Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ * - تەرجىمىلەر مۇندەرىجىسى

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

مەنالار تەرجىمىسى سۈرە: سەبەئ   ئايەت:
وَیَوْمَ یَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ یَقُوْلُ لِلْمَلٰٓىِٕكَةِ اَهٰۤؤُلَآءِ اِیَّاكُمْ كَانُوْا یَعْبُدُوْنَ ۟
இன்னும், அவன் அவர்கள் அனைவரையும் (உயிர்பிக்கச் செய்து) ஒன்று திரட்டும் நாளில், பிறகு, அவன் வானவர்களுக்குக் கூறுவான்: “இவர்கள் (இந்த இணைவைப்பாளர்கள்) உங்களை வணங்கிக் கொண்டிருந்தார்களா?”
ئەرەپچە تەپسىرلەر:
قَالُوْا سُبْحٰنَكَ اَنْتَ وَلِیُّنَا مِنْ دُوْنِهِمْ ۚ— بَلْ كَانُوْا یَعْبُدُوْنَ الْجِنَّ ۚ— اَكْثَرُهُمْ بِهِمْ مُّؤْمِنُوْنَ ۟
(வானவர்கள்) கூறுவார்கள்: (அல்லாஹ்வே!) நீ மகா தூயவன். அவர்கள் இன்றி, நீதான் எங்கள் பாதுகாவலன். மாறாக, அவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் அதிகமானவர்கள் அவர்களைத்தான் (-அந்த ஜின்களைத்தான்) நம்பிக்கை கொண்டவர்கள் ஆவார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
فَالْیَوْمَ لَا یَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍ نَّفْعًا وَّلَا ضَرًّا ؕ— وَنَقُوْلُ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّتِیْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ۟
ஆக, இன்றைய தினம் உங்களில் சிலர் சிலருக்கு நன்மை செய்வதற்கோ தீமை செய்வதற்கோ உரிமை பெறமாட்டார். இன்னும், அநியாயக்காரர்களுக்கு நாம் கூறுவோம்: “நீங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்த நரக தண்டனையை சுவையுங்கள்.”
ئەرەپچە تەپسىرلەر:
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا رَجُلٌ یُّرِیْدُ اَنْ یَّصُدَّكُمْ عَمَّا كَانَ یَعْبُدُ اٰبَآؤُكُمْ ۚ— وَقَالُوْا مَا هٰذَاۤ اِلَّاۤ اِفْكٌ مُّفْتَرًی ؕ— وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۙ— اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
அவர்கள் முன் தெளிவான நமது வசனங்கள் ஓதப்பட்டால், “உங்கள் மூதாதைகள் வணங்கிக்கொண்டிருந்தவற்றை விட்டும் இவர் உங்களைத் தடுக்க நாடுகிற ஓர் ஆடவரே தவிர (உண்மையான நபி) இல்லை” என்று கூறுகிறார்கள். இன்னும், அவர்கள் கூறினார்கள்: “இது (-இந்த வேதம்) இட்டுக்கட்டப்பட்ட பொய்யைத் தவிர (உண்மையான இறைவேதம்) இல்லை.” நிராகரித்தவர்கள் இந்த உண்மையான வேதத்தைப் பற்றி – அது தங்களிடம் சத்தியம் வந்தபோது - கூறினார்கள்: “இது தெளிவான சூனியமே தவிர (உண்மையான வேதம்) இல்லை.”
ئەرەپچە تەپسىرلەر:
وَمَاۤ اٰتَیْنٰهُمْ مِّنْ كُتُبٍ یَّدْرُسُوْنَهَا وَمَاۤ اَرْسَلْنَاۤ اِلَیْهِمْ قَبْلَكَ مِنْ نَّذِیْرٍ ۟ؕ
(இந்த குர்ஆனுக்கு முன்பாக) அவர்கள் படிப்பதற்கு வேதங்களை அவர்களுக்கு நாம் கொடுத்ததில்லை. இன்னும், உமக்கு முன்னர் அவர்களிடம் எச்சரிக்கும் தூதர் எவரையும் நாம் அனுப்பியதில்லை.
ئەرەپچە تەپسىرلەر:
وَكَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۙ— وَمَا بَلَغُوْا مِعْشَارَ مَاۤ اٰتَیْنٰهُمْ فَكَذَّبُوْا رُسُلِیْ ۫— فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟۠
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் பொய்ப்பித்தனர். இவர்கள் (நிராகரிக்கின்ற இந்த மக்காவாசிகள்) அவர்களுக்கு (-முன் சென்ற சமுதாயத்திற்கு) நாம் கொடுத்த (செல்வத்)தில் பத்தில் ஒன்றைக் கூட அடையவில்லை. இருந்தும் அவர்கள் (முந்தியக் கால காஃபிர்கள்) எனது தூதர்களை பொய்ப்பித்தனர். எனது மாற்றம் (-நான் அவர்களுக்குச் செய்த அருளை எடுத்துவிட்டு அவர்களுக்குக் கொடுத்த தண்டனை) எப்படி இருந்தது (என்று மக்கா வாசிகளே பாருங்கள்)!
ئەرەپچە تەپسىرلەر:
قُلْ اِنَّمَاۤ اَعِظُكُمْ بِوَاحِدَةٍ ۚ— اَنْ تَقُوْمُوْا لِلّٰهِ مَثْنٰی وَفُرَادٰی ثُمَّ تَتَفَكَّرُوْا ۫— مَا بِصَاحِبِكُمْ مِّنْ جِنَّةٍ ؕ— اِنْ هُوَ اِلَّا نَذِیْرٌ لَّكُمْ بَیْنَ یَدَیْ عَذَابٍ شَدِیْدٍ ۟
(நபியே!) கூறுவீராக! “நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான். (அதாவது) நீங்கள் அல்லாஹ்விற்காக ஒருவர் ஒருவராக, இருவர் இருவராக நில்லுங்கள். (இந்த நபியைப் பற்றி இவர் உண்மையாளரா அல்லது உண்மையாளர் இல்லையா என்று விவாதம் செய்யுங்கள். பிறகு ஒருவர் ஒருவராக தனித்து விடுங்கள்). பிறகு, சிந்தியுங்கள்.” உங்கள் இந்தத் தோழருக்கு பைத்தியம் அறவே இல்லை. கடுமையான தண்டனை (நிகழப் போவதற்)க்கு முன்னர் (அது பற்றி) எச்சரிப்பவராகவே தவிர அவர் இல்லை (என்பதை திட்டமாக அறிந்து கொள்வீர்கள்).
ئەرەپچە تەپسىرلەر:
قُلْ مَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍ فَهُوَ لَكُمْ ؕ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ ۚ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
(நபியே!) கூறுவீராக! நான் எதைக் கூலியாக உங்களிடம் கேட்டேனோ அது உங்களுக்கே இருக்கட்டும். (நான் உங்களுக்கு எடுத்துரைத்த அனைத்தும் உங்கள் நன்மைக்காகவே. நான் உங்களிடம் இதற்கு எதையும் கூலியாக கேட்கவில்லை!) எனது கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. அவன்தான் (எனது செயல்கள்; இன்னும், உங்கள் செயல்கள்) அனைத்தின் மீதும் சாட்சியாளன் ஆவான்.
ئەرەپچە تەپسىرلەر:
قُلْ اِنَّ رَبِّیْ یَقْذِفُ بِالْحَقِّ ۚ— عَلَّامُ الْغُیُوْبِ ۟
(நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக என் இறைவன் உண்மையான செய்தியை (நபிமார்களுக்கு) இறக்கி வைக்கிறான். அவன் மறைவான விஷயங்கள் அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.”
ئەرەپچە تەپسىرلەر:
 
مەنالار تەرجىمىسى سۈرە: سەبەئ
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ - تەرجىمىلەر مۇندەرىجىسى

شەيخ ئۆمەر شەرىپ ئىبنى ئابدۇسالام تەرجىمىسى.

تاقاش