Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
94 : 21

فَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْیِهٖ ۚ— وَاِنَّا لَهٗ كٰتِبُوْنَ ۟

21.94. அவர்களில் யார் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்ட நிலையில் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களின் நற்செயல் ஒருபோதும் நிராகரிக்கப்படாது. மாறாக அல்லாஹ் அவனுக்கு நன்றி செலுத்தி அவனுடைய நன்மைகளை பன்மடங்காக்கிக் கொடுப்பான். மறுமை நாளில் தம் செயல்பதிவேட்டை பெற்றுக்கொண்டு அவர் மகிழ்ச்சியடைவார். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• التنويه بالعفاف وبيان فضله.
1. கற்பொழுக்கம் புகழப்பட்டு அதன் சிறப்பும் தெளிவபடுத்தப்பட்டுள்ளது. info

• اتفاق الرسالات السماوية في التوحيد وأسس العبادات.
2. ஓரிறைக்கொள்கையிலும் வணக்க வழிபாட்டின் அடிப்படைகளிலும் வானலோக ஷரீஅத்துகள் அனைத்தும் ஒன்றுபட்டுள்ளன. info

• فَتْح سد يأجوج ومأجوج من علامات الساعة الكبرى.
3. யஃஜுஜ், மஃஜுஜ் என்ற சமூகத்தவர்களின் தடுப்பு திறந்துவிடப்படுவது மறுமை நாளின் பெரும் அடையாளங்களில் ஒன்றாகும். info

• الغفلة عن الاستعداد ليوم القيامة سبب لمعاناة أهوالها.
4. மறுமை நாளுக்காக தயாராகுவதில் அலட்சியமாக இருப்பது அதன் பயங்கரங்களை அனுபவிப்பதற்குக் காரணமாகும். info