Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: Alghashiyat (Igitwikira)   Umurongo:

ஸூரா அல்காஷியா

Impamvu y'isura:
التذكير بالآخرة وما فيها من الثواب والعقاب، والنظر في براهين قدرة الله.
மறுமையைக் கொண்டும் அதிலுள்ள கூலி, தண்டனை ஆகியவற்றை ஞாபகமூட்டலும், அல்லாஹ்வின் ஆற்றலுக்கான சான்றுகளை உற்றுநோக்கலும்.

هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْغَاشِیَةِ ۟ؕ
88.1. -தூதரே!- தன் பயங்கரங்களால் மக்களை சூழ்ந்துகொள்ளக்கூடிய மறுமை நாளின் செய்தி உம்மிடம் வந்ததா?
Ibisobanuro by'icyarabu:
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ خَاشِعَةٌ ۟ۙ
88.2. மறுமை நாளில் மனிதர்கள் நற்பாக்கியசாலிகள் அல்லது துர்பாக்கியசாலிகளாக இருப்பார்கள். துர்பாக்கியசாலிகளின் முகங்கள் இழிவடைந்தவையாக, அடிபணிந்தவையாக இருக்கும்.
Ibisobanuro by'icyarabu:
عَامِلَةٌ نَّاصِبَةٌ ۟ۙ
88.3. இழுத்துச் செல்லப்படும் சங்கிலிகளாலும் மாட்டப்படும் விலங்குகளாலும் அவை கஷ்டப்பட்டு களைத்துப் போனவையாக இருக்கும்.
Ibisobanuro by'icyarabu:
تَصْلٰی نَارًا حَامِیَةً ۟ۙ
88.4. அந்த முகங்கள் வெப்பமிக்க நெருப்பில் பிரவேசித்து அதன் சூட்டை அனுபவிக்கும்.
Ibisobanuro by'icyarabu:
تُسْقٰی مِنْ عَیْنٍ اٰنِیَةٍ ۟ؕ
88.5. கடுமையாக கொதிக்கும் நீருற்றிலிருந்து அவர்கள் தண்ணீர் புகட்டப்படுவார்கள்.
Ibisobanuro by'icyarabu:
لَیْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِیْعٍ ۟ۙ
88.6. காய்ந்தால் விஷமாக மாறிவிடும் ஷிப்ரக் என்று சொல்லப்படும் செடியிலிருந்து வழங்கப்படும் அறுவறுப்பான உணவைத்தவிர வேறு எந்த உணவும் அவர்களுக்கு வழங்கப்படாது.
Ibisobanuro by'icyarabu:
لَّا یُسْمِنُ وَلَا یُغْنِیْ مِنْ جُوْعٍ ۟ؕ
88.7. அது உண்பவரை கொழுக்க வைக்காது, அவரது பசியையும் போக்காது.
Ibisobanuro by'icyarabu:
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاعِمَةٌ ۟ۙ
88.8. அந்நாளில் நற்பாக்கியசாலிகளின் முகங்கள் அருட்கொடைகளைப் பெறுவதனால் பொலிவானவையாக, மகிழ்ச்சியானவையாக, அருள் சொறிந்தவையாக இருக்கும்.
Ibisobanuro by'icyarabu:
لِّسَعْیِهَا رَاضِیَةٌ ۟ۙ
88.9. உலகில் தாம் செய்த செயல்களைக் கொண்டு அவை திருப்தியடைந்திருக்கும். அவை தமது நற்செயல்களுக்கான கூலி பல மடங்காக சேமிக்கப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ளும்.
Ibisobanuro by'icyarabu:
فِیْ جَنَّةٍ عَالِیَةٍ ۟ۙ
88.10. உயர்ந்த அந்தஸ்தும் இடமும் உடைய சுவனத்தில் இருக்கும்.
Ibisobanuro by'icyarabu:
لَّا تَسْمَعُ فِیْهَا لَاغِیَةً ۟ؕ
88.11. அவை சுவனத்தில் தடைசெய்யப்பட்ட வார்த்தையைச் செவிமடுப்பது ஒரு புறமிருக்க வீணான மற்றும் பொய்யான வார்த்தைகளைச் செவியுறாது.
Ibisobanuro by'icyarabu:
فِیْهَا عَیْنٌ جَارِیَةٌ ۟ۘ
88.12. அந்த சுவனத்தில் வெடித்து ஓடக்கூடிய ஓர் நீருற்று இருக்கும். அவர்கள் நாடியவாறு அதனை ஓடச் செய்வார்கள்.
Ibisobanuro by'icyarabu:
فِیْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۟ۙ
88.13. அங்கு உயர்ந்த கட்டில்கள்.
Ibisobanuro by'icyarabu:
وَّاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ ۟ۙ
88.14. பருகுவதற்காக தயார் செய்து வைக்கப்பட்ட குவளைகளும்.
Ibisobanuro by'icyarabu:
وَّنَمَارِقُ مَصْفُوْفَةٌ ۟ۙ
88.15. வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட தலையணைகளும்.
Ibisobanuro by'icyarabu:
وَّزَرَابِیُّ مَبْثُوْثَةٌ ۟ؕ
இங்குமங்கும் விரிக்கப்பட்ட பல அதிகமான விரிப்புக்கள் அதிலுண்டு.
Ibisobanuro by'icyarabu:
اَفَلَا یَنْظُرُوْنَ اِلَی الْاِبِلِ كَیْفَ خُلِقَتْ ۟ۥ
88.17. ஒட்டகத்தை அல்லாஹ் எவ்வாறு படைத்து அதனை மனிதனுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்? என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
Ibisobanuro by'icyarabu:
وَاِلَی السَّمَآءِ كَیْفَ رُفِعَتْ ۟ۥ
88.18. வானத்தை எவ்வாறு அவர்கள் மீது விழாதவாறு அவர்களுக்கு மேலே பாதுகாப்பான கூரையாக அவன் உயர்த்திவைத்துள்ளான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
Ibisobanuro by'icyarabu:
وَاِلَی الْجِبَالِ كَیْفَ نُصِبَتْ ۟ۥ
88.19. பூமி மக்களால் ஆட்டம் காணாமல் இருக்க எவ்வாறு மலைகளை நட்டி அதனை உறுதிப்படுத்தியுள்ளான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
Ibisobanuro by'icyarabu:
وَاِلَی الْاَرْضِ كَیْفَ سُطِحَتْ ۟
88.20. பூமியை எவ்வாறு அவன் விரித்து மனித வாழ்வுக்கேற்றவாறு அதனைத் தயார்செய்து வைத்துள்ளான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
Ibisobanuro by'icyarabu:
فَذَكِّرْ ۫— اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ۟ؕ
88.21. தூதரே! இவர்களுக்கு அறிவுரை வழங்குவீராக. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எச்சரிக்கை செய்வீராக. நீர் அறிவுரை வழங்கக்கூடியவர்தாம். அதைத்தவிர உம்மீது எந்தப் பொறுப்பும் இல்லை. நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது.
Ibisobanuro by'icyarabu:
لَسْتَ عَلَیْهِمْ بِمُصَۜیْطِرٍ ۟ۙ
88.22. நீர் அவர்களை நம்பிக்கைகொள்ளுமாறு நிர்ப்பந்திப்பதற்கு நீர் அவர்களின் பொறுப்பாளர் அல்ல.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• أهمية تطهير النفس من الخبائث الظاهرة والباطنة.
1. வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான அழுக்குகளைவிட்டும் மனதைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம் தெளிவாகிறது.

