పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం వచనం: (28) సూరహ్: సూరహ్ ఆలె ఇమ్రాన్
لَا یَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ۚ— وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَلَیْسَ مِنَ اللّٰهِ فِیْ شَیْءٍ اِلَّاۤ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰىةً ؕ— وَیُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ؕ— وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟
3.28. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து அவனை நிராகரித்தவர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். யார் இவ்வாறு செய்வாரோ அவர் அல்லாஹ்விடமிருந்து நீங்கிவிட்டார். அல்லாஹ்வும் அவரைவிட்டு நீங்கிவிட்டான். ஆயினும் அவர்களின் ஆட்சியதிகாரத்தில் நீங்கள் இருந்து, அதனால் உங்கள் உயிருக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவர்களின் தீங்குகளிலிருந்து தப்பிப்பதற்காக பகைமையை மறைத்து,மென்மையான பேச்சையும், பணிவான நடத்தையையும் வெளிப்படுத்துவதில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் தன்னைக் கொண்டு உங்களை எச்சரிக்கிறான். எனவே அவனுக்குப் பயந்துகொள்ளுங்கள். பாவங்களில் உழன்று அவனுடைய கோபத்திற்கு ஆளாகிவிடாதீர்கள். அடியார்கள் அனைவரும் தமது செயல்களுக்கேற்ப கூலியைப் பெறுவதற்காக மறுமைநாளில் அவன் பக்கமே திரும்ப வேண்டும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• أن التوفيق والهداية من الله تعالى، والعلم - وإن كثر وبلغ صاحبه أعلى المراتب - إن لم يصاحبه توفيق الله لم ينتفع به المرء.
1. பாக்கியமும் நேர்வழியும் அல்லாஹ்விடமிருந்தே கிடைப்பதாகும். மனிதன் கல்வியில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்துவிட்டாலும் அல்லாஹ்வின் அருள் இல்லையெனில் அவனால் அதிலிருந்து பயனடைய முடியாது.

• أن الملك لله تعالى، فهو المعطي المانع، المعز المذل، بيده الخير كله، وإليه يرجع الأمر كله، فلا يُسأل أحد سواه.
2. ஆட்சியதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது. அவன்தான் கொடுக்கக்கூடியவன், தடுக்கக்கூடியவன், கண்ணியமளிப்பவன், இழிவுபடுத்துபவன். அவன் கைவசமே நன்மைகள் அனைத்தும் உள்ளன. அனைத்தும் அவன் பக்கமே திரும்புகின்றன. அவனைத்தவிர யாரிடமும் கேட்கப்படக்கூடாது.

• خطورة تولي الكافرين، حيث توعَّد الله فاعله بالبراءة منه وبالحساب يوم القيامة.
3. நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்வது பாரதூரமான தவறாகும். அவ்வாறு நேசம் கொள்வோரை விட்டு அல்லாஹ் விலகிக்கொள்வதாகவும் மறுமையில் கடுமையான விசாரணை செய்வதாகவும் அல்லாஹ் எச்சரித்துள்ளான்.

 
భావార్ధాల అనువాదం వచనం: (28) సూరహ్: సూరహ్ ఆలె ఇమ్రాన్
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - అనువాదాల విషయసూచిక

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

మూసివేయటం