Check out the new design

Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси * - Таржималар мундарижаси


Маънолар таржимаси Сура: Марям   Оят:
وَاَنْذِرْهُمْ یَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِیَ الْاَمْرُ ۘ— وَهُمْ فِیْ غَفْلَةٍ وَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
19.39. -தூதரே!- மக்கள் வருத்தப்படும் நாளைக்குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக. அந்த நாளில் தீய செயல்கள் செய்தவன் தான் செய்த தீய செயல்களுக்காக வருத்தப்படுவான். நற்செயல்கள் செய்தவன் தான் இன்னும் அதிகமாக வழிப்பட்டு நற்செயல்கள் செய்யவில்லையே என்று வருத்தப்படுவான். அடியார்களின் பதிவேடுகள் அனைத்தும் சுருட்டப்பட்டுவிடும். அவர்களின் கணக்குகள் முடிக்கப்படும். ஒவ்வொருவரும் தான் முற்படுத்திய செயல்களின்பால் சென்றுவிடுவார்கள். அவர்களோ மறுமையின் மீது அலட்சியமாக இருக்கிறார்கள். தங்களின் உலக வாழ்வில் மயங்கியுள்ளார்கள். அவர்கள் மறுமை நாளை நம்புவதில்லை.
Арабча тафсирлар:
اِنَّا نَحْنُ نَرِثُ الْاَرْضَ وَمَنْ عَلَیْهَا وَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟۠
19.40. படைப்புகள் அனைத்தும் அழிந்த பிறகு நிச்சயமாக நாமே நிலைத்திருப்போம். பூமிக்கும் அதிலுள்ளோருக்கும் நாமே உரிமையாளர்களாவோம். ஏனெனில் அவர்கள் அழிந்து விடுவார்கள். அவர்களுக்கு பிறகு நாம் எஞ்சியிருப்போம். அவர்களுக்கு நாமே உரிமையாளர்கள். அவர்களுடைய விடயத்தில் நாம் விரும்பியதைச் செயல்படுத்துவோம். விசாரைணைக்கும், கூலி பெறவும் மறுமை நாளில் அவர்கள் நம்மிடம் மட்டுமே திரும்பிவர வேண்டும்.
Арабча тафсирлар:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِبْرٰهِیْمَ ؕ۬— اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟
19.41. -தூதரே!- உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனில் இப்ராஹீமை பற்றிய செய்தியை நினைவு கூர்வீராக. அவர் உண்மையாளராகவும், அல்லாஹ்வின் சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவராகவும், அல்லாஹ்விடம் இருந்து அனுப்பப்பட்ட நபியாகவும் இருந்தார்.
Арабча тафсирлар:
اِذْ قَالَ لِاَبِیْهِ یٰۤاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا یَسْمَعُ وَلَا یُبْصِرُ وَلَا یُغْنِیْ عَنْكَ شَیْـًٔا ۟
19.42. அவர் தம் தந்தை ஆஸரிடம் கூறினார்: “என் தந்தையே! நீங்கள் அழைத்தால் உங்களின் பிரார்த்தனையைச் செவியேற்க முடியாத, நீங்கள் வணங்கினால் உங்கள் வணக்கத்தைப் பார்க்க முடியாத, உங்களுக்கு நன்மையளிக்கவோ உங்களை விட்டு தீங்கினை அகற்றவோ சக்திபெறாத, அல்லாஹ் அல்லாத சிலைகளை ஏன் வணங்குகிறீர்கள்?
Арабча тафсирлар:
یٰۤاَبَتِ اِنِّیْ قَدْ جَآءَنِیْ مِنَ الْعِلْمِ مَا لَمْ یَاْتِكَ فَاتَّبِعْنِیْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِیًّا ۟
19.43. என் தந்தையே! உங்களிடம் வராத அறிவு நிச்சயமாக வஹியின் மூலம் என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறேன்.
Арабча тафсирлар:
یٰۤاَبَتِ لَا تَعْبُدِ الشَّیْطٰنَ ؕ— اِنَّ الشَّیْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِیًّا ۟
19.44. என் தந்தையே! ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு அவனை வணங்காதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் அளவிலாக் கருணையாளனின் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவனாக இருக்கின்றான். ஆதமுக்கு சிரம் பணியுமாறு அவன் அவனுக்கு ஏவிய போது அவன் சிரம்பணியவில்லை.
Арабча тафсирлар:
یٰۤاَبَتِ اِنِّیْۤ اَخَافُ اَنْ یَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّیْطٰنِ وَلِیًّا ۟
19.45. என் தந்தையே! நிச்சயமாக நீங்கள் நிராகரித்த நிலையிலேயே மரணித்து விட்டால் அளவிலாக் கருணையாளனிடமிருந்து ஏதேனும் வேதனை உங்களைத் தாக்கிவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அப்போது நீங்கள் வேதனையில் ஷைத்தானுடன் நட்பு வைத்ததால் அவனுக்கு தோழனாகி விடுவீர்கள்.
Арабча тафсирлар:
قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِیْ یٰۤاِبْرٰهِیْمُ ۚ— لَىِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِیْ مَلِیًّا ۟
19.46. ஆஸர் தம் மகன் இப்ராஹீமிடம் கூறினார்: “இப்ராஹீமே! நான் வணங்கும் என்னுடைய சிலைகளை நீ புறக்கணிக்கிறாயா? நீ என் சிலைகளைத் திட்டுவதை நிறுத்தவில்லையென்றால் நான் உன்னைக் கல்லால் அடிப்பேன். நீண்ட காலத்திற்கு என்னை விட்டுப் பிரிந்துவிடு. என்னுடன் பேசாதே. என்னுடன் சேரவும் வேண்டாம்”
Арабча тафсирлар:
قَالَ سَلٰمٌ عَلَیْكَ ۚ— سَاَسْتَغْفِرُ لَكَ رَبِّیْ ؕ— اِنَّهٗ كَانَ بِیْ حَفِیًّا ۟
19.47. இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறினார்: “என்னிடமிருந்து உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும். நீங்கள் வெறுக்கக்கூடிய எதுவும் என் மூலம் உங்களுக்கு ஏற்படாது. நான் உங்களுக்காக என் இறைவனிடம் மன்னிப்பையும், நேர்வழியையும் வேண்டுவேன். நிச்சயமாக அவன் என்மீது மிகுந்த பரிவுடையவனாக இருக்கின்றான்.
Арабча тафсирлар:
وَاَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّیْ ۖؗ— عَسٰۤی اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّیْ شَقِیًّا ۟
19.48. நான் உங்களையும் அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களையும் விட்டு பிரிந்துவிடுகிறேன். நான் என் இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்கின்றேன். அவனுக்கு இணையாக எதையும் ஆக்க மாட்டேன். அப்பொழுதுதான் நான் பிரார்த்தித்தால் அவன் மறுக்க மாட்டான். அவ்வாறு மறுத்தால் அவனைப் பிரார்த்திப்பதில் நான் துர்பாக்கியசாலியாகி விடுவேன்.
Арабча тафсирлар:
فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ— وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ— وَكُلًّا جَعَلْنَا نَبِیًّا ۟
19.49. அவர் அந்த மக்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கும் தெய்வங்களையும் விட்டுவிட்ட போது குடும்பத்தை இழந்ததற்கு பகரமாக அவரது மகன் இஸ்ஹாக்கையும் பேரன் யஃகூபையும் நாம் அவருக்கு வழங்கினோம். அவர்கள் இருவரையும் நாம் நபியாக ஆக்கினோம்.
Арабча тафсирлар:
وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِیًّا ۟۠
19.50. நம் அருளால் அவர்களுக்கு தூதுத்துவத்துடன் ஏராளமான நன்மைகளையும் வழங்கினோம். அடியார்களின் நாவுகளில் அவர்களைப் பற்றிய தொடரான நற்புகழையும் ஏற்படுத்தினோம்.
Арабча тафсирлар:
وَاذْكُرْ فِی الْكِتٰبِ مُوْسٰۤی ؗ— اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟
19.51. -தூதரே!- உமக்கு இறக்கப்பட்ட குர்ஆனில் மூஸாவின் செய்தியை குறித்து நினைவுகூர்வீராக. நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
Арабча тафсирлар:
Ушбу саҳифадаги оят фойдаларидан:
• لما كان اعتزال إبراهيم لقومه مشتركًا فيه مع سارة، ناسب أن يذكر هبتهما المشتركة وحفيدهما، ثم جاء ذكر إسماعيل مستقلًّا مع أن الله وهبه إياه قبل إسحاق.
1. இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மனைவி ஸாராவுடன் சேர்ந்து தனது சமுதாயத்தைப் பிரிந்ததனால் அவ்விருவருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட அன்பளிப்பையும் அவர்களது பேரப் பிள்ளையையும் குறிப்பிடுவதே பொருத்தமாகும். அதனால் தான் இஸ்ஹாக் (அலை) அவர்களுக்கு முன் இஸ்மாஈல் (அலை) அவர்களை நிச்சயமாக அல்லாஹ் அன்பளிப்பாக வழங்கியிருந்தும் அவரைப் பற்றி தனியாக பின்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

• التأدب واللطف والرفق في محاورة الوالدين واختيار أفضل الأسماء في مناداتهما.
2. பெற்றோருடன் உரையாடும் போது ஒழுக்கம், மிருதுவான தன்மை, மென்மை ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். அவர்களை அழைக்க அழகிய பெயர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

• المعاصي تمنع العبد من رحمة الله، وتغلق عليه أبوابها، كما أن الطاعة أكبر الأسباب لنيل رحمته.
3. பாவங்கள் அல்லாஹ்வின் அருளை விட்டும் அடியானைத் தடுக்கின்றன. அதன் வாயில்களை அவனுக்கு அடைத்து விடுகின்றன. அதே வேளை நிச்சயமாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது அவனுடைய அருளைப் பெறுவதற்கான மிகப்பெரிய காரணியாக இருக்கின்றது.

• وعد الله كل محسن أن ينشر له ثناءً صادقًا بحسب إحسانه، وإبراهيم عليه السلام وذريته من أئمة المحسنين.
4. நன்மைசெய்யும் ஒவ்வொருவருக்கும் அவருடைய உபகாரத்திற்கேற்ப நற்பெயரை ஏற்படுத்துவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். இப்ராஹீம் (அலை) அவர்களும் அவரது சந்ததியினரும் உபகாரிகளின் தலைவர்களாவர்.

 
Маънолар таржимаси Сура: Марям
Суралар мундарижаси Бет рақами
 
Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси - Таржималар мундарижаси

Тафсир маркази томонидан нашр этилган.

Ёпиш