Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்கஸஸ்   வசனம்:
وَمَاۤ اُوْتِیْتُمْ مِّنْ شَیْءٍ فَمَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا وَزِیْنَتُهَا ۚ— وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ وَّاَبْقٰی ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
28.60. உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த பொருட்கள் யாவும் இவ்வுலக வாழ்வின் நீங்கள் அனுபவிக்கும் இன்பங்களும் அதன் அலங்காரமும்தான். பின்னர் அவை அழிந்துவிடும். மறுமையில் அல்லாஹ்விடம் கிடைக்கும் மகத்தான கூலியே அற்ப உலக இன்பங்கள், அலங்காரங்களை விடச் சிறந்தது, நிலையானது. நீங்கள் இதனை விளங்கிக் கொண்டு நிலையான இன்பங்களுக்கு அழியக்கூடியவற்றைவிட முன்னுரிமை அளிக்க மாட்டீர்களா?
அரபு விரிவுரைகள்:
اَفَمَنْ وَّعَدْنٰهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِیْهِ كَمَنْ مَّتَّعْنٰهُ مَتَاعَ الْحَیٰوةِ الدُّنْیَا ثُمَّ هُوَ یَوْمَ الْقِیٰمَةِ مِنَ الْمُحْضَرِیْنَ ۟
28.61. நாம் யாருக்கு மறுமையில் சுவனத்தையும் அதிலுள்ள நிலையான இன்பங்களையும் அளிப்பேன் என்று வாக்களித்து அதனை உறுதியாக அடைய இருப்போர், நாம் யாருக்கு இவ்வுலக வாழ்க்கையில் செல்வங்களையும் அலங்காரத்தையும் அளித்து பின்னர் மறுமை நாளில் நரக நெருப்பின்பால் நிறுத்தப்படுவோருடன் சமமாவார்களா என்ன?
அரபு விரிவுரைகள்:
وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ ۟
28.62. அந்த நாளில் அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துக் கேட்பான்: “எனக்கு இணையானவர்கள் என எண்ணிக்கொண்டு என்னை விடுத்து எனக்கு இணையாக நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் எங்கே?”
அரபு விரிவுரைகள்:
قَالَ الَّذِیْنَ حَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ رَبَّنَا هٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَغْوَیْنَا ۚ— اَغْوَیْنٰهُمْ كَمَا غَوَیْنَا ۚ— تَبَرَّاْنَاۤ اِلَیْكَ ؗ— مَا كَانُوْۤا اِیَّانَا یَعْبُدُوْنَ ۟
28.63. வேதனை உறுதியாகி விட்ட நிராகரிப்பைப் பிரச்சாரம் செய்தோர் கூறுவார்கள்: “நாங்கள் வழிகெட்டவாறே இவர்களையும் வழிகெடுத்தோம். நாங்கள் இவர்களைவிட்டு விலகிக் கொள்கிறோம். இவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக நிச்சயமாக அவர்கள் ஷைத்தான்களைத்தான் வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَقِیْلَ ادْعُوْا شُرَكَآءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ یَسْتَجِیْبُوْا لَهُمْ وَرَاَوُا الْعَذَابَ ۚ— لَوْ اَنَّهُمْ كَانُوْا یَهْتَدُوْنَ ۟
28.64. அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் இருக்கும் இந்த இழிவிலிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக உங்களின் இணைதெய்வங்களை அழையுங்கள். அவர்கள் தங்களின் இணைதெய்வங்களை அழைப்பார்கள். ஆனால் அவை அவர்களின் அழைப்புக்குப் பதிலளிக்க மாட்டாது. தங்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ள வேதனையை அவர்கள் காண்பார்கள். அப்போது இவ்வுலகில் அவர்கள் சத்தியத்தின்பால் நேர்வழி அடைந்தவர்களாக இருந்திருக்கலாமே என ஆசைவைப்பார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَیَوْمَ یُنَادِیْهِمْ فَیَقُوْلُ مَاذَاۤ اَجَبْتُمُ الْمُرْسَلِیْنَ ۟
