Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Surah: An-Naml   Ayah:
فَلَمَّا جَآءَ سُلَیْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ ؗ— فَمَاۤ اٰتٰىنِ اللّٰهُ خَیْرٌ مِّمَّاۤ اٰتٰىكُمْ ۚ— بَلْ اَنْتُمْ بِهَدِیَّتِكُمْ تَفْرَحُوْنَ ۟
27.36. அவளுடைய தூதரும் அவரது உதவியாளர்களும் சுலைமானிடம் அன்பளிப்பைக் சுமந்துகொண்டு வந்தபோது சுலைமான் அதனை மறுத்தவராகக் கூறினார்: “என்னை உங்களைவிட்டுத் திருப்புவதற்காக செல்வங்களைக்கொண்டு நீங்கள் எனக்கு உதவி செய்கிறீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கிய தூதுத்துவமும் ஆட்சியதிகாரமும் செல்வமும் அவன் உங்களுக்கு வழங்கியதைவிடச் சிறந்ததாகும். மாறாக உங்களுக்கு அளிக்கப்படும் உலகின் அற்ப அன்பளிப்புகளைக்கொண்டு நீங்கள்தாம் மகிழ்ச்சியடையக்கூடியவர்கள்.
Ang mga Tafsir na Arabe:
اِرْجِعْ اِلَیْهِمْ فَلَنَاْتِیَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ ۟
27.37. சுலைமான் அவளுடைய தூதரிடம் கூறினார்: “நீர் கொண்டுவந்த அன்பளிப்பைக் எடுத்துக்கொண்டு அவர்களிடம் திரும்பிச் செல்லும். நாங்கள் அவளிடமும் அவளுடைய சமூகத்திடமும் அவர்களால் எதிர்கொள்ள முடியாத அளவுக்குப் படைகளோடு வருவோம். அவர்கள் என்னிடம் அடிபணிந்தவர்களாக வரவில்லையெனில் கண்ணியத்தோடு வாழும் அவர்களை இழிவடைந்தவர்களாகவும் அவமானப்பட்டோராகவும் ஸபஃ நகரில் இருந்து வெளியேற்றுவோம்.”
Ang mga Tafsir na Arabe:
قَالَ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَیُّكُمْ یَاْتِیْنِیْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ یَّاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟
27.38. சுலைமான் தம் அவைப் பிரதானிகளிடம் உரையாடியவாறு கேட்டார்: “அவையோரே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னர் அவளது ஆட்சிஅதிகார அரியணையை யார் என்னிடம் கொண்டுவருவார்?”
Ang mga Tafsir na Arabe:
قَالَ عِفْرِیْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ ۚ— وَاِنِّیْ عَلَیْهِ لَقَوِیٌّ اَمِیْنٌ ۟
27.39. மூர்க்கத்தனமான ஜின் ஒன்று கூறியது: “நீங்கள் தற்போது இருக்கும் உங்களின் அவையிலிருந்து எழுந்திருக்கும் முன்னரே நான் அவளது அரியணையைக் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் அதனைச் சுமப்பதற்குச் சக்தியுடையவனாகவும் அதிலுள்ளவற்றில் எதனையும் குறைத்துவிடாமல் எடுத்துவர முடியுமான நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன்.
Ang mga Tafsir na Arabe:
قَالَ الَّذِیْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْكِتٰبِ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ یَّرْتَدَّ اِلَیْكَ طَرْفُكَ ؕ— فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّیْ ۫— لِیَبْلُوَنِیْۤ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ ؕ— وَمَنْ شَكَرَ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّیْ غَنِیٌّ كَرِیْمٌ ۟
27.40. எதைக்கொண்டு பிரார்த்தித்தால் அவன் அங்கீகரிப்பானோ அத்தகைய அல்லாஹ்வின் மகத்தான திருநாமத்தை உள்ளடக்கிய வேத அறிவைப் பெற்றிருந்த, கற்றறிந்த நல்ல மனிதர் ஒருவர், “நான் நீங்கள் கண் இமைப்பதற்குள் நான் அதனைக் கொண்டு வந்துவிடுவேன். அல்லாஹ்விடம் நான் பிரார்த்திப்பதன் மூலம் அவன் அதனைக் கொண்டுவந்துவிடுவான் என்று கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார். அல்லாஹ் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தான். அவளது அரியணை தமக்கு முன்னால் நிலைபெற்று இருப்பதைக் கண்ட சுலைமான் கூறினார்: “இது என் இறைவனின் அருளாகும். இதன் மூலம் நான் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துகிறேனா அல்லது நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறேனா என்று அவன் சோதிக்கிறான். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவர் நிச்சயமாக அதன் பயனைத் தானே பெறுகிறார். அல்லாஹ் தேவையற்றவன். அடியார்கள் நன்றிசெலுத்துவதால் அவனுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. யார் அல்லாஹ்வின் அருள்களை மறுத்து அதற்காக அவனுக்கு நன்றி செலுத்தவில்லையோ நிச்சயமாக என் இறைவன் அடியார்களின் நன்றியைவிட்டும் தேவையற்றவன், கொடையாளன். தனது அருள்களை மறுப்பவனுக்கு அவன் அருள்புரிவதும் அவனது கொடைத்தன்மையே.
Ang mga Tafsir na Arabe:
قَالَ نَكِّرُوْا لَهَا عَرْشَهَا نَنْظُرْ اَتَهْتَدِیْۤ اَمْ تَكُوْنُ مِنَ الَّذِیْنَ لَا یَهْتَدُوْنَ ۟
27.41. சுலைமான் கூறினார்: “அவள் இருக்கும் ஆட்சி அதிகாரத்தின் அரியணையின் வடிவத்தை மாற்றிவிடுங்கள். அவள் இது தன் அரியணைதான் என்பதை அறிந்துகொள்கிறாளா அல்லது தமது பொருட்களை அடையாளம் காணமுடியாதவர்களில் உள்ளவளா? என்பதைப் பார்ப்போம்.
Ang mga Tafsir na Arabe:
فَلَمَّا جَآءَتْ قِیْلَ اَهٰكَذَا عَرْشُكِ ؕ— قَالَتْ كَاَنَّهٗ هُوَ ۚ— وَاُوْتِیْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِیْنَ ۟
27.42. சபாவின் அரசி சுலைமானிடம் வந்தபோது சோதிக்கும்பொருட்டு அவளிடம் கேட்கப்பட்டது: “இது உனது அரியணையைப் போன்றதா?” அவளும் கேள்விக்கேற்ப கூறினாள்: “ஆம். நிச்சயமாக இது அதைப்போன்றுதான் உள்ளது.” இது போன்ற விடயங்களுக்கு அல்லாஹ் ஆற்றலுடையவன் என்பதால் அவளுக்கு முன்னரே இது குறித்து எங்களுக்கு அறிவைத் தந்துவிட்டான். நாங்கள் அவனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, வழிப்பட்டவர்களாக இருக்கின்றோம்.
Ang mga Tafsir na Arabe:
وَصَدَّهَا مَا كَانَتْ تَّعْبُدُ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— اِنَّهَا كَانَتْ مِنْ قَوْمٍ كٰفِرِیْنَ ۟
27.43. அல்லாஹ்வை விடுத்து தன் சமூகத்தைப் பின்பற்றி அவள் வணங்கிக் கொண்டிருந்தவை ஓரிறைக்கொள்கையைவிட்டும் அவளைத் திருப்பி விட்டிருந்தது. நிச்சயமாக அவள் அல்லாஹ்வை நிராகரிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவள் என்பதால் அவர்களைப் போன்றே அவளும் நிராகரிப்பவளாகவே இருந்தாள்.
Ang mga Tafsir na Arabe:
قِیْلَ لَهَا ادْخُلِی الصَّرْحَ ۚ— فَلَمَّا رَاَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَیْهَا ؕ— قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِیْرَ ؕ۬— قَالَتْ رَبِّ اِنِّیْ ظَلَمْتُ نَفْسِیْ وَاَسْلَمْتُ مَعَ سُلَیْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
27.44. ‘மாளிகையினுள் நுழையும்’ என்று அவளிடம் கூறப்பட்டது. அதனைக் கண்ட அவள் அதனை நீர்த்தடாகம் என்று எண்ணி அதில் நனைந்து விடும் என்று தன் ஆடையை கெண்டைக் கால்களுக்கு மேல் உயர்த்திவிட்டாள். சுலைமான் அவளிடம், “நிச்சயமாக இது கண்ணாடி மாளிகையாகும்’ என்று கூறினார். அவளை இஸ்லாத்தின்பால் அழைத்தார். அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டவளாக அவள் கூறினாள்: “என் இறைவா! உன்னுடன் மற்றவர்களையும் வணங்கி நிச்சயமாக எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன். சுலைமானும் சேர்ந்து படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டுவிட்டேன்.
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• عزة الإيمان تحصّن المؤمن من التأثر بحطام الدنيا.
1. ஈமானிய கண்ணியம் நம்பிக்கையாளனை உலகின் அற்பப் பொருட்களால் பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.

• الفرح بالماديات والركون إليها صفة من صفات الكفار.
2. உலகியல் வசதிகளைக்கொண்டு மகிழ்ந்து, அதன் பக்கம் சாய்வது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

• يقظة شعور المؤمن تجاه نعم الله.
3. அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு முன்னால் நம்பிக்கையாளனின் உணர்வு விழிப்பாக இருக்கும்.

• اختبار ذكاء الخصم بغية التعامل معه بما يناسبه.
4. எதிரியின் விவேகத்திற்கு ஏற்ப அவனைக் கையாளும் எண்ணத்தில் அவனது விவேகத்தைச் சோதித்தல்.

• إبراز التفوق على الخصم للتأثير فيه.
5. எதிரியின் மீது தாக்கம் செலுத்துவதற்காக அவனை விட மேன்மையை வெளிப்படுத்தல்.

 
Salin ng mga Kahulugan Surah: An-Naml
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm - Indise ng mga Salin

Inilabas ng Markaz Tafsīr Lid-Dirāsāt Al-Qur’ānīyah (Sentro ng Tafsīr Para sa mga Pag-aaral Pang-Qur’an).

Isara