Check out the new design

Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси * - Таржималар мундарижаси


Маънолар таржимаси Оят: (42) Сура: Анфол
اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْیَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰی وَالرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْ ؕ— وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِی الْمِیْعٰدِ ۙ— وَلٰكِنْ لِّیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۙ۬— لِّیَهْلِكَ مَنْ هَلَكَ عَنْ بَیِّنَةٍ وَّیَحْیٰی مَنْ حَیَّ عَنْ بَیِّنَةٍ ؕ— وَاِنَّ اللّٰهَ لَسَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ
8.42. நீங்கள் மதீனாவிற்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கிலும், இணைவைப்பாளர்கள் மக்கா பகுதியிலுள்ள மதீனாவை விட்டும் தூரமான பள்ளத்தாக்கிலும், வியாபாரக் குழு செங்கடலுக்கு அருகில் நீங்கள் இருக்கும் இடத்தைவிட தாழ்வான இடத்திலும் இருந்ததை நினைவு கூறுங்கள். நீங்களும் இணைவைப்பாளர்களும் பத்ரில் சந்திப்பதற்கு நேரம் குறித்திருந்தால் ஒருவருக்கொருவர் முரண்பட்டிருப்பீர்கள். ஆனால் அல்லாஹ் நேரம் குறிக்காமலே அங்கு உங்களை ஒன்று சேர்த்தான். இது, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்து நிராகரிப்பாளர்களைக் கைவிட்டு விடுவதற்காகவும், தன் மார்க்கத்தை மேலோங்கச் செய்து ஷிர்க்கை இழிவுபடுத்தி தான் விரும்பும் விஷயத்தை நிகழ்த்துவதற்காகவேயாகும். இது, நம்பிக்கையாளர்கள் ஆள் மற்றும் ஆயுத பலத்திலும் குறைவாக இருந்தும் தம்மை வென்றுவிட்டதன் மூலம் தெளிவான ஆதாரம் நிரூபனமான பின் நிராகரிப்பாளர்களில் அழிந்தோர் அழிந்துவிட வேண்டும் என்பதற்காகவும் உயிர்வாழ்பவர்கள் அல்லாஹ் அவர்களுக்கு வெளிப்படுத்திய தெளிவான ஆதாரத்துடன் உயிர்வாழ வேண்டும் என்பதற்காகவும்தான். எனவே அல்லாஹ்விடம் வாதிட ஒருவருக்கும் ஆதாரம் எஞ்சியிருக்காது. அனைவரின் பேச்சையும் அல்லாஹ் செவியேற்கிறான். அவர்களின் செயல்களைக் குறித்து அவன் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Арабча тафсирлар:
Ушбу саҳифадаги оят фойдаларидан:
• الغنائم لله يجعلها حيث شاء بالكيفية التي يريد، فليس لأحد شأن في ذلك.
1. போர்ச் செல்வங்கள் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியவாறு அவன் அதனைப் பங்கிடுகிறான். இதில் வேறு எவருக்கும் உரிமை இல்லை.

• من أسباب النصر تدبير الله للمؤمنين بما يعينهم على النصر، والصبر والثبات والإكثار من ذكر الله.
2. நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியை வழங்குபவற்றை அவர்களுக்காக அல்லாஹ் திட்டமிடுவதும், பொறுமை, உறுதி, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறல் ஆகியவை வெற்றிக்கான காரணிகளில் உள்ளவையாகும்.

• قضاء الله نافذ وحكمته بالغة وهي الخير لعباد الله وللأمة كلها.
3. அல்லாஹ்வின் தீர்ப்பே நடந்தேறும். அவனது ஞானம் ஆழமானது. அதுவே அவனது அடியார்களுக்கும் முழு சமூகத்துக்கும் நலவாகும்.

 
Маънолар таржимаси Оят: (42) Сура: Анфол
Суралар мундарижаси Бет рақами
 
Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси - Таржималар мундарижаси

Тафсир маркази томонидан нашр этилган.

Ёпиш