Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Ayah: (22) Surah: An-Noor
وَلَا یَاْتَلِ اُولُوا الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ یُّؤْتُوْۤا اُولِی الْقُرْبٰی وَالْمَسٰكِیْنَ وَالْمُهٰجِرِیْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۪ۖ— وَلْیَعْفُوْا وَلْیَصْفَحُوْا ؕ— اَلَا تُحِبُّوْنَ اَنْ یَّغْفِرَ اللّٰهُ لَكُمْ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
24.22. மார்க்கத்தில் சிறப்பினைப் பெற்றவர்களும் செல்வம் படைத்தவர்களும் தேவையுடைய அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்த உறவினர்களுக்கு அவர்கள் செய்த பாவத்தின் காரணமாக கொடுக்காமல் இருப்பதற்கு சத்தியம் செய்ய வேண்டாம். அவர்கள் தங்களின் உறவினர்களை மன்னித்து அவர்கள் செய்த பாவங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடட்டும். நீங்கள் அவர்களை மன்னிப்பதனால் அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டும், கண்டு கொள்ளாமல் விட வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவே அவனது அடியார்களும் அவனைப் பின்பற்றி நடக்கட்டும். இந்த வசனம் அபூபக்ர் (ரலி) அவர்களின் விஷயத்தில் இறங்கியதாகும். மிஸ்தஹ் அவதூறு பரப்புவதில் பங்கெடுத்ததால் அவருக்கு இனி எதுவும் வழங்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• إغراءات الشيطان ووساوسه داعية إلى ارتكاب المعاصي، فليحذرها المؤمن.
1. ஷைத்தான்களின் தூண்டுதல்களும் ஊசலாட்டங்களும் பாவங்களின்பால் இட்டுச்செல்லக்கூடியவையாக இருக்கின்றன. எனவே நம்பிக்கையாளன் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

• التوفيق للتوبة والعمل الصالح من الله لا من العبد.
2. பாவமன்னிப்பு மற்றும் நற்செயலுக்கான பாக்கியம் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. அடியானிடமிருந்து அல்ல.

• العفو والصفح عن المسيء سبب لغفران الذنوب.
3. ஒருவர் தனக்கு தீமை செய்தவர்களை மன்னிப்பது, அவரின் தவறை கண்டு கொள்ளாமல் விடுவது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கின்றது.

• قذف العفائف من كبائر الذنوب.
4. ஒழுக்கமுள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.

• مشروعية الاستئذان لحماية النظر، والحفاظ على حرمة البيوت.
5. பார்வையைப் பாதுகாத்து, வீடுகளின் கண்ணியத்தைப் பேணவே அனுமதி பெறுவது விதியாக்கப்பட்டுள்ளது.

 
Salin ng mga Kahulugan Ayah: (22) Surah: An-Noor
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm - Indise ng mga Salin

Inilabas ng Markaz Tafsīr Lid-Dirāsāt Al-Qur’ānīyah (Sentro ng Tafsīr Para sa mga Pag-aaral Pang-Qur’an).

Isara