Check out the new design

పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం సూరహ్: ఆలె ఇమ్రాన్   వచనం:
فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ لَّمْ یَمْسَسْهُمْ سُوْٓءٌ ۙ— وَّاتَّبَعُوْا رِضْوَانَ اللّٰهِ ؕ— وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَظِیْمٍ ۟
3.174. அவர்கள் ஹம்ராவுல்அஸதிலிருந்து அல்லாஹ்விடம் பெற்ற பெரும் நன்மையோடும் உயர்ந்த அந்தஸ்துகளோடும் திரும்பினார்கள். காயமோ உயிர்ச்சேதமோ அவர்களுக்கு ஏற்படாது எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பாக திரும்பினர். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுக்கு மாறுசெய்யாது அவனைத் திருப்திபடுத்தும் செயல்களைப் பின்பற்றினார்கள். அல்லாஹ்வை நம்பிக்கைகொண்ட தன் அடியார்கள்மீது பேரருள் புரியக்கூடியவன்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اِنَّمَا ذٰلِكُمُ الشَّیْطٰنُ یُخَوِّفُ اَوْلِیَآءَهٗ ۪— فَلَا تَخَافُوْهُمْ وَخَافُوْنِ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
3.175. ஷைத்தான்தான் தன் உதவியாளர்களின் மூலம் உங்களை அச்சமூட்டுகிறான். எனவே அவர்களுக்கு நீங்கள் பயப்படாதீர்கள். ஏனெனில், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் உண்மையாகவே நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ் ஒருவனுக்கே கீழ்ப்படிந்து அவனை அஞ்சுங்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَلَا یَحْزُنْكَ الَّذِیْنَ یُسَارِعُوْنَ فِی الْكُفْرِ ۚ— اِنَّهُمْ لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ؕ— یُرِیْدُ اللّٰهُ اَلَّا یَجْعَلَ لَهُمْ حَظًّا فِی الْاٰخِرَةِ ۚ— وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟
3.176. தூதரே! நயவஞ்சகர்கள் மதம்மாறி நிராகரிப்பில் விரைந்துசெல்வது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். அவர்களால் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு, அவனுக்குக் கட்டுப்படுவதை விட்டும் தூரமாகி தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு அவர்களைக் கைவிடுவதனூடாக மறுமையின் இன்பங்களில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று அல்லாஹ் விரும்புகிறான். அங்கு நரகத்தில் அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اِنَّ الَّذِیْنَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْاِیْمَانِ لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
3.177. ஈமானுக்குப் பதிலாக நிராகரிப்பை வாங்கிக் கொண்டவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள். மறுமையில் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَلَا یَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِیْ لَهُمْ خَیْرٌ لِّاَنْفُسِهِمْ ؕ— اِنَّمَا نُمْلِیْ لَهُمْ لِیَزْدَادُوْۤا اِثْمًا ۚ— وَلَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟
3.178. தங்கள் இறைவனை நிராகரித்து அவனுடைய சட்டங்களுக்கு மாறாகச் செயல்படுபவர்கள், தமது இறைநிராகரிப்பில் தமக்கு வழங்கப்பட்ட அவகாசத்தையும் நீண்ட ஆயுளையும் தமக்கு நன்மையென எண்ணிவிட வேண்டாம். அவர்கள் எண்ணுவது போலல்ல. நாம் அவர்களுக்கு அவகாசம் அளிப்பதெல்லாம் அவர்களின் பாவச்சுமைகளை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவர்களுக்கு இழிவுதரும் வேதனை உண்டு.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
مَا كَانَ اللّٰهُ لِیَذَرَ الْمُؤْمِنِیْنَ عَلٰی مَاۤ اَنْتُمْ عَلَیْهِ حَتّٰی یَمِیْزَ الْخَبِیْثَ مِنَ الطَّیِّبِ ؕ— وَمَا كَانَ اللّٰهُ لِیُطْلِعَكُمْ عَلَی الْغَیْبِ وَلٰكِنَّ اللّٰهَ یَجْتَبِیْ مِنْ رُّسُلِهٖ مَنْ یَّشَآءُ ۪— فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۚ— وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَكُمْ اَجْرٌ عَظِیْمٌ ۟
3.179. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ், நயவஞ்சகர்களையும் உண்மையான நம்பிக்கையாளர்களையும் வேறுபடுத்தாமல் நீங்கள் இருக்கும் நிலையிலேயே அப்படியே உங்களை விட்டுவிடுவது அல்லாஹ்வின் ஞானத்திற்கு ஏற்புடையதல்ல. பொறுப்புகளையும் சோதனைகளையும் அளித்து உங்களில் நம்பிக்கையாளர்களையும் நயவஞ்சகர்களையும் அவன் வேறுபடுத்துவான். நம்பிக்கையாளர்களையும் நயவஞ்சகர்களையும் நீங்களே வேறுபடுத்திக்கொள்ளும் வகையில் உங்களுக்கு அவன் மறைவான விஷயங்களை அறிவிப்பதும் அவனது ஞானத்திற்கு ஏற்புடையதல்ல. ஆயினும் அல்லாஹ் தூதர்களில் தான் நாடியவர்களைத் தேர்ந்தெடுத்து அவருக்கு மறைவான விஷயங்களில் சிலவற்றை அறிவித்தும் கொடுக்கிறான். முஹம்மது நபிக்கு நயவஞ்சகர்களைக் குறித்து அறிவித்தது போன்று. எனவே அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் கொண்ட நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டு, அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சினால் உங்களுக்கு அல்லாஹ்விடம் மகத்தான கூலி இருக்கின்றது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَلَا یَحْسَبَنَّ الَّذِیْنَ یَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَیْرًا لَّهُمْ ؕ— بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ؕ— سَیُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— وَلِلّٰهِ مِیْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟۠
3.180. அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளில் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையைத் தடுத்து, கஞ்சத்தனம் செய்பவர்கள், அதனைத் தங்களுக்கு நல்லதென எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீங்காகும். மறுமைநாளில் அவர்கள் கஞ்சத்தனம் செய்த பொருட்கள் அவர்களின் கழுத்துகளில் மாட்டப்பட்டு வேதனைப்படுத்தப்படுவார்கள். வானங்களிலும் பூமியிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. படைப்புகள் அனைத்தும் அழிந்த பிறகும் அவன் என்றென்றும் நிலைத்திருப்பான். நீங்கள் செய்யும் நுனுக்கமானவற்றையும் அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• ينبغي للمؤمن ألا يلتفت إلى تخويف الشيطان له بأعوانه وأنصاره من الكافرين، فإن الأمر كله لله تعالى.
1. நிராகரிப்பாளர்களான தன் உதவியாளர்களைக் கொண்டு ஷைத்தான் அச்சமூட்டுவதை நம்பிக்கையாளன் சிறிதும் பொருட்படுத்தக்கூடாது. ஏனெனில் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது.

• لا ينبغي للعبد أن يغتر بإمهال الله له، بل عليه المبادرة إلى التوبة، ما دام في زمن المهلة قبل فواتها.
2. அல்லாஹ் வழங்கும் அவகாசத்தைக்கொண்டு அடியான் ஏமாந்துவிடக்கூடாது. அந்த அவகாசம் முடிந்துவிடுவதற்குள் உடனே பாவமன்னிப்பின் பக்கம் விரைய வேண்டும்.

• البخيل الذي يمنع فضل الله عليه إنما يضر نفسه بحرمانها المتاجرة مع الله الكريم الوهاب، وتعريضها للعقوبة يوم القيامة.
3. அல்லாஹ் தனக்கு அருளிய அருட்கொடையை கொடுக்காது கஞ்சத்தனம் செய்பவன், தனக்குத் தானே தீங்கிழைத்துக்கொள்கிறான். வழங்குபவன், கொடையாளன் அல்லாஹ்வுடன் வியாபாரம் செய்யும் பாக்கியத்தை அவன் இழந்து தன்னை மறுமையில் தண்டனைக்கும் ஆளாக்கிக்கொள்கிறான்.

 
భావార్ధాల అనువాదం సూరహ్: ఆలె ఇమ్రాన్
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం - అనువాదాల విషయసూచిక

ఇది తఫ్సీర్ అధ్యయన కేంద్రం ద్వారా విడుదల చేయబడింది.

మూసివేయటం