قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

بەت نومۇرى:close

external-link copy
102 : 2

وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّیٰطِیْنُ عَلٰی مُلْكِ سُلَیْمٰنَ ۚ— وَمَا كَفَرَ سُلَیْمٰنُ وَلٰكِنَّ الشَّیٰطِیْنَ كَفَرُوْا یُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ ۗ— وَمَاۤ اُنْزِلَ عَلَی الْمَلَكَیْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ ؕ— وَمَا یُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰی یَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ؕ— فَیَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا یُفَرِّقُوْنَ بِهٖ بَیْنَ الْمَرْءِ وَزَوْجِهٖ ؕ— وَمَا هُمْ بِضَآرِّیْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَیَتَعَلَّمُوْنَ مَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ ؕ— وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰىهُ مَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ۫ؕ— وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ ؕ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟

(யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியில் ஷைத்தான்கள் ஓதியவற்றைப் பின்பற்றினார்கள். ஸுலைமான் நிராகரிக்கவில்லை. எனினும் ஷைத்தான்கள் தான் நிராகரித்தார்கள். (அவர்கள்) மனிதர்களுக்கு சூனியத்தையும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் (என்ற இரு) வானவர்களுக்கு இறக்கப்பட்டவற்றையும் கற்பித்தார்கள். அவ்விரு(வான)வர்கள், "நாங்களெல்லாம் ஒரு சோதனையாவோம். ஆகவே. (இதைக் கற்று) நிராகரிக்காதே!" என்று கூறும் வரை (அதை) ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. எனவே, ஆணுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் எதன் மூலம் பிரிப்பார்களோ அதை அவ்விருவரிடமிருந்து கற்றார்கள். அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைப்பவர்களாக இல்லை. அவர்களுக்குப் பலனளிக்காத, அவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடியவற்றைத்தான் (அவர்கள்) கற்றார்கள். அதை எவர் விலைக்கு வாங்கினாரோ அவருக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை என்பதை திட்டவட்டமாக (அவர்கள்) அறிந்தார்கள். தங்களையே எதற்கு பகரமாக விற்றார்களோ அது திட்டமாக கெட்டது. (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! info
التفاسير:

external-link copy
103 : 2

وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْا وَاتَّقَوْا لَمَثُوْبَةٌ مِّنْ عِنْدِ اللّٰهِ خَیْرٌ ؕ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟۠

நிச்சயமாக அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (சூனியத்தை விட்டு விலகி) அல்லாஹ்வை அஞ்சினால் அல்லாஹ்விடமிருந்து(அவர்களுக்கு) கிடைக்கும் சன்மானம் திட்டமாக மிகச் சிறந்ததாகும். (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! info
التفاسير:

external-link copy
104 : 2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَقُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ؕ— وَلِلْكٰفِرِیْنَ عَذَابٌ اَلِیْمٌ ۟

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) "ராஇனா" என்று கூறாதீர்கள். "உன்ளுர்னா" என்று கூறுங்கள். (நபியின் கூற்றை முழுமையாகச்) செவிமடுங்கள். நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய வேதனை உண்டு. info
التفاسير:

external-link copy
105 : 2

مَا یَوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَلَا الْمُشْرِكِیْنَ اَنْ یُّنَزَّلَ عَلَیْكُمْ مِّنْ خَیْرٍ مِّنْ رَّبِّكُمْ ؕ— وَاللّٰهُ یَخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟

(நம்பிக்கையாளர்களே!) வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்கள் (தங்களிடம் உள்ளதைவிட) சிறந்தது எதுவும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள். அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்குத் தன் கருணையைச் சொந்தமாக்குகிறான். அல்லாஹ் பெரும் அருளுடையவன். info
التفاسير: