Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: نور   آیت:
یُقَلِّبُ اللّٰهُ الَّیْلَ وَالنَّهَارَ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِی الْاَبْصَارِ ۟
24.44. அல்லாஹ் இரவையும் பகலையும் நீளமாகவும் சுருக்கமாகவும் மாறிமாறி வரச்செய்கிறான். நிச்சயமாக மேற்கூறப்பட்ட அத்தாட்சிகளான இறைத்தன்மைக்கான ஆதாரங்களில் அகப் பார்வையுடையோருக்கு அல்லாஹ்வின் வல்லமையை, அவனின் தனித்துவத்தை எடுத்துரைக்கக்கூடிய படிப்பினை உண்டு.
عربی تفاسیر:
وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ ۚ— فَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰی بَطْنِهٖ ۚ— وَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰی رِجْلَیْنِ ۚ— وَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰۤی اَرْبَعٍ ؕ— یَخْلُقُ اللّٰهُ مَا یَشَآءُ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
24.45. அல்லாஹ் பூமியின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லக்கூடிய உயிரினங்கள் அனைத்தையும் விந்திலிருந்து படைத்துள்ளான். அவற்றில் சில பாம்பைப் போன்று தம் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன. அவ்வற்றில் சில, மனிதர்கள், பறவைகளைப் போன்று தம் இரு கால்களால் நடந்து செல்கின்றன. அவற்றில் சில கால்நடைகளைப் போன்று நான்கு கால்களால் செல்கின்றன. மேலே குறிப்பிடப்பட்ட, குறிப்பிடப்படாதவைகளில் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனுக்கு இயலாதது அல்ல.
عربی تفاسیر:
لَقَدْ اَنْزَلْنَاۤ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ ؕ— وَاللّٰهُ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
24.46. நாம் முஹம்மதின் மீது சந்தேகமற்ற தெளிவான சத்திய வழிக்கு வழிகாட்டும் வசனங்களை இறக்கியுள்ளோம். அல்லாஹ் தான் நாடியோருக்குக் கோணலற்ற நேரான வழியைக் காட்டுகிறான். அந்த வழி சுவனத்தின்பால் கொண்டு சேர்க்கும்.
عربی تفاسیر:
وَیَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ یَتَوَلّٰی فَرِیْقٌ مِّنْهُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ ؕ— وَمَاۤ اُولٰٓىِٕكَ بِالْمُؤْمِنِیْنَ ۟
24.47. நயவஞ்சகர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் அல்லாஹ்வின் மீதும் தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டோம்; அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்பட்டோம்.” பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கிறார்கள். அல்லாஹ்வின் மீதும் தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டு அவர்கள் இருவருக்கும் கட்டுப்பட்டுள்ளோம் என்று அவர்கள் கூறிய பிறகும் அவனுடைய பாதையில் போரிடுதல், ஏனைய விடயங்களில் அவ்விருவருக்கும் கட்டுப்பட மறுக்கிறார்கள். புறக்கணிக்கும் இவர்கள் நிச்சயமாக தங்களை நம்பிக்கையாளர்கள் என்று வாதிட்டாலும் உண்மையில் நம்பிக்கையாளர்கள் இல்லை.
عربی تفاسیر:
وَاِذَا دُعُوْۤا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ لِیَحْكُمَ بَیْنَهُمْ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ ۟
24.48. இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் பக்கமும், அவர்களிடையே பிணங்கிக்கொண்ட விஷயங்களில் தூதர் தீர்ப்பு வழங்குவதற்காக, தூதரின் பக்கமும் அழைக்கப்பட்டால், தமது நயவஞ்சகத்தின் காரணமாக அவருடைய தீர்ப்பை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.
عربی تفاسیر:
وَاِنْ یَّكُنْ لَّهُمُ الْحَقُّ یَاْتُوْۤا اِلَیْهِ مُذْعِنِیْنَ ۟ؕ
24.49. நிச்சயமாக தங்களின் பக்கம் நியாயம் இருப்பதையும், தூதர் நிச்சயமாக தமக்குச் சார்பாகத் தீர்ப்பு சொல்வார் என்பதையும் அறிந்தால் அவருக்குக் கட்டுப்பட்டவர்களாக, பணிந்தவர்களாக அவரிடம் விரைந்தோடி வருகிறார்கள்.
عربی تفاسیر:
اَفِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ یَخَافُوْنَ اَنْ یَّحِیْفَ اللّٰهُ عَلَیْهِمْ وَرَسُوْلُهٗ ؕ— بَلْ اُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟۠
24.50. இவர்களின் உள்ளங்களில் நோய் குடிகொண்டிருக்கிறதா? அல்லது அவர் அல்லாஹ்வின் தூதர் என்பதில் சந்தேகம் கொள்கிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தீர்ப்புக் கூறுவதில் தங்களுக்கு அநியாயம் செய்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்களா? மேற்கூறப்பட்ட எவற்றுக்காகவும் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை. மாறாக அவரது தீர்ப்பை அவர்கள் புறக்கணித்து அதில் பிடிவாதம் கொண்டதனால் ஏற்பட்ட அவர்களின் உள நோயே அதற்குக் காரணமாகும்.
عربی تفاسیر:
اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِیْنَ اِذَا دُعُوْۤا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ لِیَحْكُمَ بَیْنَهُمْ اَنْ یَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا ؕ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
24.51. நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் தங்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்வின் பக்கமும், தூதரின் பக்கமும் அழைக்கப்பட்டால், “நாங்கள் அவரின் வார்த்தையை செவியுற்றோம், அவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தோம்” என்றே கூறுவார்கள். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெறக்கூடியவர்கள்.
عربی تفاسیر:
وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَخْشَ اللّٰهَ وَیَتَّقْهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
24.52. யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு, அவ்விருவரின் தீர்ப்புக்கும் கட்டுப்படுவார்களோ பாவத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவதைப் பயந்து, அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி, அவனுடைய வேதனையை அஞ்சுகிறார்களோ அவர்கள் மாத்திரம்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைப் பெற்று வெற்றி பெறக்கூடியவர்கள்.
عربی تفاسیر:
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ لَىِٕنْ اَمَرْتَهُمْ لَیَخْرُجُنَّ ؕ— قُلْ لَّا تُقْسِمُوْا ۚ— طَاعَةٌ مَّعْرُوْفَةٌ ؕ— اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
24.53. நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் மீது தம்மால் முடிந்தளவு கடும் உறுதியான முறையில் சத்தியமிட்டுக் கூறுகிறார்கள்: “நீங்கள் போருக்காக புறப்படும்படி கட்டளையிட்டால் நிச்சயம் நாங்கள் புறப்படுவோம், என்று.” -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “சத்தியம் செய்யாதீர்கள். உங்களின் பொய்யும், நீங்கள் எண்ணும் கட்டுப்படுதலும் அனைவரும் அறிந்ததுதான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். நீங்கள் எவ்வளவுதான் மறைத்தாலும் நீங்கள் செய்யக்கூடிய எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• تنوّع المخلوقات دليل على قدرة الله.
1. பல்வேறு வகையான படைப்புகள் அல்லாஹ்வின் வல்லமைக்கான ஆதாரமாகும்.

• من صفات المنافقين الإعراض عن حكم الله إلا إن كان الحكم في صالحهم، ومن صفاتهم مرض القلب والشك، وسوء الظن بالله.
2. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருந்தாலே தவிர அல்லாஹ்வின் தீர்ப்பைப் புறக்கணிப்பது நயவஞ்சகர்களின் பண்பாகும். உள்ளத்தின் நோயும் சந்தேகமும் அல்லாஹ்வைப்பற்றி தவறான எண்ணம் கொள்ளுதலும் அவர்களின் பண்புகளாகும்.

• طاعة الله ورسوله والخوف من الله من أسباب الفوز في الدارين.
3. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுதலும், அவனை அஞ்சுதலும் ஈருலகிலும் வெற்றிபெறுவதற்கான காரணிகளில் உள்ளதாகும்.

• الحلف على الكذب سلوك معروف عند المنافقين.
4. பொய்ச்சத்தியம் செய்வது நயவஞ்சகர்களிடம் காணப்படும் பொதுவான நடத்தையாகும்.

 
معانی کا ترجمہ سورت: نور
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں