పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం వచనం: (54) సూరహ్: సూరహ్ అల్-మాఇదహ్
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا مَنْ یَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِیْنِهٖ فَسَوْفَ یَاْتِی اللّٰهُ بِقَوْمٍ یُّحِبُّهُمْ وَیُحِبُّوْنَهٗۤ ۙ— اَذِلَّةٍ عَلَی الْمُؤْمِنِیْنَ اَعِزَّةٍ عَلَی الْكٰفِرِیْنَ ؗ— یُجَاهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا یَخَافُوْنَ لَوْمَةَ لَآىِٕمٍ ؕ— ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
5.54. நம்பிக்கைக் கொண்டவர்களே! உங்களில் யாரேனும் தம் மார்க்கத்தை விட்டு நிராகரிப்பின் பக்கம் திரும்பிச் சென்றால் - அல்லாஹ் அவர்களுக்குப் பதிலாக ஒரு சமூகத்தைக் கொண்டுவருவான். அவர்களது சிறந்த நடத்தையினால் அவர்கள் அவனை நேசிப்பார்கள், அவனும் அவர்களை நேசிப்பான். அவர்கள் நம்பிக்கையாளர்களுடன் கருணையாளர்களாகவும் நிராகரிப்பாளர்களுடன் கடினமானவர்களாவும் இருப்பார்கள். தங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போர் செய்வார்கள். படைப்பினங்களின் திருப்தியை விட அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னுரிமை வழங்குவதால் அவர்கள் பழிப்பவர்களின் பழிப்புக்கு அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ் தான் நாடிய அடியார்களுக்கு வழங்கும் அருளாகும். அல்லாஹ் அருள்புரிவதில் தாராளமானவன். அதற்குத் தகுதியானவர்களை நன்கறிந்து அவர்களுக்கு வழங்கக்கூடியவன் தகுதியற்றவர்களுக்கு அவன் அதனை வழங்குவதில்லை.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• التنبيه علي عقيدة الولاء والبراء التي تتلخص في الموالاة والمحبة لله ورسوله والمؤمنين، وبغض أهل الكفر وتجنُّب محبتهم.
1. உற்ற நட்பையும் நேசத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையார்களுக்கும் மட்டுமே உரித்தாக்கி நிராகரிப்பாளர்களை வெறுத்து அவர்களை நேசிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை ஞாபகமூட்டப்படுகின்றது.

• من صفات أهل النفاق: موالاة أعداء الله تعالى.
2. அல்லாஹ்வின் எதிரிகளுடன் நேசம் கொள்வது நயவஞ்சகர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

• التخاذل والتقصير في نصرة الدين قد ينتج عنه استبدال المُقَصِّر والإتيان بغيره، ونزع شرف نصرة الدين عنه.
3. மார்க்கத்திற்கு உதவுவதில் குறை செய்வது, குறை செய்தவர்களுக்குப் பதிலாக வேறு ஆட்கள் கொண்டுவரப்படுவதற்கும் மார்க்கத்திற்கு உதவிசெய்யும் பாக்கியம் அவரை விட்டும் பிடுங்கப்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது.

• التحذير من الساخرين بدين الله تعالى من الكفار وأهل النفاق، ومن موالاتهم.
4. அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரிகாசம் செய்யும் நிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள் ஆகியோரைப் பற்றியும், அவர்களை நேசிப்பதைப் பற்றியும் எச்சரிக்கை விடுத்தல்.

 
భావార్ధాల అనువాదం వచనం: (54) సూరహ్: సూరహ్ అల్-మాఇదహ్
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - అనువాదాల విషయసూచిక

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

మూసివేయటం