وذكر الله والصبر للداعية إلى الله.
1. இரவுத் தொழுகை, குர்ஆன் ஓதுவது, அல்லாஹ்வை நினைவுகூர்வது, பொறுமையைக் கடைப்பிடித்தல் ஆகியவை அல்லாஹ்வின்பால் அழைக்கும் அழைப்பாளனுக்கு மிகப்பிரதானமானவையாகும்.

• فراغ القلب في الليل له أثر في الحفظ والفهم.
2. இரவு நேரத்தில் உள்ளம் ஓய்வாக இருப்பது மனனம் மற்றும் புரிதலில் தாக்கம் செலுத்தத் தக்கதாகும்.

• تحمّل التكاليف يقتضي تربية صارمة.
3. பொறுப்புகளைச் சுமப்பதற்கு கண்டிப்பான பண்பாட்டுப் பயிற்சி அவசியமானதாகும்.

• الترف والتوسع في التنعم يصدّ عن سبيل الله.
4. ஆடம்பரமும் அதிக உல்லாசமும் அல்லாஹ்வின் பாதையைவிட்டும் தடுக்கின்றன.

 
Ibisobanuro by'amagambo Isura: Almuzammil
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga