قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى ئايەت: (123) سۈرە: سۈرە نەھل
ثُمَّ اَوْحَیْنَاۤ اِلَیْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ— وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
16.123. பின்னர் -தூதரே!- ஏகத்துவத்திலும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகிக்கொள்வதிலும் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து அவனது மார்க்கத்தின் படி செயற்படுவதிலும் இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக என்று உமக்கு வஹி அறிவித்தோம். எல்லா மார்க்கங்களையும் விட்டு விலகி இஸ்லாத்தின்பால் முற்றிலும் சாய்ந்தவராக அதனைப் பின்பற்றுவீராக. இணைவைப்பாளர்கள் கூறுவதுபோல அவர் ஒருபோதும் இணைவைப்பாளராக இருந்ததில்லை. மாறாக அல்லாஹ் ஒருவனையே வணங்கக்கூடியவராக இருந்தார்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• اقتضت رحمة الله أن يقبل توبة عباده الذين يعملون السوء من الكفر والمعاصي، ثم يتوبون ويصلحون أعمالهم، فيغفر الله لهم.
1. நிராகரிப்பு, பாவங்கள் ஆகிய தீமைகளைச் செய்துவிட்டு திருந்தி தமது செயல்களை சீர்திருத்திக்கொள்ளும் தனது அடியார்களின் பாவமன்னிப்பை ஏற்று அவர்களை மன்னிப்பது அல்லாஹ்வின் அருளின் வெளிப்பாடாகும்.

• يحسن بالمسلم أن يتخذ إبراهيم عليه السلام قدوة له.
2. இப்ராஹீம் அலை அவர்களை முஸ்லிம் தனது முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதே சிறந்ததாகும்.

• على الدعاة إلى دين الله اتباع هذه الطرق الثلاث: الحكمة، والموعظة الحسنة، والمجادلة بالتي هي أحسن.
3. அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைப்போர் பின்வரும் மூன்று வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு நடத்தல், அழகிய உபதேசம், அழகிய முறையில் விவாதம் செய்தல்.

• العقاب يكون بالمِثْل دون زيادة، فالمظلوم منهي عن الزيادة في عقوبة الظالم.
4. தண்டனை குற்றத்துக்கு சமமாகவே இருக்க வேண்டும். அதிகரிக்கக் கூடாது. அநீதி இழைக்கப்பட்டவன் அநீதியிழைத்தவனை கூடுதலாகத் தண்டிப்பது தடுக்கப்பட்டதாகும்.

 
مەنالار تەرجىمىسى ئايەت: (123) سۈرە: سۈرە نەھل
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - تەرجىمىلەر مۇندەرىجىسى

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

تاقاش