Check out the new design

Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Isura: At Tawubat   Umurongo:
كَیْفَ یَكُوْنُ لِلْمُشْرِكِیْنَ عَهْدٌ عِنْدَ اللّٰهِ وَعِنْدَ رَسُوْلِهٖۤ اِلَّا الَّذِیْنَ عٰهَدْتُّمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ— فَمَا اسْتَقَامُوْا لَكُمْ فَاسْتَقِیْمُوْا لَهُمْ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟
9.7. அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் இணைவைப்பாளர்களுக்கு ஒப்பந்தமோ பாதுகாப்போ இருக்க முடியாது. ஆயினும் மஸ்ஜிதுல் ஹராம் எல்லையில் வைத்து - முஸ்லிம்களே! - உங்களுடன் ஹுதைபிய்யா ஒப்பந்தம் செய்து கொண்டவர்களைத் தவிர. உங்களுக்கும் அவர்களுக்குமிடையிலுள்ள ஒப்பந்தத்தை மீறாமல் அவர்கள் நேர்மையாக இருக்கும் வரை நீங்களும் நேர்மையாக இருங்கள். அதனை மீறி விடாதீர்கள். தன் அடியார்களில் தன் கட்டளைகளைச் செயல்படுத்தி தான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி தன்னை அஞ்சுவோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
Ibisobanuro by'icyarabu:
كَیْفَ وَاِنْ یَّظْهَرُوْا عَلَیْكُمْ لَا یَرْقُبُوْا فِیْكُمْ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ— یُرْضُوْنَكُمْ بِاَفْوَاهِهِمْ وَتَاْبٰی قُلُوْبُهُمْ ۚ— وَاَكْثَرُهُمْ فٰسِقُوْنَ ۟ۚ
9.8. உங்களின் எதிரிகளான அவர்களுக்கு எவ்வாறு ஒப்பந்தமும் பாதுகாப்பும் இருக்க முடியும்? அவர்கள் உங்களை வென்று விட்டால் உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வையோ ஒப்பந்தத்தையோ உறவையோ பொருட்படுத்த மாட்டார்கள். மாறாக உங்களைக் கொடிய வேதனையில் ஆழ்த்திவிடுவார்கள். அவர்களின் நாவுகள் உச்சரிக்கும் அழகிய வார்த்தைகளால் உங்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களோ நாவுகள் கூறுவதற்கு இணங்கவில்லை. அவர்கள் கூறுவதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத்தை முறித்ததனால் அல்லாஹ்வுக்கு அடிபணியாதவர்களே.
Ibisobanuro by'icyarabu:
اِشْتَرَوْا بِاٰیٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِیْلًا فَصَدُّوْا عَنْ سَبِیْلِهٖ ؕ— اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
9.9. அல்லாஹ்வின் வசனங்களைப் பின்பற்றுவதற்குப் பகரமாக, அவற்றில் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதும் உள்ளடங்கும், தங்களின் மனஇச்சையைத் தீர்த்துக்கொள்ளும் இவ்வுலகின் அற்ப ஆதாயத்தைப் பெற்றுக் கொண்டார்கள். எனவேதான் அவர்கள் சத்தியத்தைப் பின்பற்றுவதை விட்டு தம்மையும் தடுத்து அதனைப் புறக்கணித்து மற்றவர்களையும் அதனை விட்டுத் தடுத்தார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் மோசமான காரியமாகும்.
Ibisobanuro by'icyarabu:
لَا یَرْقُبُوْنَ فِیْ مُؤْمِنٍ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُعْتَدُوْنَ ۟
9.10. அவர்கள் தம்மிடமுள்ள பகைமையால் எந்த நம்பிக்கையாளனின் விஷயத்திலும் அல்லாஹ்வையோ உறவுமுறையையோ ஒப்பந்தத்தையோ பொருட்படுத்தப்போவதில்லை. மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்களாவர். ஏனெனில் அவர்கள் அநியாயம், வரம்பு மீறல் ஆகிய பண்புகளைப் பெற்றுள்ளார்கள்.
Ibisobanuro by'icyarabu:
فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَاِخْوَانُكُمْ فِی الدِّیْنِ ؕ— وَنُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
9.11. அவர்கள் நிராகரிப்பிலிருந்து பாவமன்னிப்புக்கோரி, ‘இரு சாட்சியங்களையும் மொழிந்து, தொழுகையைக் கடைப்பிடித்து தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தும் வழங்கினால் அவர்கள் முஸ்லிம்களாகிவிட்டனர். அவர்கள் உங்களின் மார்க்க சகோதரர்களாவர். உங்களுக்குரிய உரிமைகளும் கடமைகளும் அவர்களுக்கும் உண்டு. அவர்களுடன் போரிடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதனால் அவர்களின் உயிர்களும், உடமைகளும், மானங்களும் பாதுகாப்புப் பெற்றவையாகிவிட்டன. அறிந்துகொள்ளும் மக்களுக்கு நாம் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறோம். அவர்கள்தாம் அவற்றைக் கொண்டு பயனடைவார்கள். மற்றவர்களுக்கும் பயனளிப்பார்கள்.
Ibisobanuro by'icyarabu:
وَاِنْ نَّكَثُوْۤا اَیْمَانَهُمْ مِّنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوْا فِیْ دِیْنِكُمْ فَقَاتِلُوْۤا اَىِٕمَّةَ الْكُفْرِ ۙ— اِنَّهُمْ لَاۤ اَیْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ یَنْتَهُوْنَ ۟
9.12. நீங்கள் குறிப்பிட்ட காலம் வரை போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப்பாளர்கள் தங்களின் ஒப்பந்தத்தை மீறி, உங்களின் மார்க்கத்தைக் குறைகூறினால் நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள்தாம் நிராகரிப்பின் தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் அவர்களின் உயிர்களைப் பாதுகாக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. தங்களின் நிராகரிப்பிலிருந்தும் ஒப்பந்தங்களை மீறுவதிலிருந்தும் மார்க்கத்தைக் குறை கூறுவதிலிருந்தும் அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு அவர்களுடன் போரிடுங்கள்.
Ibisobanuro by'icyarabu:
اَلَا تُقَاتِلُوْنَ قَوْمًا نَّكَثُوْۤا اَیْمَانَهُمْ وَهَمُّوْا بِاِخْرَاجِ الرَّسُوْلِ وَهُمْ بَدَءُوْكُمْ اَوَّلَ مَرَّةٍ ؕ— اَتَخْشَوْنَهُمْ ۚ— فَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشَوْهُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
9.13. -நம்பிக்கையாளர்களே!- தங்களின் ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் மீறியோருடன் நீங்கள் ஏன் போரிடக் கூடாது? அவர்கள் ‘தாருன் நத்வா’ என்னும் சபையிலே ஒன்றுகூடி தூதரை மக்காவிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டார்கள். அவர்கள்தாம் தூதரின் அணியில் இருக்கின்ற குசாஆ குலத்தாருக்கு எதிராக குறைஷிகளின் அணியில் இருக்கின்ற பக்ர் குலத்தாருக்கு உதவி செய்து போரைத் தொடங்கினார்கள். நீங்கள் அவர்களுக்குப் பயந்து அவர்களுடன் போரிடவில்லையா? நீங்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நீங்கள் அஞ்சுவதற்குத் தகுதியானவன்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• دلَّت الآيات على أن قتال المشركين الناكثين العهد كان لأسباب كثيرة، أهمها: نقضهم العهد.
1. ஒப்பந்தத்தை முறித்த இணைவைப்பாளர்களுக்கு எதிராக போரிடுவதற்குப் பல காரணங்கள் இருந்தன. அவற்றுள் முக்கியமானது, அவர்கள் தங்களின் ஒப்பந்தத்தை மீறியதேயாகும்.

