Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය පරිච්ඡේදය: අස් සුමර්   වාක්‍යය:
خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِیَةَ اَزْوَاجٍ ؕ— یَخْلُقُكُمْ فِیْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْ بَعْدِ خَلْقٍ فِیْ ظُلُمٰتٍ ثَلٰثٍ ؕ— ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ؕ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— فَاَنّٰی تُصْرَفُوْنَ ۟
39.6. -மனிதர்களே!- உங்கள் இறைவன் ஆதம் என்ற ஒரே ஆன்மாவிலிருந்து உங்களைப் படைத்துள்ளான். பின்னர் அவரிடமிருந்து அவரது மனைவி ஹவ்வாவைப் படைத்தான். ஒட்டகம், பசுமாடு, வெள்ளாடு, செம்மறியாடு ஆகியவற்றில் எட்டு வகைகளை உங்களுக்காகப் படைத்துள்ளான். ஒவ்வொரு வகையிலும் அவன் ஆண், பெண் இணைகளைப் படைத்துள்ளான். உங்கள் அன்னையரின் வயிற்றில் வயிறு, கருவறை, நஞ்சுக்கொடி ஆகிய மூன்று இருள்களினுள் உங்களைக் கட்டம் கட்டமாகப் படைத்தான். இவையனைத்தையும் படைப்பது உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான். ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவனை வணங்காமல் அவர்களோ படைக்கப்பட்டு அவர்களால் எதையும் படைக்க முடியாதவர்களை வணங்கி எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِنْ تَكْفُرُوْا فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنْكُمْ ۫— وَلَا یَرْضٰی لِعِبَادِهِ الْكُفْرَ ۚ— وَاِنْ تَشْكُرُوْا یَرْضَهُ لَكُمْ ؕ— وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ؕ— ثُمَّ اِلٰی رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ؕ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
39.7. -மனிதர்களே!- நீங்கள் உங்கள் இறைவனை நிராகரித்தால் நிச்சயமாக அவன் உங்களின் நம்பிக்கையைவிட்டும் நிச்சயமாக அவன் தேவையற்றவன். உங்களின் நிராகரிப்பால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்பட்டு விடப்போவதில்லை. திட்டமாக உங்கள் நிராகரிப்பின் தீங்கு உங்களுக்கே கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை விரும்ப மாட்டான். நிராகரிக்கும்படி அவர்களை ஏவ மாட்டான். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான, தீய காரியங்களை செய்யும்படி கட்டளையிட மாட்டான். நீங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி அவன் மீது நம்பிக்கைகொண்டால் அவன் உங்கள் நன்றியுணர்வை ஏற்றுக் கொள்வான். அதற்காக அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது. மாறாக ஒவ்வொருவரும் தான் சம்பாதித்தவற்றிற்குப் பிணையாக உள்ளார்கள். பின்னர் மறுமை நாளில் உங்கள் இறைவனிடம் மட்டுமே திரும்ப வேண்டும். அவன் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களைக்குறித்து உங்களுக்கு அறிவிப்பான். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிந்தவன். அவற்றில் இருந்து எதுவும் அவனைவிட்டு மறைய முடியாது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَا رَبَّهٗ مُنِیْبًا اِلَیْهِ ثُمَّ اِذَا خَوَّلَهٗ نِعْمَةً مِّنْهُ نَسِیَ مَا كَانَ یَدْعُوْۤا اِلَیْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلّٰهِ اَنْدَادًا لِّیُضِلَّ عَنْ سَبِیْلِهٖ ؕ— قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِیْلًا ۖۗ— اِنَّكَ مِنْ اَصْحٰبِ النَّارِ ۟
39.8. நிராகரிப்பாளனை நோய், பண இழப்பு, மூழ்கிவிடுவோம் என்ற பயம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துன்பம் தீண்டிவிட்டால் தன் இறைவனின் பக்கம் மாத்திரம் திரும்பி, தன்னைப் பீடித்த துன்பத்தைப் போக்குமாறு மன்றாடுகிறான். பின்னர் அல்லாஹ் அவனை பீடித்த துன்பத்தைப் போக்கி அவனுக்கு அருட்கொடையை வழங்கினால் அவன் இதற்கு முன்னர் பிரார்த்தித்துக் கொண்டிருந்த அல்லாஹ்வை விட்டுவிட்டு அவனுக்கு அவனை விடுத்து வணங்கப்படக்கூடிய இணைகளை ஏற்படுத்துகிறான். அல்லாஹ்விடம் கொண்டு சேர்க்கும் வழியை விட்டும் மற்றவர்களைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறான். -தூதரே!- இந்நிலைமையில் உள்ளவனுக்கு நீர் கூறுவீராக: “உன் நிராகரிப்பினால் உனது எஞ்சிய வாழ்வை அனுபவித்துக் கொள். அது குறைவான காலம்தான். நிச்சயமாக மறுமை நாளில் நீ நரகவாசியாவாய். அதில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பாய்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّیْلِ سَاجِدًا وَّقَآىِٕمًا یَّحْذَرُ الْاٰخِرَةَ وَیَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖ ؕ— قُلْ هَلْ یَسْتَوِی الَّذِیْنَ یَعْلَمُوْنَ وَالَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ؕ— اِنَّمَا یَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ ۟۠
39.9. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு இரவு நேரங்களில் நின்றவாறும் சிரம்பணிந்தவாறும் அவனை வணங்கி மறுமையின் வேதனையை அஞ்சி அவனுடைய அருளை ஆதரவு வைப்பவர் சிறந்தவரா? அல்லது துன்பமான சமயங்களில் அல்லாஹ்வை வணங்கி மகிழ்ச்சியான சமயங்களில் அவனை நிராகரித்து அவனுக்கு இணைகளை ஏற்படுத்தும் நிராகரிப்பாளரா? -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைப் பற்றி அறிந்ததனால் அவன் தங்கள் மீது கடமையாக்கியதை அறிந்தவர்களும் அவற்றில் எதையும் அறியாதவர்களும் சமமாவார்களா? திட்டமாக இந்த இரு பிரிவினருக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நேரான அறிவுடையவர்கள்தாம் அறிந்து கொள்வார்கள்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
قُلْ یٰعِبَادِ الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ ؕ— لِلَّذِیْنَ اَحْسَنُوْا فِیْ هٰذِهِ الدُّنْیَا حَسَنَةٌ ؕ— وَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ ؕ— اِنَّمَا یُوَفَّی الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَیْرِ حِسَابٍ ۟
39.10. -தூதரே!- என் மீதும், என் தூதர்கள் மீதும் நம்பிக்கைகொண்ட என் அடியார்களிடம் கூறுவீராக: “உங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். உங்களில் இவ்வுலகில் நற்செயல் புரிந்தவர்களுக்கு அதில் வெற்றி, ஆரோக்கியம், செல்வம் போன்ற நன்மையும் மறுவுலகில் சுவனமும் உண்டு. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. எவ்வதத் தடையுமின்றி அவனை வணங்கும் இடத்தைப் பெறுவதற்காக புலம்பெயர்ந்து செல்லுங்கள். திட்டமாக மறுமை நாளில் பொறுமையாளர்கள் எண்ணிக்கை, அளவின்றி கூலி வழங்கப்படுவார்கள். ஏனெனில் அந்தளவுக்கு அது அதிகமான பலவகையானதாகும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• رعاية الله للإنسان في بطن أمه.
1. தாயின் வயிற்றில் மனிதனை அல்லாஹ் பராமரித்தல்.

• ثبوت صفة الغنى وصفة الرضا لله.
2. தேவையற்று இருத்தல், திருப்தி என்ற இரு பண்புகளும் அல்லாஹ்வுக்கு இருக்கின்றன என்பது உறுதியாகிறது.

• تعرّف الكافر إلى الله في الشدة وتنكّره له في الرخاء، دليل على تخبطه واضطرابه.
3. நிராகரிப்பாளன் துன்பத்தில்தான் இறைவனை அறிந்துகொள்கிறான். மகிழ்ச்சியில் இறைவனை மறுக்கிறான். இது அவனது தடுமாற்றத்தின் அடையாளமாகும்.

• الخوف والرجاء صفتان من صفات أهل الإيمان.
4. அச்சமும் ஆதரவும் நம்பிக்கையாளர்களின் பண்புகளில் காணப்படும் இரு பண்புகளாகும்.

 
අර්ථ කථනය පරිච්ඡේදය: අස් සුමර්
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න