Check out the new design

పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం సూరహ్: ఇబ్రాహీమ్   వచనం:

இப்ராஹீம்

ఈ సూరహ్ (అధ్యాయం) యొక్క ప్రయోజనాలు:
إثبات قيام الرسل بالبيان والبلاغ، وتهديد المعرضين عن اتباعهم بالعذاب.
தூதர்கள் தெளிவுபடுத்தி எடுத்துரைக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றியதை நிரூபித்தலும் அவர்களைப் பின்பற்றாமல் புறக்கணித்தோரை அச்சுறுத்தலும்

الٓرٰ ۫— كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَیْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬— بِاِذْنِ رَبِّهِمْ اِلٰی صِرَاطِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟ۙ
14.1. (الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. -தூதரே!- அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் உதவியைப் பெற்று நீர் மக்களை நிராகரிப்பு, அறியாமை, வழிகேடு ஆகியவற்றிலிருந்து வெளியேற்றி ஈமான், அறிவு, இஸ்லாமிய மார்க்கத்திற்கான வழிகாட்டல் ஆகியவற்றின் பக்கம் கொண்டு வருவதற்காகவே நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம். இஸ்லாமிய மார்க்கமே யாவற்றையும் மிகைத்த அல்லாஹ்வின் பாதையாகும். அவனை யாராலும் மிகைக்க முடியாது. எல்லாவற்றிலும் அவன் புகழுக்குரியவன்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اللّٰهِ الَّذِیْ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَوَیْلٌ لِّلْكٰفِرِیْنَ مِنْ عَذَابٍ شَدِیْدِ ۟ۙ
14.2. வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனுடைய படைப்பில் எதுவும் அவனுக்கு இணையாக்கப்படக் கூடாது. நிராகரித்தவர்களை கடும் வேதனை வந்தடையும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
١لَّذِیْنَ یَسْتَحِبُّوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا عَلَی الْاٰخِرَةِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ؕ— اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍۢ بَعِیْدٍ ۟
14.3. நிராகரிப்பாளர்கள் மறுமை, அதன் நிலையான இன்பங்களுக்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கை, அதன் அழியக்கூடிய இன்பங்களை விரும்புகிறார்கள். மக்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள். அதில் யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக அது மோசமானதாகவும் சத்தியத்தை விட்டும் நெறிபிறழ்ந்தும் கோணலாகவும் இருக்க வேண்டும் என நாடுகிறார்கள். இந்த பண்புகளை உடையவர்கள் சரியானவை, சத்தியத்தை விட்டும் தூரமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِیُبَیِّنَ لَهُمْ ؕ— فَیُضِلُّ اللّٰهُ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
14.4. நாம் அனுப்பிய தூதர்கள் அனைவரையும் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்த தூதை மக்கள் இலகுவாக புரிந்துகொள்ளும் பொருட்டு அவரவர் சமூகம் பேசுகிற மொழியிலேயே அனுப்பினோம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ள வேண்டும் என்று அவர்களை நிர்ப்பந்திப்பதற்காக நாம் அவர்களை அனுப்பவில்லை. அல்லாஹ் தான் நாடியவர்களை தன் நீதியால் வழிதவறச் செய்கிறான். தான் நாடியவர்களுக்கு தன் அருளால் நேர்வழி காட்டுகிறான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், ஏற்பாட்டில் அவன் ஞானம்மிக்கவன்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬— وَذَكِّرْهُمْ بِاَیّٰىمِ اللّٰهِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟
14.5. நாம் மூஸாவை அனுப்பினோம். அவரது நம்பகத் தன்மையையும், அவர் தன் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை அறிவிக்கும் சான்றுகளைக் கொண்டு அவரை வலுப்படுத்தினோம். அவருடைய சமூகத்தை நிராகரிப்பு, அறியாமை என்பவற்றிலிருந்து ஈமான், அறிவு ஆகியவற்றின் பக்கம் வெளியேற்றுமாறு நாம் அவருக்குக் கட்டளையிட்டோம். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்த நாட்களை அவர்களுக்கு நினைவூட்டுமாறு நாம் அவருக்குக் கட்டளையிட்டோம். நிச்சயமாக இந்த நாட்களில், அல்லாஹ்வின் ஏகத்துவத்தையும், அவனுடைய மகத்தான வல்லமையையும், நம்பிக்கையாளர்களின் மீது அவனது அருள் புரிதலையும் அறிவிக்கக்கூடிய தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுடைய அத்தாட்சி, அருட்கொடைகளுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்தும் பொறுமையாளர்கள்தாம் இந்த நாட்களைக் கொண்டு பயனடைவார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• أن المقصد من إنزال القرآن هو الهداية بإخراج الناس من ظلمات الباطل إلى نور الحق.
1. மக்களை அசத்தியம் என்னும் இருள்களிலிருந்து சத்தியம் என்னும் ஒளியை நோக்கி வெளியேற்றி நேர்வழி காட்டுவதே குர்ஆன் இறக்கப்பட்டதன் நோக்கமாகும்.

• إرسال الرسل يكون بلسان أقوامهم ولغتهم؛ لأنه أبلغ في الفهم عنهم، فيكون أدعى للقبول والامتثال.
2. தூதர்கள் அவரவர் சமூக மொழியிலேயே அனுப்பப்பட்டார்கள். ஏனெனில் அதுவே அவர்கள் கூற வருவதை மக்கள் நன்கு புரிவதற்கும், ஏற்றுச் செயற்படுவதற்கும் வழிவகுக்கும்.

• وظيفة الرسل تتلخص في إرشاد الناس وقيادتهم للخروج من الظلمات إلى النور.
3. சுருங்கக்கூறின் இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் வெளியேறுவதற்கு, மக்களுக்கு வழிகாட்டுவதே தூதர்களின் பணியாகும்.

 
భావార్ధాల అనువాదం సూరహ్: ఇబ్రాహీమ్
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం - అనువాదాల విషయసూచిక

ఇది తఫ్సీర్ అధ్యయన కేంద్రం ద్వారా విడుదల చేయబడింది.

మూసివేయటం