• الاستدلال بالمخلوقات على وجود الخالق وعظمته.
2. படைப்பினங்கள் படைப்பாளனின் இருப்பிற்கும் வல்லமைக்குமான சான்றுகளாகும்.

• مهمة الداعية الدعوة، لا حمل الناس على الهداية؛ لأن الهداية بيد الله.
3. அழைப்பாளனின் கடமை எடுத்துரைப்பது மட்டுமே. மக்களை நேர்வழியில் செலுத்துவது அவன்மீதுள்ள கடமையல்ல. ஏனெனில் நிச்சயமாக நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது.

اِلَّا مَنْ تَوَلّٰی وَكَفَرَ ۟ۙ
88.23. ஆயினும் அவர்களில் யார் நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணித்து அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தாரோ.
Ibisobanuro by'icyarabu:
فَیُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَ ۟ؕ
88.24. அல்லாஹ் மறுமைநாளில் அவரை நரகத்தில் நிரந்தரமாக பிரவேசிக்கச் செய்து கடும் வேதனையை அளிப்பான்.
Ibisobanuro by'icyarabu:
اِنَّ اِلَیْنَاۤ اِیَابَهُمْ ۟ۙ
88.25. நிச்சயமாக அவர்கள் மரணித்தபிறகு நம் பக்கமே திரும்ப வேண்டும்.
Ibisobanuro by'icyarabu:
ثُمَّ اِنَّ عَلَیْنَا حِسَابَهُمْ ۟۠
88.26. பின்னர் அவர்களின் செயல்களுக்குக் கணக்கு வாங்குவது நம்மீது மட்டுமுள்ள கடமையாகும். அது உமக்கோ ஏனையவர்களுக்கோ உரியதல்ல.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• فضل عشر ذي الحجة على أيام السنة.
1. வருடத்தின் ஏனைய நாட்களை விட துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களின் சிறப்பு தெளிவாகிறது.

• ثبوت المجيء لله تعالى يوم القيامة وفق ما يليق به؛ من غير تشبيه ولا تمثيل ولا تعطيل.
2. மறுமை நாளில் எந்தவகையான ஒப்புவமை, உதாரணம் கூறுவதின்றி அல்லாஹ் தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு வருவான் என்பது உறுதியாகிறது.

• المؤمن إذا ابتلي صبر وإن أعطي شكر.
3. நம்பிக்கையாளன் சோதனைக்குள்ளாக்கப்பட்டால் பொறுமையாகவும் (ஏதும்) வழங்கப்பட்டால் நன்றிமிக்கவனாகவும் இருப்பான்.

 
Ibisobanuro by'amagambo Isura: Alghashiyat (Igitwikira)
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Ishakiro ry'ibisobanuro

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Gufunga