Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Ayah: (225) Surah: Al-Baqarah
لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟
2.225. நீங்கள் நோக்கமின்றி வீணாகச் செய்யும் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களிடம் கணக்குக் கேட்கமாட்டான். உதாரணமாக: "அல்லாஹ்வின்மீது சத்தியமாக"என்று பேச்சோடு பேச்சாக கூறுவது. இதற்காக நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் உங்களைத் தண்டிக்கவும் மாட்டான். ஆனால் நீங்கள் சத்தியம் செய்யும் நோக்குடன் செய்யும் சத்தியங்களுக்கு அவன் உங்களிடம் கணக்குக் கேட்பான். அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன். அவன் சகிப்புத்தன்மைமிக்கவனாக இருக்கின்றான். உங்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான்.
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• بيَّن الله تعالى أحكام النكاح والطلاق بيانًا شاملًا حتى يعرف الناس حدود الحلال والحرام فلا يتجاوزونها.
1. ஹலால்,ஹராமுடைய வரம்புகளை மக்கள் அறிந்து, அவற்றை மீறாமல் இருக்கும் பொருட்டு திருமணம் மற்றும் விவாகரத்து குறித்த சட்டங்களை, அல்லாஹ் பூரணமாக தெளிவுபடுத்திவிட்டான்.

• عظَّم الله شأن النكاح وحرم التلاعب فيه بالألفاظ فجعلها ملزمة، وألغى التلاعب بكثرة الطلاق والرجعة فجعل لها حدًّا بطلقتين رجعيتين ثم تحرم عليه إلا أن تنكح زوجا غيره ثم يطلقها، أو يموت عنها.
2. திருமணத்திற்கு அல்லாஹ் மிகவும் முக்கியத்துவம் வழங்கியுள்ளான். அதனால்தான் விவாகரத்து மற்றும் அதன்பின் மீட்டிக்கொள்ளுதல் என்பவற்றில் விளையாட்டாக வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தடைசெய்துள்ளான். அவ்வாறு பயன்படுத்தினால் அதனை செல்லுபடியானதாக ஆக்கி திருமணவிடயத்தில் விளையாடாமல் இருப்பதற்கு வழிவகுத்துள்ளான். எனவேதான் மீட்டிக்கொள்ளமுடியுமான விவாகரத்துகள் இரண்டு தடவைகள் மாத்திரமே என வரையறை இட்டுள்ளான். அதனையும் மீறி மூன்றாவது தடவையும் விவாகரத்துச் செய்தால் வேறொரு கணவனைத் திருமணம் செய்து அவர் விவாகரத்துச் செய்யும் வரை அல்லது அவர் மரணிக்கும் வரை தடைசெய்யப்பட்டவளாக ஆகிவிடுகிறாள்.

• المعاشرة الزوجية تكون بالمعروف، فإن تعذر ذلك فلا بأس من الطلاق، ولا حرج على أحد الزوجين أن يطلبه.
3. திருமண வாழ்க்கை நல்லமுறையில் இருக்க வேண்டும்.அது சாத்தியமில்லையெனத் தோன்றினால் விவாகரத்து பெற்றுக் கொள்வதில் எந்தக் குற்றமும் இல்லை. அதனை வேண்டுவதும் இருவருக்கும் அனுமதிக்கப்பட்டதாகும்.

 
Salin ng mga Kahulugan Ayah: (225) Surah: Al-Baqarah
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm - Indise ng mga Salin

Inilabas ng Markaz Tafsīr Lid-Dirāsāt Al-Qur’ānīyah (Sentro ng Tafsīr Para sa mga Pag-aaral Pang-Qur’an).

Isara