Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Surah: Maryam   Ayah:

மர்யம்

Ilan sa mga Layon ng Surah:
إبطال عقيدة نسبة الولد لله من المشركين والنصارى، وبيان سعة رحمة الله بعباده.
முஷ்ரிகீன்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வுக்கு பிள்ளைகள் இருப்பதாகக் கூறும் கொள்கை தவறு என்பதை நிறுவுதலும், அடியார்களின் மீது அல்லாஹ் வைத்துள்ள பரந்த கருணையைத் தெளிவுபடுத்தலும்

كٓهٰیٰعٓصٓ ۟
19.1. (كٓهيعٓصٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
Ang mga Tafsir na Arabe:
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهٗ زَكَرِیَّا ۟ۖۚ
19.2. இது உம் இறைவன் தன் அடியார் ஸகரிய்யாவின் மீது பொழிந்த அருளைப் பற்றிய செய்தியாகும். அதன் மூலம் படிப்பினை பெறுவதற்காக உமக்கு நாம் அதனை எடுத்துரைக்கின்றோம்.
Ang mga Tafsir na Arabe:
اِذْ نَادٰی رَبَّهٗ نِدَآءً خَفِیًّا ۟
19.3. அவன் தம் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்பொருட்டு தம் இறைவனை ரகசியமான முறையில் அழைத்த போது,
Ang mga Tafsir na Arabe:
قَالَ رَبِّ اِنِّیْ وَهَنَ الْعَظْمُ مِنِّیْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَیْبًا وَّلَمْ اَكُنْ بِدُعَآىِٕكَ رَبِّ شَقِیًّا ۟
19.4. அவர் கூறினார்: “என் இறைவா! என் எலும்புகள் பலவீனமடைந்து விட்டன. என் தலையில் நரை முடியும் அதிகமாகி விட்டது. உன்னிடம் பிரார்த்தனை செய்து நான் ஏமாற்றம் அடைந்ததில்லை. மாறாக நான் பிரார்த்தனை செய்த போதெல்லாம் நீ எனக்குப் பதிலளித்துள்ளாய்.
Ang mga Tafsir na Arabe:
وَاِنِّیْ خِفْتُ الْمَوَالِیَ مِنْ وَّرَآءِیْ وَكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا فَهَبْ لِیْ مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۟ۙ
19.5. நான் மரணித்த பிறகு என் உறவினர்கள் அவர்கள் உலக இன்பங்களில் மூழ்கியிருப்பதால் மார்க்கத்தின் கடமைகளை சரிவர நிறைவேற்ற மாட்டார்கள் என்று நான் அஞ்சுகிறேன். எனது மனைவியோ பிள்ளை பெறாத மலடியாக இருக்கிறாள். உன் புறத்திலிருந்து உதவிசெய்யும் பிள்ளையை எனக்கு வழங்குவாயாக.
Ang mga Tafsir na Arabe:
یَّرِثُنِیْ وَیَرِثُ مِنْ اٰلِ یَعْقُوْبَ ۗ— وَاجْعَلْهُ رَبِّ رَضِیًّا ۟
19.6. அவர் என்னிடமிருந்தும் யஅகூபின் குடும்பத்தினரிடம் இருந்தும் தூதுத்துவத்தை அனந்தரமாகப் பெறுவார். என் -இறைவா!- அவரை மார்க்கத்திலும், குணத்திலும், கல்வியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாக ஆக்குவாயாக.
Ang mga Tafsir na Arabe:
یٰزَكَرِیَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ ١سْمُهٗ یَحْیٰی ۙ— لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِیًّا ۟
19.7. அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். “ஸகரிய்யாவே! நாம் உமக்கு நற்செய்தி கூறுகின்றோம். உமது பிரார்த்தனைக்கு நாம் விடையளித்து விட்டோம். யஹ்யா என்னும் பெயருடைய ஆண் பிள்ளையை நாம் உமக்கு வழங்குகிறோம். நாம் இதற்கு முன்னர் வேறு யாருக்கும் இந்தப் பெயரை வைத்ததில்லை” என்று அவன் அவரை அழைத்துக் கூறினான்.
Ang mga Tafsir na Arabe:
قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِیْ عَاقِرًا وَّقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِیًّا ۟
19.8. அவர் அல்லாஹ்வின் வல்லமையை குறித்து வியந்தவராகக் கூறினார்: “எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? எனது மனைவியோ பிள்ளை பெற முடியாத மலடியாக இருக்கிறாள். நானோ எலும்புகள் பலவீனமடைந்து வாழ்கையின் இறுதியான முதுமையை அடைந்துவிட்டேனே!”
Ang mga Tafsir na Arabe:
قَالَ كَذٰلِكَ ۚ— قَالَ رَبُّكَ هُوَ عَلَیَّ هَیِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَیْـًٔا ۟
19.9. வானவர் கூறினார்: “விஷயம் நீர் கூறியவாறுதான். உமது மனைவியோ பிள்ளை பெறாத மலடியாகத்தான் இருக்கிறார். நிச்சயமாக நீரோ வாழ்கையின் இறுதியான முதுமையை அடைந்து எலும்புகளும் பலவீனமடைந்து விட்டன. ஆயினும் உம் இறைவன் கூறினான்: மலடியான தாயிடமிருந்தும், வாழ்வின் இறுதியை அடைந்துவிட்ட தந்தையைக் கொண்டும் யஹ்யாவை உமது இறைவன் படைப்பது எளிதானது. -ஸகரிய்யாவே!- இதற்கு முன்னர் குறிப்பிடத்தக்க ஒன்றுமே இல்லாமல் இருந்த உம்மை நான் படைக்கவில்லையா?”
Ang mga Tafsir na Arabe:
قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ— قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَیَالٍ سَوِیًّا ۟
19.10. ஸகரிய்யா கூறினார்: “என் இறைவா! வானவர்கள் கூறிய நற்செய்தியைக் குறித்து அமைதி பெற்று அதனை அறிவிக்கக்கூடிய அடையாளமொன்றை எனக்கு ஏற்படுத்துவாயாக.” அவன் கூறினான்: “உமக்கு அளிக்கப்பட்ட நற்செய்தி நிகழும் என்பதற்கான அடையாளம், எந்த நோயும் இன்றி மூன்று நாட்கள் வரை உம்மால் மக்களுடன் பேச முடியாதிருப்பதாகும். ஆனால் எந்த நோயுமற்ற ஆரோக்கியமானவராகவே இருப்பீர்.
Ang mga Tafsir na Arabe:
فَخَرَجَ عَلٰی قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰۤی اِلَیْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِیًّا ۟
19.11. ஸகரிய்யா தம் தொழுமிடத்திலிருந்து தம் மக்களிடம் வந்தார். பேசாமல் அவர்களிடம் சைகை மூலம் கூறினார்: “காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை துதிபாடுங்கள்.”
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• الضعف والعجز من أحب وسائل التوسل إلى الله؛ لأنه يدل على التَّبَرُّؤِ من الحول والقوة، وتعلق القلب بحول الله وقوته.
1. பலவீனமும், இயலாமையும் அல்லாஹ்விடம் தொடர்பு கொள்வதற்கான மிகச் சிறந்த சாதனமாகும். ஏனெனில் நிச்சயமாக அது தன்னிடம் எந்த பலமும், சக்தியும் இல்லை என்பதை ஒத்துக்கொண்டு உள்ளம் அல்லாஹ்வுடைய பலத்தில் சக்தியில் முழுமையாக ஆதரவு வைக்க வழிவகுக்கும்.

• يستحب للمرء أن يذكر في دعائه نعم الله تعالى عليه، وما يليق بالخضوع.
2. மனிதன் தன் பிரார்த்தனையில் அல்லாஹ் தன் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூர்வதும், அவனுக்கு தகுந்த முறையில் அவனை கீழ்படிவதும் விரும்பத்தக்கதாகும்.

• الحرص على مصلحة الدين وتقديمها على بقية المصالح.
3. மார்க்க நலன்களில் ஆர்வம் கொள்வதுடன், ஏனைய நலன்களைவிட மார்க்க ரீதியான நலன்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

• تستحب الأسماء ذات المعاني الطيبة.
4. நல்ல கருத்துக்கள் உடைய பெயர்கள் விரும்பத்தக்கவையாகும்.

 
Salin ng mga Kahulugan Surah: Maryam
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm - Indise ng mga Salin

Inilabas ng Markaz Tafsīr Lid-Dirāsāt Al-Qur’ānīyah (Sentro ng Tafsīr Para sa mga Pag-aaral Pang-Qur’an).

Isara