Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numri i faqes:close

external-link copy
8 : 17

عَسٰی رَبُّكُمْ اَنْ یَّرْحَمَكُمْ ۚ— وَاِنْ عُدْتُّمْ عُدْنَا ۘ— وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِیْنَ حَصِیْرًا ۟

உங்கள் இறைவன் உங்களுக்கு கருணை புரியலாம். நீங்கள் (அழிச்சாட்டியத்தின் பக்கம்) திரும்பினால் நாமும் (உங்களைத் தண்டிக்க) திரும்புவோம். நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தை விரிப்பாக ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
9 : 17

اِنَّ هٰذَا الْقُرْاٰنَ یَهْدِیْ لِلَّتِیْ هِیَ اَقْوَمُ وَیُبَشِّرُ الْمُؤْمِنِیْنَ الَّذِیْنَ یَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا كَبِیْرًا ۟ۙ

நிச்சயமாக இந்த குர்ஆன் மிகச் சரியானதின் பக்கம் நேர்வழி காட்டுகிறது; நன்மைகளை செய்யும் நம்பிக்கையாளர்களுக்கு “நிச்சயமாக அவர்களுக்கு பெரிய கூலி உண்டு” என்று நற்செய்தி கூறுகிறது; info
التفاسير:

external-link copy
10 : 17

وَّاَنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟۠

“நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள், துன்புறுத்தக்கூடிய வேதனையை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறோம்” (என்றும் எச்சரிக்கிறது). info
التفاسير:

external-link copy
11 : 17

وَیَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالْخَیْرِ ؕ— وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا ۟

மனிதன் அவன் நன்மைக்கு பிரார்த்திப்பதைப் போலவே தீமைக்கும் பிரார்த்திக்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
12 : 17

وَجَعَلْنَا الَّیْلَ وَالنَّهَارَ اٰیَتَیْنِ فَمَحَوْنَاۤ اٰیَةَ الَّیْلِ وَجَعَلْنَاۤ اٰیَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ وَلِتَعْلَمُوْا عَدَدَ السِّنِیْنَ وَالْحِسَابَ ؕ— وَكُلَّ شَیْءٍ فَصَّلْنٰهُ تَفْصِیْلًا ۟

இரவையும் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; இரவின் அத்தாட்சியை மங்கச்செய்தோம்; பகலின் அத்தாட்சியை ஒளிரக்கூடியதாக ஆக்கினோம்; உங்கள் இறைவன் புறத்திலிருந்து அருளை நீங்கள் தேடுவதற்காகவும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்கள் இன்னும் நேரங்களின்) கணக்கையும் நீங்கள் அறிவதற்காகவும் (இப்படி அமைத்தோம்). எல்லா விஷயங்களையும் -அவற்றை நாம் விரிவாக விவரித்தோம். info
التفاسير:

external-link copy
13 : 17

وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰٓىِٕرَهٗ فِیْ عُنُقِهٖ ؕ— وَنُخْرِجُ لَهٗ یَوْمَ الْقِیٰمَةِ كِتٰبًا یَّلْقٰىهُ مَنْشُوْرًا ۟

எல்லா மனிதனுக்கும் அவனுடைய செய(ல்கள் பதிவு செய்யப்படும் ஓர் ஓ)லை(யை) அவனுடைய கழுத்தில் இணைத்தோம். அவனுக்கு மறுமை நாளில் (அதை) ஒரு புத்தகமாக வெளிப்படுத்துவோம். அதை அவன் (தனக்கு முன்) விரிக்கப்பட்டதாக சந்திப்பான். info
التفاسير:

external-link copy
14 : 17

اِقْرَاْ كِتٰبَكَ ؕ— كَفٰی بِنَفْسِكَ الْیَوْمَ عَلَیْكَ حَسِیْبًا ۟ؕ

“உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படி!; இன்று உனக்கெதிராக விசாரிக்க நீயே போதுமானவன்.” info
التفاسير:

external-link copy
15 : 17

مَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ؕ— وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ؕ— وَمَا كُنَّا مُعَذِّبِیْنَ حَتّٰی نَبْعَثَ رَسُوْلًا ۟

எவர் நேர்வழி செல்வாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. எவர் வழிகெடுவாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்கெதிராகத் தான். சுமக்கக்கூடியது மற்றொன்றின் (பாவச்) சுமையை சுமக்காது. நாம் ஒரு தூதரை அனுப்பும் வரை (எவரையும்) வேதனை செய்பவர்களாக நாம் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
16 : 17

وَاِذَاۤ اَرَدْنَاۤ اَنْ نُّهْلِكَ قَرْیَةً اَمَرْنَا مُتْرَفِیْهَا فَفَسَقُوْا فِیْهَا فَحَقَّ عَلَیْهَا الْقَوْلُ فَدَمَّرْنٰهَا تَدْمِیْرًا ۟

ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால், அதன் சுகவாசிகளை (நன்மையானவற்றை செய்யுமாறு) ஏவுவோம். (ஆனால், அவற்றை செய்யாமல்) அவர்கள் அதில் பாவம் புரிவார்கள். ஆகவே, அதன் மீது நம் (வேதனையின்) வாக்கு நிகழ்ந்துவிடும். அதை நாம் முற்றிலும் தரைமட்டமாக்கி விடுவோம். info
التفاسير:

external-link copy
17 : 17

وَكَمْ اَهْلَكْنَا مِنَ الْقُرُوْنِ مِنْ بَعْدِ نُوْحٍ ؕ— وَكَفٰی بِرَبِّكَ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِیْرًا بَصِیْرًا ۟

நூஹுக்குப் பின்னர் எத்தனையோ (பல) தலைமுறைகளை அழித்தோம். தன் அடியார்களின் பாவங்களை ஆழ்ந்தறிய, உற்று நோக்க உம் இறைவனே போதுமானவன். info
التفاسير: