Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ * - تەرجىمىلەر مۇندەرىجىسى

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

مەنالار تەرجىمىسى سۈرە: سەبەئ   ئايەت:
قُلْ جَآءَ الْحَقُّ وَمَا یُبْدِئُ الْبَاطِلُ وَمَا یُعِیْدُ ۟
(நபியே!) கூறுவீராக! “(குர்ஆன் என்ற) உண்மை வந்துவிட்டது. (இப்லீஸும் அல்லாஹ்வை அன்றி வணங்கப்படுகிற) பொய்யான தெய்வங்கள் புதிதாக படைக்கவும் மாட்டார்கள். (இறந்ததை) மீண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டார்கள்.” (அல்லாஹ்வை அன்றி யாருக்கும் படைக்கின்ற சக்தி அறவே இல்லை.)
ئەرەپچە تەپسىرلەر:
قُلْ اِنْ ضَلَلْتُ فَاِنَّمَاۤ اَضِلُّ عَلٰی نَفْسِیْ ۚ— وَاِنِ اهْتَدَیْتُ فَبِمَا یُوْحِیْۤ اِلَیَّ رَبِّیْ ؕ— اِنَّهٗ سَمِیْعٌ قَرِیْبٌ ۟
(நபியே!) கூறுவீராக! நான் வழிகெட்டால் நான் வழிகெடுவதெல்லாம் எனக்குத்தான் தீங்காக அமையும். நான் நேர்வழி பெற்றால் (அது) என் இறைவன் எனக்கு வஹ்யி அறிவிக்கின்ற காரணத்தால் ஆகும். (என் இறைவன் எனக்கு வஹ்யி அறிவித்த வேதத்தினால் நான் நேர்வழி பெறுகிறேன்.) நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், மிக சமீபமானவன் ஆவான்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَوْ تَرٰۤی اِذْ فَزِعُوْا فَلَا فَوْتَ وَاُخِذُوْا مِنْ مَّكَانٍ قَرِیْبٍ ۟ۙ
“(நமது பிடி வரும்போது) அவர்கள் திடுக்கிடுவார்கள். ஆனால், (அவர்கள் அதிலிருந்து) தப்பிக்கவே முடியாது. இன்னும், வெகு சமீபமான இடத்திலிருந்து அவர்கள் பிடிக்கப்பட்டுவிடுவார்கள். (பின்னர் தண்டிக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள்.)” (நபியே!) இதை நீர் பார்த்தால் (மிக ஆச்சரியமான ஒரு காரியத்தை பார்ப்பீர்.)
ئەرەپچە تەپسىرلەر:
وَّقَالُوْۤا اٰمَنَّا بِهٖ ۚ— وَاَنّٰی لَهُمُ التَّنَاوُشُ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟ۚ
அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையைப் பார்த்தபோது) அவனை (-அல்லாஹ்வை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுவார்கள். தூரமான இடத்திலிருந்து (-மறுமைக்கு சென்றுவிட்ட அவர்கள் அங்கிருந்துக் கொண்டு தவ்பா - பாவமீட்சியையும் இறை நம்பிக்கையையும்) அடைவது எங்கே அவர்களுக்கு சாத்தியமாகும். (அதாவது உலகத்தில் செய்ய வேண்டியதை மறுமையில் செய்ய ஆசைப்படுகிறார்கள். அங்கே ஆசைப்பட்டு என்ன ஆகப்போகிறது?!)
ئەرەپچە تەپسىرلەر:
وَقَدْ كَفَرُوْا بِهٖ مِنْ قَبْلُ ۚ— وَیَقْذِفُوْنَ بِالْغَیْبِ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟
திட்டமாக (இதற்கு) முன்னர் அவர்கள் இ(ந்த வேதத்)தை மறுத்து விட்டனர். அவர்கள் (சத்தியத்தை விட்டு) வெகு தூரமான இடத்தில் இருந்துகொண்டு கற்பனையாக அதிகம் பேசுகிறார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
وَحِیْلَ بَیْنَهُمْ وَبَیْنَ مَا یَشْتَهُوْنَ كَمَا فُعِلَ بِاَشْیَاعِهِمْ مِّنْ قَبْلُ ؕ— اِنَّهُمْ كَانُوْا فِیْ شَكٍّ مُّرِیْبٍ ۟۠
இதற்கு முன்னர் அவர்களின் (முந்தைய) கூட்டங்களுக்கு செய்யப்பட்டதைப் போன்று அவர்களுக்கு இடையிலும் அவர்கள் விரும்புவதற்கு இடையிலும் தடுக்கப்பட்டுவிடும். நிச்சயமாக இவர்கள் (உலகில் வாழ்ந்தபோது மறுமையைப் பற்றி) பெரிய சந்தேகத்தில்தான் இருந்தனர்.
ئەرەپچە تەپسىرلەر:
 
مەنالار تەرجىمىسى سۈرە: سەبەئ
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ - تەرجىمىلەر مۇندەرىجىسى

شەيخ ئۆمەر شەرىپ ئىبنى ئابدۇسالام تەرجىمىسى.

تاقاش