Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
100 : 23

لَعَلِّیْۤ اَعْمَلُ صَالِحًا فِیْمَا تَرَكْتُ كَلَّا ؕ— اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآىِٕلُهَا ؕ— وَمِنْ وَّرَآىِٕهِمْ بَرْزَخٌ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟

23.100. "நான் அங்கு மீண்டும் அனுப்பப்பட்டால் நற்செயல்களைச் செய்வேன்".நீ வேண்டுவது போலல்ல விடயம். நிச்சயமாக அது அவன் வாயால் கூறும் வெறும் வார்த்தைதான். ஒருவேளை அவன் உலக வாழ்க்கையின்பால் திருப்பி அனுப்பப்பட்டாலும் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டான். இறந்துவிட்ட அவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும்வரை உலகத்திற்கும், மறுமைக்கும் மத்தியில் ஒரு தடுப்பில் இருப்பார்கள். தவறியதை அடைவதற்கும், வீணாக்கியதை சீராக்கவும் மீண்டும் உலகத்தின்பால் திரும்ப மாட்டார்கள்.
info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• الاستدلال باستقرار نظام الكون على وحدانية الله.
1. பிரபஞ்சத்தின் நிலையான ஒழுங்கமைப்பு இறைவன் ஒருவனே என்பதற்கான ஆதாரமாகும். info

• إحاطة علم الله بكل شيء.
2. அல்லாஹ்வின் அறிவு அனைத்து பொருள்களையும் சூழ்ந்துள்ளது. info

• معاملة المسيء بالإحسان أدب إسلامي رفيع له تأثيره البالغ في الخصم.
3. தீமை செய்தோரை நன்மையால் எதிர்கொள்வது இஸ்லாம் வலியுறுத்தும் உன்னதமான பண்புகளில் ஒன்றாகும். அது எதிரியின் உள்ளத்தில் நன்கு தாக்கம் செலத்தவல்லதாகும். info

• ضرورة الاستعاذة بالله من وساوس الشيطان وإغراءاته.
4. ஷைத்தான்களின் ஊசலாட்டங்களிலிருந்தும், தூண்டுதல்களிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது இன்றியமையாததாகும். info