Check out the new design

పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం సూరహ్: లుఖ్మాన్   వచనం:

லுக்மான்

ఈ సూరహ్ (అధ్యాయం) యొక్క ప్రయోజనాలు:
الأمر باتباع الحكمة التي تضمّنها القرآن، والتحذير من الإعراض عنها.
அல்குர்ஆனில் பொதிந்துள்ள ஞானத்தைப் பின்பற்றுமாறு ஏவுதலும் அதனைப் புறக்கணிப்பதை விட்டும் எச்சரித்தலும்.

الٓمّٓ ۟ۚ
30.1. (الٓـمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْحَكِیْمِ ۟ۙ
31.2. -தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட இந்த வசனங்கள் ஞானத்தை கூறக்கூடிய வேதத்தின் வசனங்களாகும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
هُدًی وَّرَحْمَةً لِّلْمُحْسِنِیْنَ ۟ۙ
31.3. அது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் சிறந்த முறையில் நிறைவேற்றக்கூடியவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கின்றது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ یُوْقِنُوْنَ ۟ؕ
31.4. அவர்கள் தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள். தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தையும் வழங்குகிறார்கள். மறுமை நாளில் நடைபெறும் மீண்டும் எழுப்புதல், விசாரணை, நன்மை, தீமை என்பவற்றின் மீது உறுதியாக நம்பிக்கைகொள்கிறார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اُولٰٓىِٕكَ عَلٰی هُدًی مِّنْ رَّبِّهِمْ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
31.5. இந்த பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர்கள்தாம் தங்கள் இறைவனிடமிருந்து நேரான வழியைப் பெற்றவர்களாவர். இவர்கள்தாம்வேண்டுவதை பெற்று அஞ்சுவதை விட்டும் தூரமாகி வெற்றி பெறக்கூடியவர்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَمِنَ النَّاسِ مَنْ یَّشْتَرِیْ لَهْوَ الْحَدِیْثِ لِیُضِلَّ عَنْ سَبِیْلِ اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ ۖۗ— وَّیَتَّخِذَهَا هُزُوًا ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟
31.6. -நள்ர் இப்னு ஹாரிசைப் போன்ற- சில மனிதர்கள் வேடிக்கையான பேச்சுக்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு அதன் பக்கம் மக்களை அறிவில்லாமல் திருப்புவதற்காகவும் அவனுடைய வசனங்களை பரிகாசமாக எடுத்துக் கொள்வதற்காகவும் இவ்வாறு செய்கிறார்கள். இந்த பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர்களுக்கு மறுமையில் இழிவுமிக்க வேதனையுண்டு.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا وَلّٰی مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ یَسْمَعْهَا كَاَنَّ فِیْۤ اُذُنَیْهِ وَقْرًا ۚ— فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِیْمٍ ۟
31.7. நம்முடைய வசனங்கள் அவனிடம் எடுத்துரைக்கப்பட்டால் அதனை செவியேற்காமல் அவற்றை செவியேற்காதவனைப் போன்று, அவனுடைய செவிகளில் சத்தத்தை செவியேற்க முடியாமல் அடைப்பு உள்ளதைப் போன்று கர்வம் கொண்டவனாக புறக்கணித்து விடுகிறான். -தூதரே!- அவனுக்கு வேதனை மிக்க தண்டனை காத்திருக்கின்றது என்னும் நற்செய்தியைக் கூறிவிடுவீராக.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتُ النَّعِیْمِ ۟ۙ
31.8. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அருட்கொடைகள் நிறைந்த சுவனங்கள் உண்டு. அவற்றில் அல்லாஹ் அவர்களுக்குத் தயார்படுத்தியுள்ள இன்பங்களில் அவர்கள் திளைத்திருப்பார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
خٰلِدِیْنَ فِیْهَا ؕ— وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
31.9. அவற்றில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு அளித்த சந்தேகம் இல்லாத உறுதியான வாக்குறுதியாகும். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், சட்டத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
خَلَقَ السَّمٰوٰتِ بِغَیْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَاَلْقٰی فِی الْاَرْضِ رَوَاسِیَ اَنْ تَمِیْدَ بِكُمْ وَبَثَّ فِیْهَا مِنْ كُلِّ دَآبَّةٍ ؕ— وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِیْمٍ ۟
31.10. அல்லாஹ் வானங்களை உயரமானவையாக, தூண்களின்றி படைத்துள்ளான். பூமி உங்களைக்கொண்டு ஆட்டம் கண்டுவிடாமல் இருக்க அதில் உறுதியான மலைகளை ஊன்றியுள்ளான். அதன் மேற்பரப்பில் பலவகையான உயிரினங்களை பரவச் செய்துள்ளான். நாம் வானத்திலிருந்து மழை நீரை இறக்கி, மனிதர்களும் உயிரனங்களும் பயன்பெறும் அனைத்து வகையான அழகிய தாவரங்களையும் பூமியில் முளைக்கச் செய்துள்ளோம்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِیْ مَاذَا خَلَقَ الَّذِیْنَ مِنْ دُوْنِهٖ ؕ— بَلِ الظّٰلِمُوْنَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟۠
31.11. இவ்வாறு கூறப்பட்டவை அல்லாஹ்வின் படைப்புகளாகும். -இணைவைப்பாளர்களே!- அவனைத் தவிர நீங்கள் வணங்கும் தெய்வங்கள் எதைப் படைத்தன? மாறாக தாமே படைக்கப்பட்ட நிலையில் எதையும் படைக்காதவற்றை அல்லாஹ்வுக்கு இணையாக்கும் அநியாயக்காரர்கள் சத்தியத்தைவிட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• طاعة الله تقود إلى الفلاح في الدنيا والآخرة.
1. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றியின்பால் இட்டுச் செல்கிறது.

• تحريم كل ما يصد عن الصراط المستقيم من قول أو فعل.
2. நேரான வழியைவிட்டும் தடுக்கக்கூடிய சொல், செயல் என ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டதாகும்.

• التكبر مانع من اتباع الحق.
3. கர்வம் சத்தியத்தைப் பின்பற்றுவதற்குத் தடையாக இருக்கின்றது.

• انفراد الله بالخلق، وتحدي الكفار أن تخلق آلهتهم شيئًا.
4. படைப்பதில் அல்லாஹ் தனித்தவன். நிராகரிப்பாளர்களின் தெய்வங்கள் எதையாவது படைத்துக் காட்டுமாறு அவர்களுக்குச் சவால் விடப்பட்டுள்ளது.

 
భావార్ధాల అనువాదం సూరహ్: లుఖ్మాన్
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం - అనువాదాల విషయసూచిక

ఇది తఫ్సీర్ అధ్యయన కేంద్రం ద్వారా విడుదల చేయబడింది.

మూసివేయటం