• في الآيات دليل على أن من امتنع من أداء الصلاة أو الزكاة فإنه يُقاتَل حتى يؤديهما، كما فعل أبو بكر رضي الله عنه.
2. மேல் உள்ள வசனங்களிலே தொழுகையைக் கடைப்பிடிக்காமல் ஸகாத்தை வழங்காமல் இருப்பவர்களுக்கு எதிராக அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தை வழங்கும் வரை போரிடலாம் என்பதற்கு ஆதாரம் உண்டு. - அபூபக்கர் (ரலி) ஸகாத் வழங்காதவர்களுக்கு எதிராகப் போரிட்டார்.-

• استدل بعض العلماء بقوله تعالى:﴿وَطَعَنُوا فِي دِينِكُمْ﴾ على وجوب قتل كل من طعن في الدّين عامدًا مستهزئًا به.
3. “அவர்கள் உங்களது மார்க்கத்தைக் குறைகூறினார்கள்” என்ற வசனத்தை ஆதாரமாகக் கொண்டு, வேண்டுமென்றே பரிகாசம் செய்யும் நோக்கில் மார்க்கத்தில் குறைகூறியவனைக் கொலை செய்வது கடமையாகும் என சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

• في الآيات دلالة على أن المؤمن الذي يخشى الله وحده يجب أن يكون أشجع الناس وأجرأهم على القتال.
4.அல்லாஹ்வுக்கு மாத்திரமே அஞ்சும் ஒரு விசுவாசி மனிதர்களில் மிகப் பெரும் வீரனாகவும் போர்புரிவதற்கு துனிச்சலுடையவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தில் ஆதாரம் உண்டு.

 
Ibisobanuro by'amagambo Isura: At Tawubat
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga