Қуръони Карим маъноларининг таржимаси - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Таржималар мундарижаси


Маънолар таржимаси Оят: (14) Сура: Тавба сураси
قَاتِلُوْهُمْ یُعَذِّبْهُمُ اللّٰهُ بِاَیْدِیْكُمْ وَیُخْزِهِمْ وَیَنْصُرْكُمْ عَلَیْهِمْ وَیَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِیْنَ ۟ۙ
9.14. -நம்பிக்கையாளர்களே!- இந்த இணைவைப்பாளர்களுடன் போரிடுங்கள். நீங்கள் அவர்களுடன் போரிட்டால் உங்கள் கைகளால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். நீங்கள் அவர்களைக் கொல்வதன் மூலம் அது நிகழும். அவர்களைத் தோல்வியுறச் செய்து கைதிகளாக்கி இழிவுபடுத்துவான். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு வெற்றியை அளிப்பான். இதன் மூலம் யுத்தத்தில் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையாளர்களை வெற்றிபெற வைத்து, எதிரிகளுக்கு தோல்வியை கொடுத்து, அவர்களை சிறைபிடித்து போரில் கலந்து கொள்ளாத நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் உள்ள நோயை குணப்படுத்துவான்.
Арабча тафсирлар:
Ушбу саҳифадаги оят фойдаларидан:
• في الآيات دلالة على محبة الله لعباده المؤمنين واعتنائه بأحوالهم، حتى إنه جعل من جملة المقاصد الشرعية شفاء ما في صدورهم وذهاب غيظهم.
1. அல்லாஹ் நம்பிக்கை கொண்ட தன் அடியார்கள் மீது கொண்ட அன்புக்கும், அவர்களின் நிலமைகளில் காட்டும் கரிசனத்துக்கும் இவ்வசனங்கள் ஆதாரமாகும். அதனால்தான் அவர்களின் உள்ளங்களில் உள்ள ஆத்திரம் ஆறுவதையும் கோபம் நீங்குவதையும் அவன் ஷரீஅத்தின் நோக்கங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளான்.

• شرع الله الجهاد ليحصل به هذا المقصود الأعظم، وهو أن يتميز الصادقون الذين لا يتحيزون إلا لدين الله من الكاذبين الذين يزعمون الإيمان.
2. அல்லாஹ்வின் மார்க்கத்தையே சார்ந்திருக்கும் உண்மையாளர்களையும் பொய்யாக நம்பிக்கைகொண்டதாக வாதிடுவோரையும் வேறுபடுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவே அல்லாஹ் ஜிஹாதைக் கடமையாக்கியுள்ளான்.

• عُمَّار المساجد الحقيقيون هم من وُصِفوا بالإيمان الصادق، وبالقيام بالأعمال الصالحة التي أُمُّها الصلاة والزكاة، وبخشية الله التي هي أصل كل خير.
3. உண்மையாகவே நம்பிக்கை, தொழுகை, ஸகாத் போன்ற பிரதான நற்செயல்கள் புரிதல், அனைத்து நலவுகளின் அடிப்படையான இறை அச்சம் ஆகியவற்றைப் பண்பாகப் பெற்றவர்களே உண்மையில் இறையில்லங்களைப் பராமரிப்போராவர்.

• الجهاد والإيمان بالله أفضل من سقاية الحاج وعمارة المسجد الحرام بدرجات كثيرة؛ لأن الإيمان أصل الدين، وأما الجهاد في سبيل الله فهو ذروة سنام الدين.
4. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுதலும், ஜிஹாதும் ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுதல், மற்றும் மஸ்ஜிதுல் ஹராமைப் பராமரிப்பதை விடவும் பல மடங்கு சிறந்ததாகும். ஏனெனில் ஈமான் மார்க்கத்தின் அடிப்படையாகும். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வது மார்க்கத்தின் உச்சியாகும்.

 
Маънолар таржимаси Оят: (14) Сура: Тавба сураси
Суралар мундарижаси Бет рақами
 
Қуръони Карим маъноларининг таржимаси - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Таржималар мундарижаси

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Ёпиш