28.65. அந்த நாளில் அவர்களின் இறைவன் அவர்களை அழைத்து கேட்பான்: “நான் உங்களின்பால் அனுப்பிய என் தூதர்களுக்கு என்ன பதிலளித்தீர்கள்?”
அரபு விரிவுரைகள்:
فَعَمِیَتْ عَلَیْهِمُ الْاَنْۢبَآءُ یَوْمَىِٕذٍ فَهُمْ لَا یَتَسَآءَلُوْنَ ۟
28.66. அவர்கள் வாதிட்டுக்கொண்டிருந்தவை அனைத்தும் அவர்களை விட்டும் மறைந்துவிடும். எதையும் அவர்கள் நினைவுகூர மாட்டார்கள். அவர்கள் வேதனையில் விழக்கூடியவர்கள் என்பதை உறுதியாக அறிந்திருப்பதனால் ஏற்பட்ட அதிர்ச்சியின் பயங்கரத்தினால் ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسٰۤی اَنْ یَّكُوْنَ مِنَ الْمُفْلِحِیْنَ ۟
28.67. ஆயினும் இந்த இணைவைப்பாளர்களில் தனது நிராகரிப்பை விட்டு மீண்டு அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்கள், தாங்கள் வேண்டியதை பெற்று அஞ்சும் விஷயத்திலிருந்து வெற்றியடையலாம்.
அரபு விரிவுரைகள்:
وَرَبُّكَ یَخْلُقُ مَا یَشَآءُ وَیَخْتَارُ ؕ— مَا كَانَ لَهُمُ الْخِیَرَةُ ؕ— سُبْحٰنَ اللّٰهِ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
28.68. -தூதரே!- உம் இறைவன் தான் படைக்க நாடியதைப் படைக்கிறான். தன் நபித்துவத்திற்காகவும் கீழ்ப்டிதலுக்காகவும் தான் நாடியவர்களைத் தேர்ந்தெடுக்கிறான். அல்லாஹ்வின் மீது ஆட்சேபனை செய்வதற்கு இணைவைப்பாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் அவனுடன் சேர்த்து வணங்கும் இணைதெய்வங்களைவிட்டும் அவன் தூய்மையானவன்.
அரபு விரிவுரைகள்:
وَرَبُّكَ یَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا یُعْلِنُوْنَ ۟
28.69. அவர்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதையும் வெளிப்படுத்துவதையும் உம் இறைவன் அறிவான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
அரபு விரிவுரைகள்:
وَهُوَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— لَهُ الْحَمْدُ فِی الْاُوْلٰی وَالْاٰخِرَةِ ؗ— وَلَهُ الْحُكْمُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
28.70. அவனே அல்லாஹ். அவனைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் புகழனைத்தும் அவனுக்கே உரியது. தடையின்றி செல்லுபடியாகும் விதி அவனுக்கே உரியது. மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலிக்காகவும் அவனிடமே நீங்கள் மீண்டு வருவீர்கள்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• العاقل من يؤثر الباقي على الفاني.
1. அழியக்கூடியதை விட்டுவிட்டு நிலையானதைத் தேர்ந்தெடுப்பவனே அறிவாளியாவான்.

• التوبة تَجُبُّ ما قبلها.
2. பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்விடம் திரும்புவதால் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.

• الاختيار لله لا لعباده، فليس لعباده أن يعترضوا عليه.
3. தெரிவு அல்லாஹ்வுக்கே உரியது. அவனது அடியார்களுக்கல்ல. அவனுக்கு எதிராக ஆட்சேபனை செய்யும் உரிமை அடியார்களுக்கு இல்லை.

• إحاطة علم الله بما ظهر وما خفي من أعمال عباده.
4. தனது அடியார்களின் மறைவான, வெளிரங்கமான செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் அறிவு சூழ்ந்துள்ளது.

 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்கஸஸ்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக