Check out the new design

Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht * - Përmbajtja e përkthimeve


Përkthimi i kuptimeve Surja: En Neml   Ajeti:
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَیْرٌ مِّنْهَا ۚ— وَهُمْ مِّنْ فَزَعٍ یَّوْمَىِٕذٍ اٰمِنُوْنَ ۟
27.89. நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவாறு மறுமை நாளில் வருபவர்களுக்கு சுவனம் உண்டு. அவர்கள் மறுமை நாளின் திடுக்கத்தை விட்டும் அல்லாஹ்வின் பாதுகாப்பினால் பாதுகாவல் பெற்றிருப்பார்கள்.
Tefsiret në gjuhën arabe:
وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ فَكُبَّتْ وُجُوْهُهُمْ فِی النَّارِ ؕ— هَلْ تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
27.90. நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களைக் கொண்டு வருபவர்களுக்கு நரகம்தான் உண்டு. அவர்கள் நரகத்தில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள். கண்டிக்கும் விதமாகவும் இழிவுபடுத்தும் விதமாகவும் அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் உலகில் செய்த நிராகரிப்பான மற்றும் பாவமான செயல்களைத் தவிர வேறு எதற்கும் கூலி கொடுக்கப்படவில்லையே!.
Tefsiret në gjuhën arabe:
اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ الَّذِیْ حَرَّمَهَا وَلَهٗ كُلُّ شَیْءٍ ؗ— وَّاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟ۙ
27.91. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் இந்த நகரத்தை - மக்காவை - கண்ணியப்படுத்திய இறைவனை வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன். இந்த நகரத்தில் இரத்தம் சிந்தப்படக்கூடாது, எவர் மீதும் அநீதி இழைக்கப்படக்கூடாது, இங்குள்ள மரங்கள் வெட்டப்படக்கூடாது, விலங்குகள் வேட்டையாடப்படக்கூடாது. எல்லாவற்றின் ஆட்சியதிகாரமும் அவனுக்கே உரியது. நான் அவனுக்கு வழிப்பட்டு அடிபணிந்தவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்றும் ஏவப்பட்டுள்ளேன்.
Tefsiret në gjuhën arabe:
وَاَنْ اَتْلُوَا الْقُرْاٰنَ ۚ— فَمَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ ضَلَّ فَقُلْ اِنَّمَاۤ اَنَا مِنَ الْمُنْذِرِیْنَ ۟
27.92. நான் இந்தக் குர்ஆனை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் ஏவப்பட்டுள்ளேன். யார் இதனைக்கொண்டு நேர்வழி பெற்று இதன்படி செயல்படுவாரோ அவர் தனக்குத்தான் நேர்வழியை தேடிக் கொண்டார். யார் வழிகெட்டு, அதில் இருப்பவைகளை விட்டும் நெறிபிறழ்ந்து, அதனை மறுத்து, அதன்படி செயல்படவில்லையோ, நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு உங்களை எச்சரிக்கை செய்பவர்களில் ஒருவன்தான். உங்களுக்கு நேர்வழியளிக்கும் அதிகாரம் என் கையில் இல்லை.”
Tefsiret në gjuhën arabe:
وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ سَیُرِیْكُمْ اٰیٰتِهٖ فَتَعْرِفُوْنَهَا ؕ— وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟۠
27.93. -தூதரே!- நீர் கூறுவீராக: “எண்ணற்ற அருட்கொடைகளை அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். உங்களிலும் வானத்திலும் பூமியிலும் வாழ்வாதாரத்திலும் விரைவில் தன் சான்றுகளை அவன் காட்டுவான். அப்போது உங்களை சத்தியத்தை ஏற்றுக்கொள்ள நேர்வழிவழிகாட்டும் அறிவைப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் செயல்களை உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. மாறாக அவன் அவற்றை அறிவான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.
Tefsiret në gjuhën arabe:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• الإيمان والعمل الصالح سببا النجاة من الفزع يوم القيامة.
1. ஈமானும் நற்செயலும் மறுமை நாளின் பதற்றத்திலிருந்து காப்பாற்றும் இரு காரணிகளாகும்.

• الكفر والعصيان سبب في دخول النار.
2. அல்லாஹ்வை நிராகரிப்பதும் அவனுடைய கட்டளைக்கு மாறுசெய்வதும் நரகத்தில் தள்ளிவிடும் காரணிகளாகும்.

• تحريم القتل والظلم والصيد في الحرم.
3. ஹரம் எல்லைக்குள் கொலை செய்யவோ, அநீதி இழைக்கவோ, வேட்டையாடவோ கூடாது.

• النصر والتمكين عاقبة المؤمنين.
4. வெற்றியும் அதிகாரத்தைப் பெறுவதும் நம்பிக்கையாளர்களின் இறுதி முடிவாகும்.

 
Përkthimi i kuptimeve Surja: En Neml
Përmbajtja e sureve Numri i faqes
 
Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht - Përmbajtja e përkthimeve

Botuar nga Qendra e Tefsirit për Studime Kuranore.

Mbyll