அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (113) அத்தியாயம்: ஸூரா ஆலஇம்ரான்
لَیْسُوْا سَوَآءً ؕ— مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَآىِٕمَةٌ یَّتْلُوْنَ اٰیٰتِ اللّٰهِ اٰنَآءَ الَّیْلِ وَهُمْ یَسْجُدُوْنَ ۟
3.113. வேதக்காரர்கள் அனைவரும் சமமானவர்கள் அல்ல. அவர்களில் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நிலைத்திருக்கக்கூடிய ஒருகூட்டம் இருக்கின்றதனர். அவர்கள் அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களைப் பேணுகின்றனர். இரவுநேரங்களில் தொழுதவர்களாக அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகின்றனர். இந்த கூட்டத்தினர் முஹம்மது நபியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களாகும். அவர்களில் நபியவர்களை அடைந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• أعظم ما يميز هذه الأمة وبه كانت خيريتها - بعد الإيمان بالله - الأمر بالمعروف والنهي عن المنكر.
1. நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதே ஈமானுக்கு அடுத்ததாக இந்த சமூகம் பெற்றுள்ள மிகப்பெரும் சிறப்பம்சமாகும். அதன் மூலமே ஏனைய சமூகங்களை விட்டும் தனித்துவிளங்குகின்றது.

• قضى الله تعالى بالذل على أهل الكتاب لفسقهم وإعراضهم عن دين الله، وعدم وفائهم بما أُخذ عليهم من العهد.
2. வேதக்காரர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் புறக்கணித்ததனாலும் அவனிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததனாலும் அவர்களின்மீது அல்லாஹ் இழிவை விதித்துவிட்டான்.

• أهل الكتاب ليسوا على حال واحدة؛ فمنهم القائم بأمر الله، المتبع لدينه، الواقف عند حدوده، وهؤلاء لهم أعظم الأجر والثواب. وهذا قبل بعثة النبي محمد صلى الله عليه وسلم.
3. வேதக்காரர்கள் அனைவரும் சமமானவர்கள் அல்ல. நபியவர்களின் வருகைக்கு முன்னால் அவர்களிலும் அல்லாஹ்வின் கட்டளையைப் பின்பற்றி மார்க்க வரம்புகளைப் பேணி அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடியவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு மிகப்பெரும் கூலியும் வெகுமதியும் உண்டு.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (113) அத்தியாயம்: ஸூரா ஆலஇம்ரான்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - மொழிபெயர்ப்பு அட்டவணை

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

மூடுக